உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் மோசமான வானிலை; 30 நிமிடம் வானில் வட்டமடித்த விமானம்!

கோவையில் மோசமான வானிலை; 30 நிமிடம் வானில் வட்டமடித்த விமானம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையை போன்று கோவையிலும் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.கோவையில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. மோசமான வானிலையால் மும்பையில் இருந்து 182 பயணிகளுடன் கோவை வந்த ஏர் இந்தியா விமானம், 30 நிமிடம் வானில் வட்டமடித்த பின் தரையிறக்கப்பட்டது. டில்லியில் இருந்து வந்த இண்டிகோ விமானம் தரையிறக்க முடியாமல் கொச்சி விமானநிலையத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.அதேபோல், சென்னையிலும் கடும் பனி மூட்டம் காரணமாக சென்னைக்கு வர வேண்டிய ரயில்கள், விமானங்களின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே செல்லும் ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சிந்தனை
பிப் 07, 2025 19:44

மனிதர்களாலும் விஞ்ஞானத்தினாலும் முடியாதது எதுவுமே இல்லை என்று சொன்ன ஈரோடு சாராயசாமியை அனுப்பி இருந்தால் உடனே விமானத்தை தரை இறக்கியிருப்பார்


சண்முகம்
பிப் 07, 2025 10:32

பிப்ரவரி மாதத்தில் சென்னையில் பனி மூட்டம். ஒரு மாதகாலம் கடந்து சென்னையில் பருவ மழை முடிவு. கோடை என்ன காய்ச்சப்போகிறதோ?


புதிய வீடியோ