வாசகர்கள் கருத்துகள் ( 1 )
2025ம் ஆண்டு சிந்தனை தேவை அறிவியலுக்கு அதிகமுதலீடு ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்வில் மகிழ்ச்சியுடன் எளிமையாக வாழ அறிவியல் துணைபுரிகிறது. மனிதனின் ஆயுட்காலம் பெருகிக்கொண்டே செல்வதற்கு அறிவியல் பங்களிப்புடன் கூடிய மருத்துவ கண்டுபிடிப்புகளே ஆகும். மனிதனின் சராசரி வயது 25ல் தொடங்கி இன்று 70வயது வரை நீடிக்க மிக முக்கிய காரணம் மருத்துவ ஆராய்ச்சிகளே ஆகும். இன்னும் சில ஆண்டுகளில் மனிதனுக்கு இறப்பே இல்லை என்ற நிலை உருவாகும். அறிவியலின் துணையோடு நாள்தோறும் பயணிக்கும் பெரும்பாலான மக்கள் புதிய அறிவியல் செய்திகளை, கண்டுபிடிப்புகளை வெளியிடும்போது, ஏளனம் மற்றும் மறுப்பு தெரிவிப்பது வழக்கமாகும். அறிவியல் துணையின்றி சில நிமிடங்கள் கூட செயல்பட முடியாது என்பதற்கு மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்பான செல்போன் ஒன்றே சாட்சியாகும். ஆகவே மனித சமுதாயம் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு, அறிவியல் சிந்தனையுடன் முற்போக்கு கருத்துக்களை வெளியிடும் அறிவியல் அறிஞர்களை, அமைப்புகளை பாராட்டி அவர்களுக்கு துணைநிற்க வேண்டும். இந்திய அரசியல் சட்டம் 51A h படி இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் நாள்தோறும் அறிவியல் செய்திகளை பரப்புவதை கடமையாக Duty கொள்ளவேண்டும். இரா.எத்திராஜன் சைதைமேற்கு 30ஆண்டுகளாக தொடர்ந்து குருதி கொடையை வழங்கி வருபவர்
மேலும் செய்திகள்
சணல் பை தயாரிக்க பெண்களுக்கு இலவச பயிற்சி
18-Dec-2024