உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பஸ் டிரைவரை செருப்பால் அடித்த விவகாரம்; உதவி மேலாளர் சஸ்பெண்ட்

அரசு பஸ் டிரைவரை செருப்பால் அடித்த விவகாரம்; உதவி மேலாளர் சஸ்பெண்ட்

மதுரை: மதுரை ஆரப்பாளையம் அருகே அரசு பஸ் டிரைவரை செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பான நிலையில், அச்செயலை செய்த உதவி மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மதுரையில் இருந்து திருப்பூர் செல்லும் அரசு பஸ்ஸை டிரைவர் ஓட்டி வந்தார். நேற்று ஆரப்பாளையம் ரவுண்டானா அருகே பஸ்ஸை நிறுத்தி பயணிகளை ஏற்றி வந்தார். பின்னர், ஆரப்பாளையம் பஸ் நிறுத்தத்திற்கு சென்ற பஸ்ஸை வெகுநேரமாகியும் எடுக்காததால், டிரைவரிடம் பயணிகள் வாக்குவாதம் செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=73nfvmg0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, உதவி மேலாளர் சொன்னால் தான் பஸ்ஸை எடுப்பேன் என்று டிரைவர் கூறியுள்ளார். இதனால், பயணிகள் ஆரப்பாளையம் பஸ் நிறுத்த உதவி மேலாளர் மாரிமுத்துவிடம் சென்று பஸ்ஸை எடுக்குமாறு கூறியுள்ளனர். இதனால் குழம்பிப் போன அவர், பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பிறகு, டிரைவரை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, தனக்கு எதிராக பயணிகளை தூண்டி விடுகிறாராயா? என்று கூறி, செருப்பால் அடித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், உதவி மேலாளர் மாரிமுத்து தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இதனிடையே,இந்த சம்பவத்தை கண்டித்த பா.ம.க., தலைவர் அன்புமணி, டிரைவரை தாக்கிய உதவி மேலாளரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசின் கடமை நிர்வாகம் செய்வது தான், கட்டப்பஞ்சாயத்து செய்வதில்லை என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்று கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

T.Senthilsigamani
ஜூன் 10, 2025 05:53

வருத்தமாக உள்ளது .உதவி மேலாளர் செய்தது அராஜகம் . இந்த நிகழ்வு அதிமுக ஆட்சியில் ஒரு வேளை நடந்திருந்தால் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் உடனே தமிழகமெங்கும் வேலை நிறுத்த போராட்டங்களை நடத்தியிருக்கும் .அரசை கண்டித்து கண்டன ஊர்வலங்கள் ,பொது கூட்டங்கள் நடத்தியிருக்கும் .ஆனால் திமுக ஆட்சி என்பதால் கள்ள மௌனங்களுடன் பேருக்கு ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டு அமைதியாகி விடுவார்கள் .மேலும் மதுரை - கம்யூனிஸ்ட் நாடளுமன்ற தொகுதி - ஆதலால் ஒன்றுமே நடக்காது


V Venkatachalam
ஜூன் 09, 2025 20:22

திருட்டு தீயமுக ஆட்சியில் மேலாளரை வைத்து கொண்டு டிரைவரை டிஸ்மிஸ் பண்ணுவான்கள்.இது புதுசா இருக்கே. இந்த மேலாளர் தலைமைக்கு கப்பம் கட்ட வேண்டிய பணத்தை சுருட்டி விட்டானோ என்னவோ?


skv srinivasankrishnaveni
ஜூன் 09, 2025 20:08

என்னங்க வெறும் சsபண்டா கேவலமா இருக்கே டிரைவர் தவறு செய்யாமல் செருப்பால அடிவாங்கிருக்காரு அடிச்சவன் அதிகாரின்னா ஓட்டுநர் என்ன அடிமையா மன்னிப்பு சொல்லிட்டா ஓகே ஆயுருமாங்க எவ்ளோ அவமானம் திருப்பித்தான்க்கமுடியாது ன்னு அணவமா


sundarsvpr
ஜூன் 09, 2025 15:38

செய்தியில் முழுமை இல்லை. ஓட்டுனர் சொன்னது உதவி மேலாளர் சொன்னதால் வண்டியை இயக்கவில்லை . இது உண்மையென்றால் ஓட்டுனர் மீது துறை நடவடிக்கை எடுக்கமுடியாது. இதில் ஓட்டுனர் பொய் சொல்ல வாய்ப்புஇல்லை. இதனை உறுதிப்படத்தவேண்டியது போக்குவரத்து நிறுவனம்.


Padmasridharan
ஜூன் 09, 2025 14:03

காவலர்கள் கூடதான் கடற்கரை போன்ற பொது இடங்களில் shoe போட்ட காலால் எட்டி உதைத்தும் கன்னத்தில் அறைந்தும் பணத்தை புடுங்குகிறார்கள். . Diamiss செய்யாமல் suspension / transfer என்கிற தைர்யம்


Manaimaran
ஜூன் 09, 2025 13:52

கை. கால். உனக்கும் இருக்குது. திருப்பி ஏண் அடிக்கல?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை