உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எதெல்லாம் தடை செய்யப்பட்ட நிலம்: சர்வே எண்களை வெளியிட பதிவுத்துறை திட்டம்

எதெல்லாம் தடை செய்யப்பட்ட நிலம்: சர்வே எண்களை வெளியிட பதிவுத்துறை திட்டம்

சென்னை: நீர் நிலை, கோயில் போன்ற தடை செய்யப்பட்ட நிலங்களின், 'சர்வே' எண் விபரங்களை, அந்தந்த சார் பதிவாளர் அலுவலகங்களில் வெளியிடுவதற்கான வழிமுறைகளை, பதிவுத் துறை ஆராய்ந்து வருகிறது.தமிழகத்தில் நீர் நிலைகள், கோவில் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய தடை உள்ளது. எந்தெந்த சர்வே எண்களுக்கு உட்பட்ட நிலங்களுக்கு, இத்தடை பொருந்தும் என்ற விபரங்கள் வெளிப்படையாக இல்லை. இதனால், பொது மக்கள் போதிய விழிப்புணர்வு இன்றி, நீர் நிலை ஆக்கிரமிப்பு நிலங்களையும், கோயில் நிலங்களையும் வாங்கி ஏமாறுகின்றனர்.இது குறித்த விபரங்கள், வருவாய் துறையில் இருந்து பதிவுத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்தந்த சார் பதிவாளரிடம் இந்த விபரங்கள் இருந்தாலும், பணிப்பளு காரணமாக, பொது மக்களுக்கு தகவல் தெரிவிப்பது இல்லை. இதனால், வீடு, மனைகளை வாங்கும் மக்கள், பிற்காலத்தில் சொத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.இதுகுறித்து, ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:சென்னை, பள்ளிக்கரணையில் சதுப்பு நிலம் மற்றும் நீர் நிலை வகைப்பாட்டில் வரும் நிலங்களின் சர்வே எண்கள், சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டன. நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், இந்த குறிப்பிட்ட அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு செல்லும் மக்கள், தடை செய்யப்பட்ட சர்வே எண்கள் குறித்த விபரங்களை எளிதாக அறிய முடிகிறது. ஆனால், பிற பகுதிகளில் இதுபோன்ற நடவடிக்கைகள் இல்லை.ஒவ்வொரு சார் பதிவாளர் அலுவலகத்திலும், அதன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட நிலங்களின் சர்வே எண் விபரங்களை வெளியிட வேண்டும். அப்போதுதான் பொது மக்கள், நீர் நிலைகள், கோயில் நிலங்களை வாங்குவதை தவிர்ப்பர். இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவுப்படி, குறிப்பிட்ட சில சார் பதிவாளர் அலுவலகங்களில் மட்டும், தடை செய்யப்பட்ட நிலங்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்படுகின்றன. அனைத்து அலுவலகங்களிலும், இந்த நடைமுறையை விரிவாக்கம் செய்ய, கோரிக்கைகள் வந்துள்ளன.இந்த விஷயத்தில், அந்தந்த சார் பதிவாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்கலாம். வருவாய்த் துறையிடம் இருந்து, சரியான விபரங்களை பெற்று வெளியிடுவதால், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Rekha Kesavalu
ஏப் 12, 2025 23:38

2003 வருடம் மோசூர் அரக்கோணம் இடம் வாங்கினேன் நான் மட்டும் இல்ல எங்க தெருவில் நிறைய பேர் வாங்கினோம் இப்ப அந்த இடம் தாழ்தப்பட்டவர்கள் இடம் சொல்றாங்க கஷ்டப்பட்டு வாங்கினேன் அங்கீகாரம் பெற்ற இடம் பட்டா இருக்கு விக்க முடியல நாங்க தாழ்தபட்டவங்க இல்ல அதனால செல்லாது என்ன அரசாங்கம் என்ன நியாயம் நாங்க வாங்க போது ரிஜிஸ்டர் ஆபீஸ்ல வில்லங்கம் போட்டு பாத்து வாங்கினேன் இப்பவும் எங்க பேர்ல இருக்கு விக்கமுடியல


Babu reddy R
ஏப் 11, 2025 10:49

Super


Babu reddy R
ஏப் 11, 2025 10:49

சூப்பர்


Esaki Durai
ஏப் 10, 2025 20:23

நானும் ஒரு இடம் வாங்கினேன்.ஆனால் தற்போது கோவில் நிலம் என்று சொல்லி விட்டார்கள். கடன் வாங்கி நிலம் வாங்கினேன்.என் பணம் போச்சு .மக்களே கவனமாக இருங்கள்.


Ethiraj
ஏப் 10, 2025 09:13

It must be available in govt website. All E seva centers can give the data at a nominal fees


ஆரூர் ரங்
ஏப் 09, 2025 14:36

நிலத்தைப் பயன்படுத்தும் மக்களுக்கு தகவல் அளிக்காமல் தடை செய்வது எந்த வகையான நிர்வாகம்? வக்ஃபு வாரிய தகவலை வைத்து நிலங்களை பரிமாற்றம் செய்வதை அநியாயமாக நிறுத்திய விவரத்தை அந்நில உரிமையாளர்களுக்கு தெரிவிக்காமல் விட்டது ஏன்?


M S RAGHUNATHAN
ஏப் 09, 2025 12:09

The High Court has repeatedly voiced this. But as usual the state government put it in the dust bin. Reason well known. The Government itself is the biggest encroacher of temple lands and water bodies.


Saleemabdulsathar
ஏப் 09, 2025 11:31

ஆக்கிரமிப்பு இடங்களுக்கு உதாரனமாக நீர் நிலைகளை ஆக்கிமித்து கட்டப்பட்ட வீடுகள் மற்றும் இதர கட்டிடங்களுக்கு குடி நீர் வசதி மின் இணைப்பு மற்றும் இதர அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்க கூடாது


Joe Rathinam
ஏப் 09, 2025 09:21

தமிழகத்தில் நீர் நிலைகள், கோவில் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய தடை இருக்கும்போது அரசு ஏன் அடிப்படை வசதிகளைமின்சாரம், குடிநீர், நிலத்தடி கழிவுநீர் அகற்றும், சாலை வழங்குகிறது அதுவும் சொத்து வரி விதிப்பு இல்லாமல்.


Anjankumar Raghavan
ஏப் 09, 2025 09:06

அரசு அலுவலக குறிப்பாக பதிவுத்துறை அறிவிப்புப் பலகைகளில் ஒட்டப்படும் அறிவிக்கைகள் ஓரிரு மாதம்தான் இருக்கும். அதற்கு மேலேயே இன்னொரு அறிவிக்கையை ஒட்டியோ, போவோர் வருவோர் கிழித்தோ, இவை தொடர்ந்து மக்கள் பார்வையில் இருப்பதில்லை. மேலும், ஊழல் காரணமாக சில அலுவலகங்களில் ஒட்ட மாட்டார்கள். சமூக விரோதிகள் சேதப்படுத்துவதும் உண்டு. வில்லங்க சான்றிதழ் போல இந்த அறிவிக்கைகளை அதற்கென உருவாக்கிய பகுதியில், tnreginet தளத்திலேயே வெளியிடவேண்டும். அப்போதுதான், எந்தவித ஊழலுக்கும் இடமிருக்காது, சமூக விரோதிகளுக்கும் வாய்ப்பிருக்காது. பிழையும் வராது.


சமீபத்திய செய்தி