உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ் மீது சமூக விரோதிகளுக்கு பயமில்லை: அண்ணாமலை காட்டம்

போலீஸ் மீது சமூக விரோதிகளுக்கு பயமில்லை: அண்ணாமலை காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ எந்த பயமும் இல்லை என்பது அண்ணா பல்கலை. பாலியல் தாக்குதல் மூலம் வெளிப்படையாக தெரிவதாக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k3hi54wo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி ஒருவருக்குப் பாலியல் தாக்குதல் நடைபெற்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து விட்டது. தினமும் படுகொலைச் சம்பவங்கள், போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு, பொதுமக்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத இருண்ட காலத்தில் இருப்பது போன்ற சூழ்நிலையில் தமிழகம் தற்போது இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. குறிப்பாக, குற்றவாளிகள் திமுகவினர் என்றால், அவர்கள் மீதான நடவடிக்கை தாமதப்படுத்தப்படுகிறது. மாநிலத் தலைநகரத்தின் மையப்பகுதியில், பொறியியல் கல்வி தலைமை நிறுவன வளாகத்தின் உள்ளே, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது என்றால், சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ எந்த பயமும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநகர காவல்துறையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதல்வரும், மாணவி மீதான பாலியல் தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்று, பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Madras Madra
டிச 26, 2024 11:21

எங்கிட்ட இரும்புக்கரம் இருக்குது அத வச்சி அடக்குவேன் அப்டின்னு அப்ப அப்ப சத்தம் கேட்டுச்சே அதெல்லாம் உதாரா


Constitutional Goons
டிச 25, 2024 23:23

மோடியின் கீழ் உள்ள பாஜவில் உள்ள அனைவரும் அண்ணாமலை கூறுவதைப்போல் தான் உள்ளார்கள்


என்றும் இந்தியன்
டிச 25, 2024 18:36

சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ எந்த பயமும் இல்லை -அண்ணாமலை சமூக விரோதிகளுக்கு காவல்துறை மீது எந்த பயமும் இல்லை - பிரேமலதா விஜயகாந்த் தமிழகத்தில் அனைத்து இடங்களிலுமே பெண்களுக்கு பாதுகாப்பில்லை- டி.டி.வி. தினகரன் திமுக ஆட்சியில் குற்றவாளிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பு இல்லை: ராமதாஸ் என்ன திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசே உனது ஆட்சி இப்படி சந்தி சிரிக்கின்றது


அப்பாவி
டிச 25, 2024 18:23

இன்னிய தத்தி ஸ்காட்காந்து யார்டு போலுஸ் லட்சணத்த விஜய் டி.வி சீரியலில் கண்டு மகிழுங்கள். அப்படியே புல்லரிக்குது. அதுதான் உண்மையிலும் நடக்குது.


hari
டிச 25, 2024 22:03

உன்னை எவளோ வாட்டி கழுவி உதியசசு...


Sampath Kumar
டிச 25, 2024 17:10

உங்க ஆட்சி மீதும் அவர்களுக்கு பயம் இல்லை அதையும் சேர்த்து சொல்லு


பாமரன்
டிச 25, 2024 17:00

.....போலீஸ் மீது சமூக விரோதிகளுக்கு பயமில்லை.... உங்களையும் உங்க கம்பெனியில் இருக்கும் யாரையும் இங்கே ஒருத்தரும் மதிக்கறதில்லை... அதுக்காக எங்களை படுத்தாம ஒதுங்கி போறீங்களா என்ன... புரிஞ்சா பிஸ்தா புரியலைன்னா பகோடா...


சகாயராஜ்,அடைக்கலபுரம்
டிச 25, 2024 18:56

ஏலே என்னலே பாதாம் பிஸ்தான்னுகிட்டு நீ எல்லாம் கருத்து போடலைன்னு எவம்லே அழுதான் பேசாம போலே அங்கிட்டு...


பாமரன்
டிச 25, 2024 16:57

இந்த பல்கலைக்கழகம் விஷயத்தில் தினபூ மற்றும் மத்தவாளுக்கு மட்டுமே அட்வைஸ் அள்ளித்தெளிக்கும் எங்க ஆடு ஸார் மகான் எப்பவுமே பப்பு வேகாமல் பல்பு வாங்குறது அதன் பெயரை சொல்லும் போது... எப்பவும் யார் அண்ணான்னு சொன்னாலும் அண்ணாதுரை அப்பிடின்னு போடும் தினபூ மற்றும் தனக்கு தகுதி தராதரம் இல்லைன்னா கூட அண்ணாவை பற்றி அண்ணாதுரை அப்பிடின்னு சொல்லும் ஆடு ஸார் மகானும் இந்த யூனிவர்சிடி பெயர் சொல்லும் போது... ச்சே ச்சே பாவம்...


Bala
டிச 25, 2024 17:06

டேய் சமசீர் தமிழ்ல ஒழுங்கா எழுத கத்துக்கோ. விட்டா ஒளறிக்கிட்டே போற? எங்க தலைவர் அண்ணாமலை அவர்களின் பெயரை கேட்டாலே திமுக தலைங்களுக்கு டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆகுது. இதுல நீ வேற இங்கேவந்து காமெடி பண்ணிட்டு திரியிற ?


பாமரன்
டிச 25, 2024 17:25

இந்த பாலா போன்ற கிறுக்கன்க இருக்கும் இடத்தில் நாம் ஏன் எழுதனும்னு தான் பொதுவான வாசகர்கள் அமைதி காக்கிறார்கள்... இவனையெல்லாம் ஆர்டர் குடுத்து செஞ்சிருப்பாங்க போல... ஸாரி கய்ஸ்... இந்த மாதிரி ஈனப்பிறவிகளுக்கு அதுக பாஷையில் தான் சொல்லவேண்டும்.....


Arunkumar,Ramnad
டிச 25, 2024 18:51

யோவ் பக்கோடா ஏன்யா இப்படி சம்பந்தமே இல்லாம உளறிக் கொட்டுற


raja
டிச 25, 2024 20:12

அதெல்லாம் சரி எங்கோ நிபர்யாவுக்கு நடந்த போது இங்கே விளக்கு புடிச்சு போராட்டம் பண்ணிய கனிமொழி இதுக்கும் அது போல் போராட்டம் நடத்துவங்களான்னு கேட்டு சொல்லு கொத்தடிமையே...


raja
டிச 25, 2024 20:20

ஏல கொத்தடிமையே இந்த ஆடு மாடுண்ணு உருட்டாம திருட்டு திராவிட மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பா இருக்கா இல்லையான்னு மட்டும் கருத்த சொல்ல பாரு ..


N.Purushothaman
டிச 25, 2024 16:29

மாற்றான் தோட்டத்து மல்லிகை புகழ் அண்ணாதுரை பெயர் தாங்கிய பல்கலையில் நடந்துள்ள கொடூரம் என்றே கூற வேண்டும் ...


venugopal s
டிச 25, 2024 16:27

இவரைப் போன்றவர்கள் ஐ பி எஸ் ஆகி போலீஸ் அதிகாரி ஆனால் யாருக்குத் தான் பயம் வரும்? சிரிப்பு தான் வரும்!


ghee
டிச 25, 2024 16:57

சரி போய் தனியா உக்காந்து சிரிச்சிட்டு போயேன்....


Bala
டிச 25, 2024 17:14

கர்நாடகாவில் போய் கேட்டுப்பாரு. அண்ணாமலை அவர்களின் பேரை சொன்னாலே எல்லா திருட்டு பயலுகளுக்கும் பேதியாயிடும். தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் திரு அண்ணாமலை அவர்கள்தான். அப்ப தெரியும் எவனுக்கு சிரிப்புவரும்னு. ஒரு திருடனும் தப்பிக்க முடியாது. எல்லா திருட்டு கும்பலுக்கும் ஜெயில்ல லாடம்தான்


sridhar
டிச 25, 2024 20:36

இடுக்கண் வருங்கால் நகுக . திமுகவுக்கு இடுக்கண் வந்துடுச்சு . நல்லா சிரிச்சிக்க .


N.Purushothaman
டிச 25, 2024 16:26

காவல்துறை ஆளும் கட்சியின் ஏவல்துறையாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றது... திருட்டு திராவிடனுங்க இதுக்கும் முட்டு கொடுப்பானுங்க.... ஸ்காட்லான்ட் யார்டு போலீசுக்கு நிகரான தமிழக காவல்துறைன்னு பீத்திக்கிட்ட காலம் எல்லாம் போயி கக்கா போற காவல்துறைன்னு ஆகிடுச்சு ...


புதிய வீடியோ