உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியல் செய்யாமல் உதவ வேண்டும்: தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை

அரசியல் செய்யாமல் உதவ வேண்டும்: தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை

சென்னை:கல்வியில் வீணாக அரசியல் செய்யாமல், பி.எம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்து, தமிழக பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய, தமிழக அரசு உதவ வேண்டும் என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அண்ணாமலை அறிக்கை:

தமிழ்மொழி அழிவில்லாதது. தமிழ் கலாசாரம் உலகமயமானது. தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை உலகறிய செய்ய அரசு உறுதி கொண்டுள்ளது. அந்தந்த மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் மீது எந்த மொழியையும் திணிக்க தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கவில்லை. எந்த வகையிலும், தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிக்க தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=238er7bv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சமக்ர சிக்ஷா மற்றும் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் ஆகிய இரண்டும் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த ஒருங்கிணைந்த செயல்பாடுகள் ஆகும். அறிவியல் கல்வியில் கவனம் செலுத்தும், தமிழ்வழி கல்வியில் கவனம் செலுத்தும் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை செயல்படுத்தாமல் தமிழ்நாடு ரூ.5000 கோடியை இழக்கிறது. மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்யாதீர்கள் என்று, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு, தமிழக அரசு, வழக்கமான மழுப்பல் காரணங்களோடு, ஹிந்தி தவிர்த்து பிற மொழிகள் கற்பிக்கப் போதிய ஆசிரியர்கள் இல்லை என்று கூறியிருக்கிறது. மத்திய அரசு ஹிந்தி மொழியை மட்டுமே மூன்றாவது மொழியாகக் கொண்டு வரவில்லை என்பதை ஒப்புக்கொண்ட தமிழக அரசுக்கு முதலில் நன்றி. ஏற்கனவே பல ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும்போது, உடனடியாக நீங்கள் வேறு இந்திய மொழிகளுக்கான ஆசிரியர்களை நியமித்து விடுவீர்கள் என்று, திமுக அரசை அறிந்த யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் அதற்கான பணிகளைத் தமிழக அரசு தொடங்கலாம். தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கருத்துக்கணிப்பு மேற்கொண்டு, எந்தெந்த மொழிகளைக் கற்க மாணவர்கள் விரும்புகிறார்கள் என்பதை முடிவு செய்து, அதன் அடிப்படையில் அந்தந்த மொழிகளைப் பயிற்றுவிக்க ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும். மேலும், திமுக அரசு நினைத்தால் தமிழ் மொழியில் பட்டம் பெற்று, ஆசிரியர் பணி கனவுடன் இருக்கும் தமிழக இளைஞர்களுக்கு, பக்கத்து மாநிலங்களின் தமிழக எல்லை மாவட்டங்களில் ஆசிரியர் வேலைவாய்ப்பு கிடைப்பதையும் உறுதி செய்யலாம்.எனவே, கல்வியில் வீணாக அரசியல் செய்யாமல், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்து, தமிழக பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய, தமிழக அரசு உதவ வேண்டும்.இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

R.P.Anand
பிப் 22, 2025 09:31

சாரி சார் இவனுங்களால திருந்த மாட்டனுங்க. அந்த 2000 கோடிய சனி ஞாயிறு ரெண்டு நாள் ஹிந்தி கிளாஸ் தனியா போடுங்க. நோ ஏஜ் லிமிட். ராணுவத்துக்கு. மத்திய அரசு வேலைக்கு போரவங்கள்ளுக்கு பயன் படும். அப்படியே முன்னாள் இராணுவ வீரர் களுக்கும் கிளாஸ் எடுக்க விட்டா அவங்களும் சம்பாதிக்கலாம்.


venugopal s
பிப் 21, 2025 21:17

தமிழக அரசுக்கு புத்திமதி சொல்லும் அளவுக்கு அண்ணாமலை இன்னும் வளரவில்லை.


T.sthivinayagam
பிப் 21, 2025 21:17

பத்தாவதுக்கு பிறகு அதாவது மேல்படிப்புக்கு உதவாத ஹிந்தியை ஏன் பத்தாவது வரை படிக்க வேண்டும் என்று மக்கள் கேள்வி கேட்கின்றனர் எழுத படிக்க தெரிந்தால் போதுமே


அப்பாவி
பிப் 21, 2025 20:39

2026 வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மரியாதை அளித்து மும்மொழி திட்ட அரசியல் செய்யாதீர்கள். 2026 ல நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மும்மொழித் திட்ட்த்தைக் கொண்டு வருவோம்னு சொல்லி ஜெயிச்சுக் காட்டுங்க. இப்போ மொழி அரசியல் தேவையில்லாத வேலை.


sampath, k
பிப் 21, 2025 19:47

Annamalai only doing politics in and each issue and he wants more problems from anywhere/anything in .Tamilnadu


vbs manian
பிப் 21, 2025 19:12

ஏன் தமிழகத்தில் மட்டும் இந்த மொழி பிரச்சினை .மற்ற மாநிலங்கள் புத்திசாலி இல்லையா. எல்லாம் அந்த இரண்டாயிரம் கோடி படுத்தும் பிரச்சினை. ஹிந்தி கட்டாயம் என்று திரும்ப திரும்ப பொய் சொல்லப்படுகிறது.


Venkatesan Srinivasan
பிப் 22, 2025 00:42

திராவிஷம் என்ற பெயரில் பிரிவினை வாதத்திற்கு வித்திடப்பட்டது இந்த மதராஸ் மாநிலத்தில் தான். சுமார் ஏறக்குறைய 75 ஆண்டுகளாக அந்த விதை பல்வேறு வகையான விஷச் செடிகளை இங்கே வளர செய்கிறது. இந்திய அரசால் சரியான முறையில் களை எடுக்க படவில்லை. அந்த திராவிஷத்தின் உரம் இந்தி எதிர்ப்பு வடவர் எதிர்ப்பு இந்துமத துவேஷம் கிருஸ்தவ இஸ்லாமியர் ஆதரவு நிலைப்பாடு. இதனால் மக்களும் இந்திய தேச ஒற்றுமைக்கு எதிராக மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். எப்பொழுதெல்லாம் மக்கள் சற்றே விழிப்புணர்வு பெறுகின்றனரோ அப்போது எல்லாம் இந்த திராவிஷம் மேற்கூறிய உரங்களை தெளித்து மக்களை மீண்டும் புதைகுழியில் தள்ளுகிறது.


visu
பிப் 21, 2025 19:00

ஒரு பள்ளியில் 100 மாணவர்கள் 10 மாறுபட்ட மொழிகளை விரும்பினால் எப்படி ஆசிரியர் நியமித்து வகுப்பு எடுப்பீர்கள் .கடைசியில் மக்கள் எதோ ஒரு இந்தியா மொழியை படிப்பதெற்க்கு ஹிந்தியை படித்தால் இந்தியா முழுசும் சுற்றி வரலாம் என்று ஹிந்தி படிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்ற எண்ணம்தான்


Rajasekar Jayaraman
பிப் 21, 2025 19:25

சூப்பரான கொத்தடிமை சிக்கிவிட்டது திட்டு திராவிடமே விட்டுவிடாதே.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 21, 2025 18:55

No. வேண்டாம். தமிழ்நாடு அரசே, பி எம் ஸ்ரீ என்கிற பித்தலாட்டத்தில் சேர வேண்டாம். கேரளாவில் பவன்ஸ் வித்யா மந்திர் பள்ளி பி எம் ஸ்ரீ திட்டத்தில் சேர்ந்து விட்டு, தலைமை ஆசிரியருக்கு முன்பிருந்த அதிகாரங்களைக் கூட, ஒன்றிய அரசு பறித்து விட்டது. ஒரு லேப்டாப் வாங்க கூட ஒன்றிய அரசுக்கு request போட்டு விட்டு வாசலைப் பார்த்து உட்கார்ந்திருக்கிறார்கள். ஒரு ஸ்கூல் பஸ் கூடுதலாக இயக்க முடியவில்லை. டெல்லியின் ஒப்புதல் வேண்டுமாம். ஒரு ஆசிரியரைக் கூட நியமனம் செய்ய இயலாது. டெல்லிக்கு எழுதணும். இது தான் நிஜ நிலவரம். எனவே, பி எம் ஸ்ரீ யில் தமிழ்நாடு அரசு சேர வேண்டாம். கல்வியையும், கல்வி சார்ந்த வளர்ச்சிகளையும் முடக்க வேண்டும் என்பதற்காகத் தான் பி எம் ஸ்ரீ என்கிற பித்தலாட்டம். சேராதீர்கள்.


Rajasekar Jayaraman
பிப் 21, 2025 19:27

இருட்டு ரயில் கொள்ளை கூட்டத்தில் சேருங்கள். எதிர்காலத்தில் பிள்ளைகள் பிழைக்க வழி, திருட்டு தொழில் மட்டுமே. அதுதான் திருட்டு திராவிடத்தில் ஒரே கொள்கை.


எவர்கிங்
பிப் 21, 2025 18:52

தீரா விஷ மாடலின் அடி வயிற்றிலே அடிக்கிறீர்கள்


எவர்கிங்
பிப் 21, 2025 18:51

செவிடன் காதில் சங்கு ஊதாதே


முக்கிய வீடியோ