உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சுதீஷ், கிருஷ்ணசாமியுடன் பா.ஜ., கூட்டணி பேச்சு

 சுதீஷ், கிருஷ்ணசாமியுடன் பா.ஜ., கூட்டணி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கவர்னர் தேநீர் விருந்தில் பங்கேற்ற தே.மு.தி.க., பொருளாளர் சுதீஷ், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரை, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தனித்தனியே சந்தித்து நீண்ட நேரம் பேசினார். அப்போது, கூட்டணி குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பு, அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அ.தி.மு.க., - பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ம.க., - அ.ம.மு.க., த.மா.கா., போன்ற கட்சிகள் இணைந்துள்ளன. மேலும் சில கட்சிகளை கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, பிரேமலதா தலைமையிலான தே.மு.தி.க.,வையும், கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியையும் சேர்க்க, பேச்சு நடந்து வருகிறது. இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி, கவர்னர் மாளிகை சார்பில், தேநீர் விருந்துக்கு கவர்னர் ஏற்பாடு செய்திருந்தார். தேநீர் விருந்து முடிந்ததும், நயினார் நாகேந்திரன், பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர், சுதீஷிடம் 10 நிமிடங்களுக்கும் மேலாக தனியே பேசினர். கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகித்தபோது ஏற்பட்ட மனக்கசப்புகள் தொடர்பாக, நயினாரிடம் சுதீஷ் மனம் விட்டு பேசியதாக கூறப்படுகிறது. அதேபோல், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியுடனும், நயினார் நாகேந்திரன், அரவிந்த் மேனன் தனியே பேசினர். சந்திப்பு முடிந்து புறப்பட்டபோது, இது குறித்து பதில் அளிக்க, சுதீஷ் மறுத்து விட்டார். நயினார் நாகேந்திரன் கூறுகையில், ''தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ் எனக்கு நல்ல நண்பர். தற்செயலாக இந்த நிகழ்வில் சந்தித்தோம். அப்போது, அரசியல் எதுவும் பேசவே இல்லை. இன்று நடந்தது முழுக்க முழுக்க தேநீர் விருந்து தான்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Gentleman
ஜன 27, 2026 17:18

சுதீஷ் எல்லாம் ஒரு தலைவன் என்று கூறுவது கஷ்டமாக இருக்கிறது பிரேமலதா சுதீஷ் இவர்களில் யாரையும் முக்கியத்துவம் கொடுக்க கூடாது யாரும் கூட்டணையில் சேர்க்க கூடாது தனியே தேர்தலில் நின்று நிருபக்க வேண்டும்


RAVINDRAN.G
ஜன 27, 2026 17:04

புதிய தமிழகம் கிருஷ்ணசுவாமி சேர்வது நல்லதுதான். தேமுதிக வுக்கும் பிஜேபியை விட்டால் வேறு வழி கிடையாது . பிரேமலதா சுதீஷ் தன் கட்சியின் தகுதி அறிந்து தொகுதிகளை கேட்கவேண்டும். ஒரு சில சீட்டுக்காகவும் பெட்டிக்காகவும் யோசித்து பார்க்காமல் திமுக ஆட்சிக்கு வந்துவிடாமல் தடுக்கவேண்டும்.


Anantharaman Srinivasan
ஜன 27, 2026 12:26

நயினா.. நீ பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும். பனைமரத்தின் கீழ் அமர்ந்து பாலை குடித்தேன் என்றால் கேட்பவர்கள் கேனையர் அல்லர்.


duruvasar
ஜன 27, 2026 10:46

அரசியல் இல்லை என்றால் ஒருவேளை சமோசா காரமாக இருந்தைப்பற்றி காரசாரமாக பேசியிருப்பார்களோ?


Perumal Pillai
ஜன 27, 2026 10:23

ஏன் எல்லோரும் பிரேமலதாவை வெறுக்கின்றனர் ?


c.k.sundar rao
ஜன 27, 2026 11:28

Because she is after money .


Thravisham
ஜன 27, 2026 15:13

பிரேமலதா பொட்டிலதா


krishnamurthy
ஜன 27, 2026 09:25

கிருஷ்ணசாமி அவர்களை சேர்ப்பது மித நல்லது. ஆனால் தே மு தி க வேண்டாம்


angbu ganesh
ஜன 27, 2026 09:54

ஏதோ சீட் கிடைச்ச போதும்னு நெனைச்சு விஜயகாந்தின் மீதமிருந்த மொத்த மானதையும் வாங்கிட்டாங்க


raju
ஜன 27, 2026 09:23

ஆமாண்


Anbuselvan
ஜன 27, 2026 08:31

தேமுதிகவை ஏன் கழட்டி விட்டு தனியாக போட்டியிட வைக்க மாட்டேன் என்கிறார்கள். திரு விஜயகாந்த் அவர்களோடு அந்த கட்சி தனது பலத்தையும் வோட்டு சதவிகிதத்தையும் இழந்து விட்டது. அவர்களது வோட்டு சதவிகிதம் 1% முதன் 2% வரைதான். தனித்து போட்டியிட வைத்து அவர்களுக்கு பாடம் புகட்டாமல் ஏன் இந்த அரசியல் கட்சிகள் தடுமாறுகின்றன என்பது புரியவில்லை. என்னதான் அரசியல் கணக்கு என சொன்னாலும் அதை ஏற்று கொள்ள முடியவில்லை.


Haja Kuthubdeen
ஜன 27, 2026 09:04

இந்த ஒரு சதவீத ஓட்டுகள்தான் பல தொகுதிகளின் வெற்றிகளை மாற்றியமைத்து விடுது...சென்ற தேர்தலில் அஇஅதிமுக 15 தொகுதிகளை இப்படி இழந்தது. உதாரணம் காட்பாடி. அதனால்தான் மற்ற சிரிய கட்சிகள் பேரம் பேசுகின்றன. என்னை பொறுத்தவரை தேமுதிகவிற்கு 8 முதல் 10 தொகுதிகள் நியாயமானது.


Anbuselvan
ஜன 27, 2026 15:12

நீங்கள் கூறுவது அரசியல் கணக்கில் வரும். அதற்காக அதீதமான கோரிக்கையை தேதிமுக வைக்கிறது என மீடியா மூலமாக தெரிகிறது. பார்ப்போம் என்ன ஆகும் என்று.


Prabu
ஜன 27, 2026 08:16

ஒரு தொகுதியே இவர்களுக்கு அதிகம் .


பாலாஜி
ஜன 27, 2026 08:09

தமிழ்நாட்டில் பாஜக நிலைமை மிகவும் கேவலமாக இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.


N Sasikumar Yadhav
ஜன 27, 2026 09:32

உங்க கோபாலபுர திராவிட எஜமான் நிலைமை மிக கேவலமாக இருக்கிறது ஊழல்வாத இத்தாலிய கான்கிராஸின் கொத்தடிமையாக மாறிவிட்ட திராவிட மாடலை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது


Rajasekar Jayaraman
ஜன 27, 2026 15:23

திருட்டு திராவிடதை காப்புத்தொகை வாங்காமல் செய்ய இந்த பேராசை கூட்டத்துடன் பேசவேண்டியுள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை