உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகளிருக்கு மாதம் ரூ.2000; ஆண்களுக்கும் இலவச பஸ்: தேர்தல் வாக்குறுதி அளித்தார் இபிஎஸ்

மகளிருக்கு மாதம் ரூ.2000; ஆண்களுக்கும் இலவச பஸ்: தேர்தல் வாக்குறுதி அளித்தார் இபிஎஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும்; ஆண்களுக்கு கட்டணம் இல்லாத டவுன் பஸ் பயண வசதி செய்யப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளார்.இந்தாண்டில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, எம்ஜிஆரின் 109வது பிறந்த நாளான இன்று, முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இபிஎஸ் வெளியிட்டார்.அவர் அறிவித்ததாவது; 1. மகளிர் குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும். குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.2. டவுன் பஸ்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் கட்டணமில்லாத பஸ் பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பெண்களுக்கான கட்டணமில்லா பஸ் பயணத்திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.3. அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். நகரப்பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி இலவசமாக அடுக்குமாடி வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.4. 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.5. ரூ.25,000 மானியத்துடன், 5 லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும். இவ்வாறு அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 103 )

S.V.Srinivasan
ஜன 21, 2026 10:50

மகளிர்க்கு, ஆண்களுக்கு இலவச பஸ். ஆனா அவங்களோட குழந்தைகளுக்கு டபுள் தி அமௌண்டு. இது எப்படி இருக்கு எடப்ஸ்


P SEKAR
ஜன 18, 2026 11:47

தேவையில்லாத ஆணி


Gajageswari
ஜன 18, 2026 05:32

நாடு பாசமாக போகும்


Matt P
ஜன 17, 2026 23:33

வாக்குகள் உறுதியானவைகள் தான். நாம் தான் கொடுத்த வாக்குகளில் உறுதியாக இருப்பது இல்லை. அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆண்களுக்கும் இலவச பேருந்துகள். ஓட்டை ஒடிசல் பேருந்துகளில் இனிமேல் குடும்பமாக குதூகலாக நகர பகுதிகளில் பயணம் செய்யலாம். மக்களை கவரணும்னா இப்படி தான் இலவச அறிவிப்புகள். மக்கள் அப்படி. உன்னை சொல்லி குற்றமில்லை. காலம் செய்த கோலம். எம்ஜிஆர் இருந்தால் எந்த இலவசமும் தேவை இல்லை. அவர் அழகை ஒரு தடவை பார்த்தாலே போதும். வசீகரமான மேக் உப்பு முகம், தொப்பி ,கருப்பு கண்ணாடி ,துறுதுறுத்த முகம் எல்லாம் சேர்ந்த முக கவர்ச்சி ...


Bala
ஜன 17, 2026 23:17

Ungalal thaana intha nadu nasama poguthu


கு.ரா.பிரேம் குமார்
ஜன 17, 2026 21:54

அரசு பணத்திலிருந்து இலவசங்களாக தி.மு.க. ஐந்து ஆண்டுகளாக வாரி வழங்கி வருவதை போல் தாங்களும் ஆட்சிக்கு வந்தால் அரசு கஜானாவை காலி செய்யும் இலவசங்களை வழங்குவோம் என (நேரடியாக சொல்லாமல்) பழனிச்சாமி அறிவித்தது அணைவரும் எதிர்பார்த்தது தான். தங்கள் மேல் தான் கடன் சுமை ஏறி வருகிறது என்ற உண்மையை அலட்சியபடுத்தி விட்டு தமிழக மக்களும் இவைகளை அனுபவித்து கொண்டே வருகிறார்கள். புலி வாலை பிடித்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் இருப்பதால் இலவசங்கள் இல்லாமல் மக்களை தேர்தலில் வோட்டு போடுமாறு கேட்க முடியாத நிலை வந்து விட்டது. எத்தனை தேர்தல் வந்தாலும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஓட்டுக்காக- ஆட்சிக்காக இது நிறுத்தப்பட முடியாத திட்டமாக மாறி விட்டது. நீதிமன்றங்கள் ஒரு வழிகாட்டும் முறையை அறிவித்து அதை தேர்தல் ஆணையம் மூலமாக நிறை வேற்ற முன்வர வேண்டும்.


Chandru
ஜன 17, 2026 21:37

If it is free the people of TN esp ladies will drink even phenyl. I see ladies, both educated and uneducated skipping deluxe buses and waiting for free buses occupying seats on both the sides. DMK has made even the Governments of Karnataka and AP to make bus travel free . Any right thinking man will strongly condemn a party like dmk for their vested interests which is against the Development of a State


kulanthai kannan
ஜன 17, 2026 21:36

மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று புலம்பவே மாட்டேன் என்று ஆறாவது உறுதிமொழியையும் கொடுங்கள் ஈபிஎஸ் அவர்களே!!


M Ramachandran
ஜன 17, 2026 20:39

இலவச பஸ் ஒன்றும் கொடுக்கா வேண்டாம். முதலில் அம்மையார் ஒரு நாள் சுற்றுலா டிக்கெட் கொடுத்தால் முதியோருக்கு செல்ல வேண்டிய இடத்திற்கு நேரிடியான பஸ் இல்லாத நேரத்தில் மாறி செல்ல உதவும். முக்கியமாக முக்கிய நெடுஞ்சாலை களிலும் முக்கிய வழி தடங்களிலும் மதியம் சாப்பாட்டு நேரத்திலும் பேருந்துகள் ஓடுகின்றன. ஆனால் இணைப்பு மற்றும் உட்புற நகர் சாலைய்யகளில் மதியம் 12:00 முப்பதுமுதல் 3:00 மணி வரை பேருந்துகள் இயக்க படுவதில்லை.


Ramesh Sargam
ஜன 17, 2026 20:24

இன்று இந்தியாவில் இருக்கும் பல கட்சிகளும் மக்களுக்கு இலவசங்களை கொடுத்துத்தான் வாக்கு பெற முயல்கிறார்கள் தவிர, நாங்கள் ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை கொடுப்போம் என்று கூறி வாக்கு கேற்பதில்லை. ஏன் என்றால், அவர்களால் ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை கொடுக்கவே முடியாது.


சமீபத்திய செய்தி