உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கர்நாடக முதல்வரிடம் பாடம் கற்கணும்: ஸ்டாலினுக்கு அன்புமணி அட்வைஸ்

கர்நாடக முதல்வரிடம் பாடம் கற்கணும்: ஸ்டாலினுக்கு அன்புமணி அட்வைஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவண்ணாமலை: ''சமூக நீதி குறித்து, கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம், தமிழக முதல்வர் ஸ்டாலின் பாடம் கற்க வேண்டும்,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.திருவண்ணாமலையில் நேற்று நடந்த, பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது:கடந்த, 1989ல், தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மீண்டும், இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் துவங்க உள்ளதாக கூறியவுடன், கருணாநிதி பயந்து, எம்.பி.சி., என உருவாக்கி, அத்துடன், 108 ஜாதிகளை இணைத்து விட்டார். அதனால்தான், உள் இடஒதுக்கீடு கேட்டு போராடி வருகிறோம். முன்னாள் முதல்வர் பழனிசாமி, 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை, தேர்தல் நேரத்தில் கொடுத்தார். இதுவே, ஒன்றரை மாதத்திற்கு முன் கொடுத்திருந்தால், பிரச்னை இருந்திருக்காது. 'கர்நாடகாவில், 2015ல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது போதாது, மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த போகிறோம் என, அம்மாநில முதல்வர் சித்தராமையா நேற்று கூறியுள்ளார். கர்நாடகாவில் பின்தங்கிய சமுதாயம், அடித்தட்டு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்து கொடுக்கணும், இடஒதுக்கீடு கொடுக்கணும். நல்ல திட்டங்களை கொடுக்கணும்னா, கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியே ஆகணும்' என அவர் கூறுகிறார். அவரிடம், நம் முதல்வர் சமூக நீதி குறித்து பாடம் கற்க வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிஷா, பீஹார் முதல்வர்களுக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருக்கும்போது, தமிழக முதல்வருக்கு மட்டும் இல்லையா?வரலாற்றில், அமைச்சர் வேலுவிற்கு ஒரு இடம் உண்டு. விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வைத்தவர் என, இவரது பெயர் முதலில் இடம் பெற்றுள்ளது. நியாயமாக பார்த்தால், தி.மு.க.,வினர் பாதி பேர் குண்டர் சட்டத்தில் இருக்கணும்.தி.மு.க.,வினர், வன்னியர்களையும், பட்டியலினத்தவரையும் சேர விடாமல் மோதவிட்டு வருகின்றனர். இதை அனைவரும் உணர்ந்து கொண்டு விட்டனர்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 19, 2025 10:57

எங்க கிம்ச்சை மன்னருக்கு இருக்குற தெறமைக்கு யாரிடமும் பாடம் கற்கவேண்டிய அவசியமில்லை .... அறிவாலயத்தில் வண்டி கழுவும் கொத்தடிமைஸ் அன்புமணிக்கு சூடான பதில் .....


ஆரூர் ரங்
ஜூன் 19, 2025 10:28

சித்தராமையா பழைய சர்வே முடிவை அமல்படுத்தாமல் புதிய சர்வேக்கு உத்தரவிட்டுள்ளார். புதிய சர்வே முடிவுகளைக் கூட அவர் சார்ந்த லிங்காயத் சமூக மடாதிபதி எவரும் ஏற்க போவதில்லை. ஏனெனில் ஒக்கலிகா, லிங்காயத் இரண்டின் மொத்தமும் கூட முஸ்லிம்களின் எண்ணிக்கையை விட குறைவுதான். தாங்கள்தான் மிகப்பெரிய சமுதாயம் என பீலா விட்டு அதிகாரத்தை பிடிப்பது இனி கடினம். இடஒதுக்கீட்டை கேட்கும் சமுதாயங்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு கட்டாயம் என்று சட்டம் கொண்டு வரவேண்டும் .


RAVINDRAN.G
ஜூன் 19, 2025 10:14

வேற மாநிலங்களில் ஜாதிய வேறுபாடு அதிகமா இருக்கிறதால ஜாதிவாரி ஓட்டெடுப்பு தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் ஜாதிய வேறுபாடு ஒரு சில ஊர்களில் மட்டுமே உள்ளது. அதை சட்டப்படி சரிசெய்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் ஜாதிவாரி ஓட்டெடுப்பு தேவையற்ற பிரச்சினையை உருவாகும்.


Suppan
ஜூன் 19, 2025 13:22

என்னது தமிழகத்தில் ஜாதிய வேறுபாடு ஒரு சில இடங்களில் மட்டுமேவா ? சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் விடியலின் சமூகம் 0.1% கூட இருக்காது. அதனால்தான் தயக்கம்


V RAMASWAMY
ஜூன் 19, 2025 09:37

வேண்டவே வேண்டாம். வேண்டுமானால் பிரதமர் திரு மோடியிடம் கற்கலாம், அவர்தான் உண்மையான வழிகாட்டி, நாட்டு நலனுக்காக ஓயாது உழைத்து பாடுபட்டு வெற்றி காண்பவர்.


GMM
ஜூன் 19, 2025 08:30

சாதி என்பது அவர்களுக்குள் திருமண உறவு முறை இருக்க வேண்டும். திருமண உறவு சொத்து மாற்றம் செய்ய உதவும். வன்னியர் போன்ற அரசியல் சாதிகள் இந்த முறையை பின்பற்றுவது இல்லை.? சாதி உணர்வை தூண்டுவது, தன் குடும்பத்தை வளர்த்து கொள்ள முடியும். பிற சாதியை தாழ்த்தி, தன் சாதியை முன்னேற்ற முடியும். சாதி வீடு விட்டு வீதிக்கு வர கூடாது. சமூக ஏற்ற தாழ்வு உருவாக்கும் சாதி, மத இட ஒதுக்கீடு ஒழிக்க நீதிமன்றம் பாடுபட வேண்டும்.


புரொடஸ்டர்
ஜூன் 19, 2025 07:50

அன்புமணியும் ராமதாசும் யாரிடம் பாடம் கற்பார்கள்?


அப்பாவி
ஜூன் 19, 2025 07:50

நீ அங்கே போய் உன் ஜாதிக்கட்சியை வளர்க்கலாமே. சித்து வோடெ கூட்டணி அமைச்சு ஜெயிக்கலாமே


Kjp
ஜூன் 19, 2025 09:11

கர்நாடகாவில் முடியும் போது இங்கு ஏன் முடியவில்லை என்பதுதான் கேள்வி.


Svs Yaadum oore
ஜூன் 19, 2025 09:27

விடியல் சமூக நீதி பேசும் போது மட்டும் ஜாதி என்றால் இனிக்குது .....ஆனால் பா ம க சமூக நீதி இட ஒதுக்கீடு பேசும்போது ஜாதி என்றால் கசக்குமா ??.... அப்ப சமூக நீதி எப்படி வளரும் ??...


சாமானியன்
ஜூன் 19, 2025 07:43

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்ள கூடாது. வேலை வாய்ப்புக்களை தனியாரிடம் விடுங்க. இடஒதுக்கீடு காணாமல் போகும். சமூகநீதி வேண்டுமா ? தரம் வேண்டுமா ! அன்புமணிக்கு பிறகு பாமக காணாமல் போகும். அதுவரை இந்த மாதிரி தமாஷ்களை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.


Rajan A
ஜூன் 19, 2025 07:34

இவர்கள் ஓட்டுக்கு மேல் தட்டு, கீழ் தட்டு. மக்களுக்கு பிச்சை தட்டு


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 19, 2025 06:49

ஏன் உங்களுக்கு இந்த காண்டு ..


சமீபத்திய செய்தி