உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு வெகுமதியா; கேட்கிறார் அன்புமணி!

லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு வெகுமதியா; கேட்கிறார் அன்புமணி!

சென்னை: ஊட்டியில் ரூ.11.70 லட்சம் லஞ்சம் வாங்கி சிக்கிய நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா மீது நடவடிக்கை எடுக்காமல் நெல்லை மாநகராட்சியில் அதிகாரம் மிக்க பதவியில் அமர்த்துவதா? அரசு நிர்வாகத்தை இப்படியா தூய்மைப்படுத்துவது, அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பா.ம.க நிறுவனர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை:

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி சலுகைகளை வழங்கியதற்காக நான்கு தரப்பினரிடமிருந்து கையூட்டாக பெறப்பட்ட ரூ.11.70 லட்சம் பணத்துடன் கையூட்டு தடுப்புப் பிரிவினரால் கையும், களவுமாக பிடிக்கப்பட்ட ஊட்டி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷாவை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு பதிலாக அவரை திருநெல்வேலி மாநகராட்சியின் உதவி ஆணையராக நியமித்து தமிழக அரசு ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக வெகுமதி வழங்குவது கண்டிக்கத்தக்கது.ஊட்டி நகராட்சிக்குட்பட்ட தொட்டபெட்டா சந்திப்புக்கு அருகில் ஜகாங்கீர் பாஷா சென்று கொண்டிருந்த மகிழுந்தை கடந்த நவ.,10ம் தேதி கையூட்டுத் தடுப்புப் பிரிவு போலீசாரால் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அவரிடமிருந்து ரூ.11.70 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. அதை நான்கு தரப்பினரிடமிருந்து அவர் வசூல் செய்து தமது சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் குடியிருப்பு பயன்பாட்டில் இருந்து வணிக பயன்பாட்டுக்கு வரி இனத்தை மாற்றிக் கொடுத்ததற்காக ரூ.2.49 லட்சம், சேரிங் கிராஸ் முதல் கேசினோ சந்திப்பு வரை வாகன நிறுத்த உரிமம் வழங்கியதற்காக ரூ.2 லட்சம், பாரதியார் வணிக வளாகத்தில் துணிக்கடையை உணவு விடுதியாக மாற்றியதற்காக ரூ.2.50 லட்சம், தனியாருக்கு சொந்தமான கட்டடத்தின் வரியை குறைத்து நிர்ணயம் செய்ததற்காக ரூ. 4.71 லட்சம் கையூட்டு வசூலிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. அவர் பயணம் செய்த மகிழுந்தை ஓட்டி வந்த ஓட்டுனரும் ஜஷாங்கீர் பாஷா கையூட்டு வாங்கியதை உறுதி செய்தார். ஜஹாங்கீர் பாஷாவுக்கு எதிராக இவ்வளவு ஆதாரங்கள் இருக்கும் நிலையில் அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும்; பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், விசாரணைக்குப் பிறகு அவரை சுதந்திரமாக நடமாட அனுமதித்த தமிழக அரசு, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இப்போது திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையராக நியமித்திருக்கிறது. ஒப்பீட்டளவில் இது அவர் ஏற்கனவே வகித்த பதவியை விட அதிகாரம் மிக்கதாகும். ரூ.500 கையூட்டு வாங்கியதற்காக பல கிராம நிர்வாக அலுவலர்களும், கடை நிலை ஊழியர்களும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன், பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், ரூ.11.70 லட்சம் கையூட்டு வாங்கியதுடன், அதற்கான சான்றுகளும் தெளிவாக இருக்கும் நிலையில் ஜஹாங்கீர் பாஷா மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரம் மிக்க பதவியை வழங்குவதன் மூலம் தமிழக அரசு சொல்லவரும் செய்தி என்ன? இப்படித்தான் ஊழலை ஒழித்து அரசு நிர்வாகத்தை தூய்மைப்படுத்தப் போகிறதா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். கையூட்டு வாங்கிய ஜஹாங்கீர் பாஷாவை உடனடியாக கைது செய்வதுடன், அவரை பணியிடை நீக்கமும் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

sundarsvpr
நவ 29, 2024 17:49

லஞ்சம் வாங்கியது தவறு. வாங்கிய தொகை எவ்வாறு பங்கு எங்கு எல்லாம் போகிறது என்பதனை கவனிக்கவேண்டியது நல்ல நிர்வாகம். முக்கிய புள்ளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அரசில் ஊழல் செய்பவர்கள் அரசு அதிகாரிகள் மட்டும் இல்லை என்பது நிரூபணம் ஆகும் ஊழலும் கணிசமாய் குறையும்.


gayathri
நவ 29, 2024 09:33

எந்த ஆட்சி வந்தால் என்ன மக்களின் கதி இதுதான் / யோக்கியர்கள் போல பேச்சு


நிக்கோல்தாம்சன்
நவ 28, 2024 20:29

திரவாக மாடலில் லஞ்சம் வாங்கியவர்களுக்கு வெகுமதி பதவி உயர்வு என்பதனை திமுக மேடை பேச்சாளர் வடிவேலு தனது ஒரு படத்தில் மன்னனாக நடித்து வெளிக்காட்டியிருப்பார் , இப்போது அந்த படத்தை பார்ப்பது போலவே ஆட்சியும்


கத்தரிக்காய் வியாபாரி
நவ 28, 2024 19:41

இதுதான் திராவிடியா ஆட்சி.


sankar
நவ 28, 2024 19:35

வெட்கப்படாத வீணர்கள் சங்கம்


Ahamed Rafiq
நவ 28, 2024 18:56

மரியாதைக்குரிய மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்கள் என் தாத்தா பிரம்மஞானி ராஜாவிற்கு 1980களில் பழக்கம் உண்டு. மரியாதைக்கு உரியவர். மதிக்க பட வேண்டும்.


joe
நவ 28, 2024 18:40

திராவிட மாடலில் ஊழல் அதிகாரம் கொடி கட்டி பறக்கிறது


Rajasekaran
நவ 28, 2024 19:51

எங்கே பாலகிருஷ்ணன், எங்கே முத்தரசன், எங்கே திருமா? அதிமுக, பிஜேபி, சீமான், என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? சென்னை உயர்நீதி மன்றம் என்ன செய்கிறது?


joe
நவ 28, 2024 18:18

உண்மையான திராவிடமோ திராவிடனோ இங்கே தமிழ் நாட்டில் இல்லை .எல்லாம் ஊழல் ஆட்சிதான் .


john joe
நவ 28, 2024 17:50

இதுதான் திராவிடம் என்கிற "திராவிடமாடல் "


Shunmugham
நவ 28, 2024 17:16

திமுக கூட்டணி கட்சிகள் ஏன் வாய்திறப்பதில்லை. லஞ்சம், ஊழல் செய்தவர்கள், திருடனுக்கு பதவி உயர்வு இதெல்லாம் திராவிட மாடல். உங்களுக்கு மனசாட்சி கிடையாதா? லஞ்ச பணம் யாருடையது? மக்கள் வரிப்பணமா? திமுகவின் நிதியா? கூட்டணி என்றால் எதற்க்கும் வாய்திறக்க கூடாதா? நேற்மையாக அரசியல் செய்யமுடியவில்லை என்றால் வேறு வேலை செய்து சம்பாதியுங்கள். மக்களை ஏமாற்றவேண்டாம்.


joe
நவ 28, 2024 18:26

2G ஊழல் அதிகாரிகளையும் ,செந்தில் பாலாஜியின் தம்பியையும் மறைத்து ஊழல் செய்வது உங்களுக்கு தெரியாதா?இதெல்லாம் சகஜமய்யா .....


gayathri
நவ 29, 2024 09:34

வேற வேலை என்ன வேலை பார்க்க முடியும். பணம் வரணும் இல்லையா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை