உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க., தலைவர் ராமதாசிடம் அன்பு மணி மன்னிப்பு கேட்டார்: பலப்பரீட்சையின் மறுபக்கம் சமரச முயற்சி

பா.ம.க., தலைவர் ராமதாசிடம் அன்பு மணி மன்னிப்பு கேட்டார்: பலப்பரீட்சையின் மறுபக்கம் சமரச முயற்சி

சென்னை: ''நான் தவறு செய்திருந்தால், என்னை மன்னித்து விடுங்கள்,'' என்று பா.ம.க., நிறுவனர் ராமதாசிடம் ஒரு கூட்டத்தின் வாயிலாக மன்னிப்பு கேட்டார் அவரது மகன் அன்புமணி. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u2qq33jq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ராமதாசின் முயற்சிகளை முறியடித்து, கட்சியின் தலைவர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக, மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் நிலையில், சமரச முயற்சியாக, இந்த வேண்டுகோளையும் விடுத்துள்ளார். பா.ம.க., சார்பில், ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம், மணவாள நகரில் நேற்று நடந்தது.

பத்து உரிமைகள்

திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, மதுரவாயல், ஆவடி, அம்பத்துார், கும்மிடிப்பூண்டி, மாதவரம், பொன்னேரி, திருவொற்றியூர் சட்டசபை தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதில், அன்புமணி பேசியதாவது:

பா.ம.க., சமூக நீதிக்காக துவக்கப்பட்டது. நம்மை ராமதாஸ் வழி நடத்திக் கொண்டிருக்கிறார். நாம் இன்னும் வெகுதுாரம் செல்ல வேண்டும். தமிழகம் முழுதும் நடை பயணம் செல்ல உள்ளேன். ராமதாஸ் பிறந்த நாளில் பயணத்தை துவக்க இருக்கிறேன். தமிழக மக்களின் உரிமைகளை மீட்பதற்கான பயணம் அது. 10 உரிமைகளை முன் வைத்து நடைபயணம் செல்கிறேன். தி.மு.க., ஆட்சியின் முடிவுக்கு, 'கவுன்ட் டவுன்' துவங்கி விட்டது.

அழிப்பது ஏன்?

திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவுசார் நகரம் கட்ட உள்ளனர். முப்போகம் விளையும் மண்ணை பிடுங்கி, அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்க உள்ளனர்.அந்த மையத்தை, தரிசு நிலம் அதிகம் உள்ள ராமநாதபுரத்தில் அல்லது திருவண்ணாமலையில் கட்டலாம். அதை விட்டுவிட்டு, விவசாய நிலங்களை அழிப்பது ஏன்? தமிழக அரசுக்கு மணல் குவாரிகள் வாயிலாக, ஆண்டுக்கு 27 கோடி ரூபாய் வருவதாக கணக்கு காட்டுகின்றனர். ஒரு குவாரியில், நான்கு நாட்களில், 27 கோடி ரூபாய் வந்து விடும். அமலாக்கத்துறை விசாரணையில், ஆறே மாதத்தில், 4,800 கோடி ரூபாய் ஊழல் என்று தெரிவித்தனர்.மொத்தமாக பார்க்கும் போது, 60,000 கோடி ரூபாய் வரை மணல் குவாரிகளில் ஊழல் நடக்கிறது. முதல்வரால் காவல் துறையை கவனிக்க முடிய வில்லை என்றால், வேறு யாரிடமாவது கொடுக்கலாம். ராணிப்பேட்டையில் பா.ம.க., முக்கிய நிர்வாகி, சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். மோசமான மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. ராமதாஸ் உடல் ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியுடன், நுாறாண்டுகள் வாழ வேண்டும். நான் தவறு செய்து இருந்தால், என்னை மன்னித்து விடுங்கள். பத்தாண்டுகளுக்கு முன், ராமதாசுக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. தற்போது அவருக்கு சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் உள்ளது. அவர் டென்ஷன் ஆகக்கூடாது. என்ன செய்ய வேண்டும் என்று என்னிடம் சொல்லுங்கள். ஒரு மகனாக, கட்சியின் தலைவராக, அதை நான் செய்து முடிக்கிறேன். இது, நீங்கள் உருவாக்கிய கட்சி. எனவே வருத்தப்படாதீர்கள். கோபப்படாதீர்கள். உங்கள் கனவுகளை நாங்கள் நிறைவேற்றுவோம். கடந்த, 45 ஆண்டு காலமாக, இந்த சமுதாயத்திற்காக நீங்கள் உழைத்து இருக்கிறீர்கள். தற்போது நீங்கள் தேசிய தலைவர். இந்தியாவிலேயே மூத்த தலைவர் ராமதாஸ் என, பிரதமர் மோடியே கூறினார். அந்த மதிப்பும், மரியாதையும் எல்லோருக்கும் இருக்கிறது.இவ்வாறு அன்புமணி பேசினார்.

