உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களே இது உங்களுக்குத்தான்; தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களே இது உங்களுக்குத்தான்; தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.வீடு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வீடு வாங்கிய குறிப்பிட்ட மாதத்தில், குடியிருப்போர் நலச்சங்கத்தை உருவாக்கி, பதிவு செய்வது அவசியமாகும். இச்சங்கத்தை உருவாக்க குறைந்தபட்சம் 4 உரிமையாளர்களாவது இருத்தல் வேண்டும். சங்க துணை விதிகளை உருவாக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ஒவ்வொன்றும் நிர்வாகக் குழுவை நியமிக்க வேண்டும்.பழைய கட்டிங்களை மறுகட்டுமானம் செய்ய குடியிருப்பில் இருக்கும் ஒரு பகுதியினரின் கோரிக்கையின் பேரில் சிறப்பு கூட்டத்தை கூட்டலாம். கட்டிடத்தில் இருந்து யாரேனும் வெளியேற மறுத்தால் அந்த நபரை போலீஸ் துணையுடன் சங்கம் வெளியேற்றலாம்.விதிகளின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இணையதளத்தை சம்பந்தப்பட்ட துறை உருவாக்குதல் வேண்டும். விதிகளை செயல்படுத்தும் அதிகாரிகளாக பதிவுத்துறை அந்தந்த மாவட்ட பதிவாளர்கள் செயல்படுவார்கள். துணை பதிவுத்துறை தலைவர்கள் மேல்முறையீட்டு அதிகாரிகளாக இருப்பார்கள். குடியிருப்போரை தொல்லை செய்யும் வகையில் ஒலி எழுப்பக் கூடாது, உள்ளாட்சி விதிமுறைகளுக்கு உட்பட்டே செல்லப்பிராணி வளர்க்க வேண்டும், விளம்பரம் உள்ளிட்ட போஸ்டர்களை சங்கத்தின் அனுமதியின்றி வைக்கக் கூடாது, ஜன்னல் மற்றும் பால்கனியில் துணி காயவைப்பது பிறருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது, அடுக்குமாடி குடியிருப்புகளில் இருக்கும் பொது இடங்களில் குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும், மின்சார இணைப்பு, அலைபேசி நிறுவுதல், டிவி ஆன்டனா, ஏசி உள்ளிட்டவற்றிற்கு சுவர்கள் மற்றும் மேல்தளத்தின் மூலம் வயர்களை இழுக்க சங்கத்தினரிடம் உரிய அனுமதி பெற வேண்டும், சங்கத்தின் அனுமதியில்லாமல் பொது நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Manon
அக் 01, 2024 20:30

So many apartments including several thousands of residences are there in Chennai Mambakkam main Road, But there is no proper street lights in this road. Perumbakkam lake is not cleaned and encroachments are not evicted. Will the concerned authorities look into this matter.


V GOPALAN
அக் 01, 2024 06:50

மரம் செடி இல் விழுந்த இலையை அள்ளுவதற்கு ஊராட்சிக்கு கப்பம கட்ட வேண்டும்


theruvasagan
செப் 29, 2024 10:31

காசு போட்டு கட்டின அல்லது வாங்கின வீட்டின் உரிமையாளனுக்கு அதைச் செய்யணும். இதைச் செய்யக்கூடாது. அனுமதி வாங்கணும் என்று ஆயிரம் நிபந்தனைகள். ஆனால் பொது இடங்களில் சாலைகளில் சுவர்களில் கட்சிக்காரன் போஸ்டர் ஒட்டி கட் அவுட் வைத்து கிலோமீட்டர்கள் தூரத்துக்கு அலங்கார வளைவுகள் வைத்து ஒலிபெருக்கிகளை அலறவிட்டு போக்குவரத்தை மறித்து பேரணி நடத்துவதற்கு எந்த நிபந்தனைகளும் கிடையாது. அப்படி இருந்தாலும் அவைகளை ஏன் பின்பற்றவில்லை என்று கேட்க எந்த நாதியும் கிடையாது.


நிக்கோல்தாம்சன்
செப் 29, 2024 06:03

பல விஷயங்களை வரவேற்கின்றேன்


நிக்கோல்தாம்சன்
செப் 29, 2024 06:03

பல விஷயங்களை வரவேற்கின்றேன்


Anantharaman Srinivasan
செப் 28, 2024 23:20

இந்த சங்கங்ளை அரசு எந்தளவுக்கு மதிக்கும்?


GMM
செப் 28, 2024 21:34

அடுக்கு மாடி குடியிருப்பு சங்கம் பதிவு அவசியம். பொது விதிகள் அரசு வகுக்க வேண்டும். விதிகளை செயல் படுத்த ஊழல் பதிவு துறை எதற்கு?. பொதுப் பணி, வீட்டுவசதி வாரியம் தான் சரியான அமைப்பு. இஷ்டம் போல் ஊழல் புரிய உத்தரவு போட முடியாது. குடியிருப்பு வரி விதிப்புக்கு உட்பட்டது. குடியிருப்பு உள் தண்ணீர் குழாய், கழிவு நீர் சேகரிக்க வசதி இருக்கும். திட்ட எல்லையில் குடியிருப்பு கட்டும் போது உள்ளாட்சி பிணைப்பு வசதி செய்து முடிக்க வேண்டும். உள் குப்பை சங்கம் சேகரிக்கும். கிடங்கில் உள்ளாட்சி சேர்க்க வேண்டும். தன் பொறுப்பை மறைக்கும் அதிகார அறிவிப்பு.


rama adhavan
செப் 28, 2024 20:03

அப்போ குடிசைகளுக்கு? குடிசை மாற்று வீடுகளுக்கு? வீட்டு வசதி அடுக்கு மாடிகளுக்கு? போலீஸ் வீடுகளுக்கு?


R Venkataraman
செப் 28, 2024 19:36

அடுக்கு மாடி குடியிருப்பு உரிமையாளர்கள் முதலில் ஒரு அமைப்பு தொடங்க வேண்டும். அதை பதிவு செய்ய பணம் கட்ட வேண்டும். பதிவு செய்த பின்னர், துணை விதிகளை தயாரித்து அதையும் பதிவு செய்ய வேண்டும். இந்த மாதிரி யாரும் செய்வதில்லை


M Ramachandran
செப் 28, 2024 19:34

சும்மா இருந்த சங்கை ஒருத்தன் ஊதி கெடுத்தானாம்


சமீபத்திய செய்தி