பத்திர பதிவுக்கு இன்று கூடுதல் டோக்கன்
சென்னை: வைகாசி மாத முகூர்த்த நாளான இன்று, சார் பதிவாளர் அலுவலகங்களில், அதிக எண்ணிக்கையில் பத்திரங்கள் தாக்கலாக வாய்ப்புள்ளது. எனவே, தினசரி, 100 டோக்கன் அனு மதிக்கப்படும் அலுவலகங்களில், இன்று, 150 டோக்கன்கள்; வழக்கமாக, 200 டோக்கன்கள் அனுமதிக்கப்படும் அலுவலகங்களில், 300 டோக்கன்கள் அனு மதிக்கப்படும் என, பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.