தியாக தீபம்

உலக தந்தையர் தினத்தையொட்டி, பா.ம.க., தலைவர் அன்புமணி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான். ஆக்குதல் அன்னையரின் பணி என்றால், அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி. 'தந்தையர் நாளில் மட்டுமின்றி, எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம்' என தெரிவித்துள்ளார்.வடிவேல் ராவணன் நீக்கம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், தன் ஆதரவு நிர்வாகிகளுடன் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று ஆலோசனை நடத்தினார். அவரால் புதிதாக நியமிக்கப்பட்ட, 42 மாவட்ட செயலர்கள், 33 மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், பூம்புகாரில் ஆகஸ்ட் 10ல் நடக்கும் மகளிர் சங்க மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. நேற்றைய கூட்டத்தில், வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற நிலையில், இன்று தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம், ராமதாஸ் தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டங்கள் முடிந்ததும், பொதுக்குழுவை கூட்டும் முடிவில் ராமதாஸ் இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கேற்றவாறு, கட்சியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து வடிவேல் ராவணனை நீக்கி விட்டு, முரளி சங்கர், 35, நியமிக்கப்படுவதாக ராமதாஸ் நேற்று அறிவித்தார். அன்புமணி ஆதரவாளராக வடிவேல் ராவணன் மாறியதால், இந்த முடிவை ராமதாஸ் எடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ராஜா
ஜூன் 16, 2025 23:47

தகப்பன் மகன் ஊரை ஏமாற்று வேலை நம்பி மக்களை ஏமாற்றும்


தாமரை மலர்கிறது
ஜூன் 16, 2025 23:35

இதற்கு மேல் ராமதாஸ் அமைதியாக வேண்டும். ஓவராக தொடர்ந்து ஆட்டம் போட்டால், அமலாக்கத்துறை தைலாபுரத்தில் ரைடு விடும். தடியை எடுத்தால் தான், தலையாடும்.


Vijay D Ratnam
ஜூன் 16, 2025 22:27

காரியம் ஆகவேண்டும் என்றால் காலில் விழுவது அன்புமணியின் வழக்கம். காரியம் முடிந்ததும் கொஞ்சம் கூட நன்றியே இல்லாமல் பல்டியடிப்பது அவரது பழக்கம். ராமதாஸ் உயிரோடு நீண்ட காலம் இருக்கவேண்டுமென்றால் அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தூக்கி ஏறிய தயங்க கூடாது. அப்பன் மவன் மறுமவ பேரன் என்று வன்னியர் அமைப்பை சாக்கடையாக்கியது போதும் ராம்தாஸ் அவர்களே.


Karthikeyan
ஜூன் 16, 2025 20:43

ராமதாஸ் அவர்களுக்கு வயது ஆகி விட்டது,Youngsters ஐ கவர வேண்டும் என்றால் மகனிடம் கட்சியை ஒப்படைத்து விட்டு ஒதுங்கவேண்டும்.அதுதான் Gentleness.


என்றும் இந்தியன்
ஜூன் 16, 2025 17:04

இந்த மன்னிப்பு ஏன் 3/4 நாளாக செய்தியாக வந்து கொண்டேடேடே இருக்கின்றது


Perumal Pillai
ஜூன் 16, 2025 13:53

If it is true,


mani
ஜூன் 16, 2025 08:47

There is a saying in Tamil that I will pretend to beat you and you also pretend to weep as loudly as possible. This is the drama enacted by father and son for cheap publicity. Already a public cross talk is going on about the double game


Oviya Vijay
ஜூன் 16, 2025 07:50

இன்னமும் பிரச்சனை முடியவில்லை... ஏனெனில் ராமதாஸ் கூறியது தன்னிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு செயல் தலைவர் பதவியை ஏற்கிறேன் என்று லவ்பெல் சொல்வது தான்.. ஆனால் லவ்பெல் சொல்வது என்ன.. மகனாக, கட்சி தலைவராக தானே தொடர்கிறேன் என்பது.. அதை எப்படி ராமதாஸ் ஏற்றுக்கொள்வார்... வாய்ப்பில்லையே... மூச்சிருக்கும் வரை தான் உருவாக்கிய கட்சிக்கு தானே தலைவர் என உறுதியாக ராமதாஸ் கூறியாயிற்று... ஆக கட்சியின் எதிர்காலம் லவ்பெல் எடுக்கும் முடிவில் இருக்கிறது... முரண்டு பிடித்தால் கட்சி சிதறும்...


vbs manian
ஜூன் 16, 2025 07:49

தந்தையும் மகனும் சேர்ந்து மக்களை குழப்புகிறார்கள்.. இலவச பொழுதுபோக்கு.


VENKATASUBRAMANIAN
ஜூன் 16, 2025 07:26

இப்படியே போனால் கட்சியை மூடிவிட்டு போகலாம். குடும்ப சண்டையை தெருசண்ணடையாக ஆக்கியுள்ளனர். வயதானால் புத்தி பிசகமுமா. தான் வளர்த்த கட்சியை தானே கேவலப்படுத்துகிறார


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை