உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்கள் மீது தாக்குதல்; இ.பி.எஸ்., கண்டனம்

மக்கள் மீது தாக்குதல்; இ.பி.எஸ்., கண்டனம்

சென்னை: ஒகேனக்கல் வனப்பகுதியில் பூர்வகுடி மக்களை வெளியேற்ற அவர்களின் வீடுகளை உடைத்து, பெண்களைத் தாக்கி வன்முறையைக் கையாண்ட வனத்துறை மற்றும் போலீசார் செயலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே வனப்பகுதியில் உள்ள பூர்வகுடி மக்களை வெளியேற்ற அவர்களின் வீடுகளை உடைத்து, பெண்களைத் தாக்கி வன்முறையைக் கையாண்ட திமுக அரசின் வனத்துறை மற்றும் போலீசார் செயலுக்கு எனது கடும் கண்டனம். மண்ணின் மைந்தர்களான பூர்வகுடி மக்களை அடிப்படை மனிதாபிமானம் கூட இன்றி வலுக்கட்டாயமாக அவர்களின் இருப்பிடத்தை விட்டு அராஜகப் போக்குடன் வெளியேற்றுவதும், பெண்கள் மீது ஆண் போலீசார் வன்முறையில் ஈடுபடுவதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. சட்டத்தின் நெறிகளை மீறி செயல்பட்ட வனத்துறை மற்றும் போலீசார் மீது தக்க நடவடிக்கை எடுத்து, பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துமாறு முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

UTHAMAN
மே 12, 2024 12:25

மொத்தத்தில் தமிழகம் காவல்துறையின் ராஜ்ஜியமாக மாறிவருகிறது


Ramesh Sargam
மே 12, 2024 12:20

இபிஎஸ், இப்ப எல்லாம் ஓப்பனா நெற்றியில் விபூதி வைத்துக் கொள்கிறார் தேர்தல் நேரத்தில் மட்டும் விபூதி வைக்க விரும்பவில்லை எல்லாம் ஒரு காரணத்திற்காக


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை