உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொறுப்பு டி.ஜி.பி., நியமனத்திற்கு எதிர்ப்பு ஐகோர்ட்டில் முறையீடு

பொறுப்பு டி.ஜி.பி., நியமனத்திற்கு எதிர்ப்பு ஐகோர்ட்டில் முறையீடு

சென்னை:தமிழக பொறுப்பு டி.ஜி.பி.,யாக வெங்கட ராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழக டி.ஜி.பி.,யாக இருந்த சங்கர் ஜிவால், ஆக., 31ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். அதன்பின், புதிய டி.ஜி.பி., நியமிக்கப்படாத நிலையில், பொறுப்பு டி.ஜி.பி.,யாக வெங்கடராமனை நியமித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. பொறுப்பு டி.ஜி.பி., நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர் வரதராஜ், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வில் முறையீடு செய்தார். 'தற்காலிக அடிப்படையில் டி.ஜி.பி.,யை நியமிக்கக் கூடாது என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. அதன் அடிப்படையில், பொறுப்பு டி.ஜி.பி.,யாக வெங்கடராமனை நியமித்தது சட்டவிரோதம். இதுதொடர்பாக தாக்கல் செய்ய உள்ள வழக்கை அவசரமாக விசாரணைக்கு ஏற்க வேண்டும்' என, வழக்கறிஞர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதிகள், 'மனு தாக்கல் செய்யும் பட்சத்தில், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை