உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஏ பிளஸ் ரவுடிக்கு காங்.,கில் மாநில பதவி

 ஏ பிளஸ் ரவுடிக்கு காங்.,கில் மாநில பதவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை சேர்ந்த, 'ஏ' பிளஸ் ரவுடி தினேஷை, காங்கிரஸ் ஆர்.டி.ஐ., பிரிவு துணை தலைவராக நியமித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தின் பிரபல ரவுடி ஸ்ரீதர், கடந்த 2016ல், கம்போடியாவில் போலீசார் தன்னை கைது செய்ய நெருங்கியதை அறிந்து, தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீதர் மறைவுக்குப் பின், அவரிடம் ஓட்டுனராக இருந்த தினேஷ் ஒரு குழுவாகவும், ஸ்ரீதரின் மைத்துனர் தணிகா ஒரு குழுவாகவும் செயல்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cn8zxkcs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இரு பிரிவும் அடிக்கடி மோதியதால், கொலை சம்பவங்கள் நடந்தன. ரவுடி தினேஷ் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், பணம் பறித்தல் என, 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. காஞ்சிபுரத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும், 'ஏ' பிளஸ் ரவுடியாகவும் உள்ள தினேஷை போலீசார் கைது செய்து, கோவை, சேலம் உள்ளிட்ட சிறைகளிலும் அடைத்தனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆர்.டி.ஐ., பிரிவின் மாநில துணை தலைவராக தினேஷ் நியமிக்கப்பட்டு உள்ளார். தனக்கு பதவி அளித்ததற்காக, காங்கிரஸ் மாநில ஆர்.டி.ஐ., பிரிவு தலைவர் கனகராஜூக்கு நன்றி தெரிவித்து, காஞ்சிபுரத்தில் போஸ்டர்களை தினேஷ் ஒட்டியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏ பிளஸ் என்றால் என்ன?

போலீஸ் நிலை ஆணைகளின்படி ரவுடிகள் ஏ பிளஸ், ஏ, பி, சி என வகைப்படுத்தப்படுகின்றனர். இதில் ஏ பிளஸ் என்பது மிகவும் அபாயகரமான ரவுடிகளை குறிக்கக்கூடியது. குற்றங்களை திட்டம் தீட்டி செயல்படுத்துபவர்கள், குற்றவாளிகளுக்கு தலைவனாக செயல்படுபவர்கள் தான் இந்தப் பட்டியலில் வைக்கப்படுவர். இவர்கள் மீது பிரத்யேக கண்காணிப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்பது காலம் காலமாக பின்பற்றப்படும் போலீஸ் நிலை ஆணையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Raman Rangarajan
ஜூன் 12, 2026 10:48

ஏன் சார், லக்னோ கோர்ட் இந்திரா காந்தியை கிரிமினல்ன்னு சொன்னாங்க ..ஆனா அந்த அம்மா பிரதம மந்த்ரி ..சஞ்சய் காந்தி நம்பர் one .. ராகுல் காந்தி தினம் பிரைம் மினிஸ்டரயை மாதிரி திட்டுறாரு ..அப்படி இருக்க இவரு இந்த ரவுடி காஞ்சிபுரம் காங்கிரஸ் தலைவர் ஆனால் என்ன தப்பு


Yes your honor
ஜூன் 12, 2026 09:38

ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.


Chandhra Mouleeswaran MK
ஜூன் 12, 2026 08:12

அந்த மோத்திலால் காலத்தில் இருந்தே காங்கிரஸ் கமிஷன் களவாணிக் கலப்படக் கட்சியின் பெருமபலான "தல்ல்லீவருகள்" களவாணிப் பயல்கள்தானே? "சேரிடம் அறிந்து சேர்" என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்? "கழுதை கெட்டால் குட்டிச் சுவர் களவாணி கெட்டால் காங்கிரஸ்"


rama adhavan
ஜூன் 12, 2026 04:34

தாயைப் போல பிள்ளை, தலைவரைப் போல மாநில நிர்வாகி.


Kasimani Baskaran
ஜூன் 12, 2026 03:59

தலைவர் கூட சவுக்கர் வீட்டில் திராவிடம் ஊற்றிய பெரிய கிரிமினல்தான்.


sankaranarayanan
ஜூன் 12, 2026 01:09

இது ஒன்றும் காங்கிரசுக்கு புதிது அல்ல தலைவரை போன்று தொண்டர்களும் அமைப்பார்கள் யாரும் கேட்க முடியாது


Nandakumar Naidu
ஜூன் 12, 2026 01:05

போலீசா காமெடி பீசா? 40 வழக்குகள் இருக்கும் ஒருவனை ஏன் சிறையில் அடைத்து மக்களின் வரிப்பணத்தில் அவனுக்கு ராஜ மரியாதை செய்ய வேண்டும்? என்கவுண்டரில் போட்டு தள்ளி இருக்க வேண்டாமா? காங்கிரஸ் ஒரு தேச, சமூக, ஹிந்து மற்றும் மக்கள் விரோத கட்சி, இது போன்ற சமூக விரோதிகள் தான் அதுக்கு தேவை.


வாய்மையே வெல்லும்
ஜூன் 11, 2026 23:21

தம்பி விசிலடிச்சான் விஜய்.. எதற்கும் சூதனமாக ராவுளிடம் தள்ளியே நிற்கவும் . ரொம்ப குழைஞ்சு பேசினா ஏழரை கண்டிப்பாக வரும்


ஊர்குருவி
ஜூன் 11, 2026 22:58

40க்கும் மேற்பட்ட வழக்குகள் ஆனால் தண்டனை ஏதுமில்லை .படிப்பதற்கு வேடிக்கையாக உள்ளது .சட்டம் கடமையை செய்யவில்லையா அல்லது சதம் அடிக்கணும்னு காத்திருப்பா ?


ஆரூர் ரங்
ஜூன் 11, 2026 22:29

பொருத்தமான ஆளுக்கு பொருத்தமான கட்சியில் பொறுப்பு. சரிதானே?..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை