உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொத்து குவிப்பு வழக்கில் இன்னொரு அமைச்சருக்கும் சிக்கல்; பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து

சொத்து குவிப்பு வழக்கில் இன்னொரு அமைச்சருக்கும் சிக்கல்; பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அவரது மனைவி, மகன் ஆகியோரை விடுவித்து, கடலுார் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம். 1996 - 2001 மற்றும் 2006 -- 2011ம் ஆண்டுகளில், அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2004 மற்றும் 2011ல், லஞ்ச ஒழிப்புத்துறை, இரு வழக்குகளை பதிவு செய்தது.முதல் வழக்கில் பன்னீர்செல்வம், அவரது மனைவி செந்தமிழ்செல்வியும், இரண்டாவது வழக்கில் இவர்களுடன் மகனும் சேர்க்கப்பட்டார். இவர்கள் மீதான வழக்கை விசாரித்த கடலுார் நீதிமன்றம், கடந்த 2007ல் ஒரு வழக்கிலும், 2016ல் மற்றொரு வழக்கிலும், மூவரையும் விடுவித்து உத்தரவிட்டது.இந்த உத்தரவுகளை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை, நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார்.இருதரப்பு வாதங்களுக்குப்பின், இந்த வழக்கில் நீதிபதி பி.வேல்முருகன் நேற்று அளித்த உத்தரவில், பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து, கடலுார் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க, கடலுார் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

thehindu
ஏப் 26, 2025 13:07

சென்னை நீதிமன்றத்தில் தோல்வியின் விரக்தியின் உச்சியில் இருக்கும் மதவாதிகளின் வெறிச்செயல் இது .


c.k.sundar rao
ஏப் 26, 2025 10:10

Some HC JUDGES of MADRAS are god fearing and straight forward in delivering justice when compare to Supreme Court judges.


ராமகிருஷ்ணன்
ஏப் 26, 2025 09:55

திமுக அமைச்சர்களா, களவாணிகளின் கும்பலா, ஏன்டா தமிழ் நாட்டை கேவலப்படுத்துறீங்க


திருஞான சம்பந்த மூர்த்தி தாச ஞானஸ்கந்தன்
ஏப் 26, 2025 09:31

அதிமுக அமைச்சர்கள் விடுதலை திமுக அமைச்சராக்களின் சங்ககால வழக்குகள் தூசி தட்டி எடுக்கப் படுகிறது இப்போ ட்ரெண்டாகியுள்ளது. அகில இந்திய புகழ் பெட்ரா மெட்றாஸ் ஹைக்கோர்ட்டா இப்படி? இது யாரு செஞ்ச வேலை?


ஆரூர் ரங்
ஏப் 26, 2025 09:16

உச்ச நீதிமன்றம் என இவர்களால் கீழ்தரமாக விமர்சிக்கப்பட்ட அதே சுப்ரீம் கோர்ட்க்குப் போய் கெஞ்சுவர். வெட்கம் மானம் பற்றி 21ம்பக்கத்தில்?.


Palanisamy Sekar
ஏப் 26, 2025 09:12

தார்மீக அடிப்படியிலாவது எந்த அமைச்சரையேனும் பதவியை விட்டு நீக்கவாரா என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகின்றது. பொன்முடி, து முருகன், இப்போ இந்த பன்னீர்செல்வம்... பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. இதனை எதிர்க்கட்சியும் கடுமையாக எதிர்க்கவில்லை, பத்திரிக்கைகளில் ஒரு ஓரமாக செய்தியை வெளியிட்டு நடுநிலைமையை பறைசாற்றிக்கொண்டு தேமேன்னு அறிவாலயம் கொடுக்கும் சன்மானத்தில் தங்களது தன்மானத்தை அடகுவைத்துவிட்டு போய்விடுகின்றன. மக்களும் ஓட்டுக்கு பணம் வந்துச்சா அதுபோதும்ன்னு போறாங்க. ஒட்டுமொத்த அமைச்சரவையும் ஊழல்வாதிகளால் நிரம்பி வழிகின்றன. மக்கள் முகங்களில் அசட்டுக்களை தாண்டவமாடுகின்றது. இந்தியாவிலேயே அதிக அமைச்சர்கள் ஊழலில் சிக்கி தவிப்புது ஸ்டாலினின் அமைசஹ்ராவையில் தான் என்கிறபோது தோப்பனாரை மிஞ்சி சாதனை செய்துவிட்டார் ஊழல் விஷயத்தில் . மக்களுக்குத்தான் சிக்கல் .


Ramaswamy Sundaram
ஏப் 26, 2025 15:41

அடலேறாய் பாத்திட்டஆ யா மறவர் குலத்தில் பிறந்த அஞ்சாத சிங்கங்களாகிய என் அன்புத்தம்ம்பிகளை ஒவ்வொருவராக பழிதீர்க்கும் வஞ்சகர்களின் சதியை? தானைத்தலைவனாக என் அன்புக்குரிய மகன் அஞ்சாத சிங்கம் திருக்குவளை முதுதுவேலர் கருணாநிதியின் மகன் என்றும் பாராமல் சாங்கி கோவூட்டம் செய்கின்ற ஈன செயல் இது? லஞ்சம் வாங்கியது யார் குற்றம் ? மந்திரியின் குற்றாமா? அல்லது அவர்களின் செயலாளர்கள் குற்றமா? ஆண்டுகள் பல உருண்டோடியும் தாய்குலமாம் தமிழ்க்குலத்தை அவமான படுத்தும் சங்கிகளுன் குற்றமா? போர்ப்பரணி பாடி தோல் தttடிப்புறப்படு? நம்மை குற்றஞ் சாட்டியவர்களை ஓட ஓட விரட்டுவோம்...தம்பி வா தலைமை தாங்க வா என்று அன்று அண்ணா சொன்னார்... அதை நடத்திக்காட்டுவோம்


மணியன்
ஏப் 26, 2025 09:12

கொல்லீஜியம் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும்.காஷ்மீரில் அரசையும் ,ராணுவத்தையும் மதிக்காமல் தேர்தல் நடத்த உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் தான் 28 இந்துக்கள் சாவுக்கு காரணம்.அவ்வாறு அமைந்த தற்போதைய மாநில அரசு கொலைகள் நடந்த இடத்தை ராணுவத்துக்கு தெரிவிக்காமல் டூரிஸ்டுகளை அனுமதித்தனால் அங்கே ராணுவம் பாதுகாப்புபணியில் ஈடுபடவில்லை.


Keshavan.J
ஏப் 26, 2025 14:26

28 பேரில் 26 ஹிந்துக்கள் ஒருவர் இஸ்லாமியர் மற்றொருவர் கிரிஸ்துவர்


vbs manian
ஏப் 26, 2025 09:09

வழக்கில் சிக்காத சிகாமணி யாரேனும் உண்டா.


மணி
ஏப் 26, 2025 08:58

சமாளிக்க படும் சிக்கல் ஏதும் இல்ல வழக்கு முடிய எப்படியும் பத்து இருபது வருடமாகும்


சுந்தர்
ஏப் 26, 2025 08:29

அடுத்தடுத்து அமைச்சர்கள் மீது சொத்து குவிப்பு வழக்குகள்... காப்பாற்றும் முதல்வர். அப்படி என்றால்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை