உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் விருது

தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் விருது

மதுரை: தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த 6 பேருக்கு சேவா ரத்னா விருதுகளை தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.மதுரையில், ஸ்ரீ ராதா மாதவர் திருக்கல்யாண வைபவம் மற்றும் பாகவத மேளா கடந்த 3 நாட்களாக மதுரை எஸ்.எஸ்.காலனி பிராமண கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் மாநிலத் தலைவர் பழனி ஹரிஹர முத்தையர் தலைமை தாங்கினார். நிகழ்வில் ஆய்க்குடி குமார் பாகவதரின் , ஸ்ரீ ராதா மாதவர் கல்யாண உற்சவம், ஆஞ்சநேயர் உற்சவம், மகா தீபாராதனைகள் நடந்தன.நிகழ்வில் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் ஆன்மிகம், வைதீகம், கலை, சமூகத் தொண்டுகளில் சிறப்புற சேவை செய்த பாகவதர் ஆய்க்குடி குமார், மதுரை மாநகர வைதிக சமாஜம் தலைவர் ஸ்ரீதர் வாத்யார் மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவன நெல்லை பாலு, ஆன்மிக எழுத்தாளர் மு.ஆதவன், சமையல்கலை நிபுணர் கிருஷ்ணமூர்த்தி நாதஸ்வர வித்துவான் பரவை பஞ்சாபகேசன் ஆகிய 6 பேருக்கு சேவா ரத்னா விருதுகள் வழங்கி கவுரவித்தார்.முன்னாள் எம்எல்ஏ தமிழரசன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் புதூர் ராமகிருஷ்ணன்,பிராமண கல்யாண மண்டபம் தலைவர் சங்கர நாராயணன் அம்மா கேட்டரிங் உரிமையாளர் கிருஷ்ண ஐயர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். பிராமண சமாஜ மதுரை மாவட்ட தலைவர் ரவி, செயலாளர் ஸ்ரீ ராமன், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Krishnamurthy Venkatesan
அக் 08, 2025 20:13

ப்ராமண திருமண வயது வந்த ஆண் பெண் ஐ காலாகாலத்தில் ஜாதகம் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் இல்லாமல் நல்ல குடும்பமாக இருந்தால் ப்ராஹ்மண ஜாதியிலேயே திருமணம் செய்துகொள்ள வேண்டும்.தற்போதுள்ள நிலையில் வேறு மதத்தை, ஜாதியை சேர்ந்தவர்களை திருமணம் செய்யும் போக்கு அதிகரித்து உள்ளது. பெரியவர்கள் எல்லாம் ஓன்று சேர்ந்து இதற்கான காரணங்களை கண்டறிந்து குறைகளை நீக்கி நல்ல வழி முறைகளை சொல்லவேண்டும். உபன்யாசங்களில் இதுகுறித்து அறிவுரை சொல்ல வேண்டும்.


Rathna
அக் 08, 2025 19:37

1. ஒற்றுமையாக இருங்கள். இந்த சமுதாயம் இந்த நாட்டிற்காக எவ்வளோவோ செய்து உள்ளது - மொழிக்கு, இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு. அதன் மீது, உங்கள் சமூகத்தின் மீது பெருமை கொள்ளுங்கள். உங்கள் சமூகம் மட்டும் இல்லாவிட்டால், இந்த நாடே இன்னோர் பாகிஸ்தானாக அல்லது ஆப்கானிஸ்தானாக மாறி இருக்கும். ஹிந்து மதம் தான் இந்த நாட்டின் ஆணிவேர். அதற்கு பல சமுதாயங்கள் உதவி உள்ளது. அதில் நீங்கள் ஒரு முக்கிய பங்கு என்பதை எல்லாருக்கும் எடுத்து சொல்லுங்கள்.


Madhusudhanan Kuppuswami
அக் 08, 2025 18:44

நாம் ஒற்றுமையாக இருப்போம் .


Sundar R
அக் 08, 2025 17:26

ஆறு பேருக்கு புரஸ்காரங்கள் வழங்கும் மதுரை தாம்ப்ராஸ் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவை சிறப்புடன் நடத்தி, அனைத்து பிராமணர்களுக்கும் நல்வழி காட்டிய தமிழ்நாடு பிராமண சமாஜத்தின் பொறுப்பாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். இதற்குமேல், அதிமுக என்பதனை, தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று கருத்தில் கொள்ளவும். தமிழ்நாடு பிராமண சமாஜத்தின் விழாக்குழுவினர் மதிப்பிற்குரிய திரு. ஆர். வி. உதயகுமார் அவர்களை அழைத்தது சரியானது. மிகவும் பொருத்தமானது. பிராமணர்கள் அனைவரும் ஐயர், ஐயங்கார், ராவ், நம்பூதிரி என்ற எந்த ஒரு வித்தியாசமும் பார்க்காமல், வேறு உட்பிரிவுகள், மாவட்டங்கள், இதர வேறுபாடுகள் எதையும் பார்க்காமல் தமிழகத்தில் உள்ள பிராமணர்கள் அனைவரும் எல்லா விஷயங்களிலும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். பிராமணர்களுக்குள் ஒருவருக்கொருவர் தீங்கு செய்யக்கூடாது. அப்போது தான் பிராமணர்களுக்கு யார் உண்மையில் தீங்கு செய்கிறார்கள் என்பதை கண்டறிய முடியும். ஒற்றுமையோடு இருந்தால் தான் நாம் பலமானவர்கள் என்பதை உணரமுடியும். அதற்கு, நாம் ஒற்றுமையுடன் ஒரே கட்சிக்கு, அதுவும் பெரிய கட்சிக்கு ஓட்டு போட வேண்டும். தேர்தலுக்கு முன்பாகவே தமிழகத்திலுள்ள எல்லா பிராமணர்களையும் பெரிய கட்சியான அதிமுகவுக்கு ஓட்டு போடும்படி அறிவுறுத்த வேண்டும். எந்த பிராமணருக்காவது, அதிமுகவுக்கு ஓட்டு போடுவதில் பிரச்சினை இருந்தால், அவர்கள் மனம் நோகாத வகையில், அவருக்கு காரணங்களை விளக்கி, அவரே மனமுவந்து அதிமுகவுக்கு ஓட்டு போடும் படி செய்ய வேண்டும். எல்லா பிராமணர்களும் அதிமுகவுக்கு ஓட்டு போட்டால், அதிமுக வெற்றி பெற்றது என்று தேர்தல் முடிவுகள் வரும்போது, தமிழகம் முழுவதும் உள்ள உள்ள பிராமணர்கள் அனைத்து வீடுகளிலும், அனைத்து கிராமங்களிலும், அனைத்து நகர/மாநிலங்களிலும் [58 ஆண்டுகளாக மகிழ்ச்சி என்றால் என்ன என்பதே தெரியாத] பிராமணர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எல்லா பிராமணர்களும் மகிழ்ச்சியாக இருப்பது தான் நமது எண்ணம். ஏன் அதிமுக ஆட்சிக்கு வந்தால் நல்லது என்று கேட்டால், நான்கு வருடங்களில் 2000 கோயில்களை எல்சிபி இயந்திரங்களைக் கொண்டு இடித்துத் தள்ள மாட்டார்கள். பிராமணர்களுக்கும் மற்றும் சில சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கோயில்கள் தானே வாழ்வாதாரம். கோயில்களை இடிப்பவர்களுக்கு அறிவாளிகள் நிறைந்த சமுதாயத்தினரான‌ பிராமணர்கள் ஏன் ஓட்டு போட வேண்டும்? கோயிலை இடிப்பவன் நமது மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக, அவனுக்கு ஓட்டு போடுவது, அதுபோன்ற பிராமணர்கள், அயோக்கியர்களுக்கு ஆதரவு அளிப்பது போன்றதாக ஆகிவிடும் இல்லையா? இத்தனை வருடங்களாக பிராமணர்கள் இதை கவனிக்காமல் விட்டதால் தான் தற்போது அயோக்கியர்கள் புகழ்மிக்க வாழ்வு வாழ்கிறார்கள். அனைத்து பிராமணர்களும் யோசிக்க வேண்டியது என்னவென்றால், நான்கு வருடங்களில் 2000 கோயில்களை இடித்ததால், பரம ஏழைகளான‌ 2000 அர்ச்சகர்கள் மற்றும் 2000 தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் தங்களது வேலையையும் , அடிப்படை வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர் அல்லவா? எனவே, கோயில்களை இடிக்கும் கட்சிக்கு பிராமணர்களும், பட்டியல் சமுதாய மக்களும் ஓட்டு போடக்கூடாது. அதிமுக ஒரு மிகப்பெரிய கட்சியாக, நல்ல கட்சியாக இருப்பது, பிராமணர்களுக்கு, குறிப்பாக ஏழை பிராமணர்களான அர்ச்சகர்கள், சமையல் கலைஞர்கள், புரோகிதர்கள், வேத பாடசாலை ஆச்சாரியர்கள், வித்யார்த்திகள், சமையல் கலைஞர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் நல்லது. அதிமுக கட்சித் தலைவர்கள் பெரிய மனது வைத்து, பிராமணர்களின் ஏழ்மை நிலையினை நினைத்து, எதிர்வரும் 2026 அசெம்பிளி தேர்தலில் ஒரு நான்கைந்து சீட்களில் பிராமண வேட்பாளர்களை நிறுத்தினால் அச்செயல், உயிரிழக்கும் நிலையில் உள்ள ஒரு நோயாளியைக் காப்பாற்றி, உயிர்பிழைக்க வைத்த ஒரு மருத்துவர் செய்த செயலுக்கு அது ஒப்பானதாகும். அனைத்து பிராமணர்களும், அவர்களுக்குள் பழைய பகை எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அவை அத்தனையையும் மறந்து, எல்லோரும் ஒன்று சேர்ந்து அதிமுகவுக்கு வாக்களித்தால், அதிமுகவும் பலமாகும். பிராமண சமூகமும் பலமாகும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை