உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர்கள் கோகைன் நெட் ஒர்க் என்.சி.பி., விசாரணை

நடிகர்கள் கோகைன் நெட் ஒர்க் என்.சி.பி., விசாரணை

சென்னை: நடிகர், நடிகையர் பயன்படுத்திய, கோகைன் போதைப் பொருள் 'நெட் ஒர்க்' குறித்து, என்.சி.பி., எனப்படும், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் விசாரணையை துவக்கி உள்ளனர்.போதைப் பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை தொடர்பாக, அ.தி.மு.க., தொழில் நுட்பப் பிரிவு முன்னாள் நிர்வாகி பிரசாத், நடிகர்கள், ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு கோகைன் சப்ளை செய்த, சேலம் மாவட்டம், சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார், சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த கெவினும் கைதாகி உள்ளனர். இவர்கள், நடிகர், நடிகையருக்கு, கோகைன் 'சப்ளை' செய்து வந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, என்.சி.பி., எனப்படும், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும், விசாரணையை துவக்கி உள்ளனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது:

கானா நாட்டை சேர்ந்த ஜான், பிரதீப்குமார் ஆகியோர், கர்நாடக மாநிலம் பெங்களூரில் மென்பொருள் நிறுவன ஊழியர்கள் போல் தங்கி, கோகைன் சப்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். கானா நாட்டை சேர்ந்த ஜான் பின்னணியில் இருக்கும், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் குறித்தும், ஜானின் கூட்டாளிகள், வேறு எந்த மாநிலத்தில் பதுங்கி உள்ளனர் என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். அதேபோல், கெவின் மற்றும் பிரசாத் வாடிக்கையாளர்கள் பட்டியலில், நடிகர், நடிகையர் உள்ளனர். அவர்கள் பயன்பாட்டிற்கு மட்டுமே கோகைன் வாங்கினரா அல்லது விற்பனைக்கா என்றும் விசாரணை நடக்கிறது.கோகைன் பின்னணியில், இலங்கையை சேர்ந்த வர்கள் இருப்பதற்கான தகவல்கள் கிடைத்து உள்ளன. அவர்களும், தமிழ் திரையுலகத்தினரிடம் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Padmasridharan
ஜூலை 02, 2025 08:02

ஹேமா கமிட்டினு ஒண்ணு இப்படித்தான் ஆரம்பிச்சாங்க, சரியா தொடராம விடப்போறாங்களாம்.. இதுவும் அதே மாதிரியா. குடி குடியை கெடுக்கும்னு திரையில் காமிச்சிக்கிட்டே குடிப்பாங்க, அவங்களுக்குனு ஒரு பாட்டு மக்களை அதுக்குள்ள இழுக்க. அரசு மதுவுக்கு அடுத்த படிக்கு போயிட்டாங்க இப்ப இவங்க.


ram
ஜூலை 01, 2025 11:19

NCB என்ற அமைப்பு இங்கு இருக்குதா, வித்தவனுக்கு பிணை கொடுத்து அனுப்பிவிட்டாச்சு அப்புறம் எப்படி சந்தைக்கு வராமல் இருக்கும். இதுவே அரபு நாடுகள் என்றால் பிடிபடும் நபர்கள் பரலோகம் அனுப்பி விடுவார்கள். இங்குதான் இவர்களுக்கு A கிளாஸ் சிறை. இப்படியே போனால் இங்கு பெட்டி கடைகளையும் இதுபோல பொருட்கள் கிடைக்கும்.


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 01, 2025 09:39

கானா நாட்டில் இருந்து வந்தது அல்லது கானா நாட்டை சேர்ந்தவருக்கு தொடர்பு என்றால் இங்கு ஒன்றிய அரசின் தோல்வி என்பதே சரியான புரிதல் அல்லது ஒன்றியத்தின் பங்கும் இருக்கு இன்றே புரிந்துகொள்ளவேண்டும் ....


Mettai* Tamil
ஜூலை 01, 2025 10:59

உலக மகா ஊழல்காரன், உலக மகாபோதைக்காரன், இந்துமத விரோதிங்க எல்லாம் தமிழ்நாட்டில் தான் அதிகம் புழக்கத்தில் இருக்காங்க ..நம்ம பங்கு வோட பெரும் பங்கும் இருக்கு என்றே நீங்களும் புரிந்துகொள்ளவேண்டும் ....


N Sasikumar Yadhav
ஜூலை 01, 2025 09:18

சீன்ன தத்தி சிக்கி சிறையில் அடைக்க வாய்ப்பு கிடைக்குமா வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்க வேண்டியது கடமை


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூலை 01, 2025 07:40

எங்க உதய் அண்ணன் சொக்க தங்கம்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 01, 2025 06:36

காவல்துறை என் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும்..... ~ஸ்டாலின்


சமீபத்திய செய்தி