உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கீதையில் சொன்னபடி வாழ சத்தியம், அஹிம்சையை கடைபிடிக்க வேண்டும்; சின்மயா விழாவில் அண்ணாமலை பேச்சு

கீதையில் சொன்னபடி வாழ சத்தியம், அஹிம்சையை கடைபிடிக்க வேண்டும்; சின்மயா விழாவில் அண்ணாமலை பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகை; கீதையில் சொன்னபடி வாழ வேண்டும் என்றால் சத்தியம், அஹிம்சை என்ற இரண்டு விஷயத்தை நாம் கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.நாகை சின்மயா மிஷன் பள்ளியில் 50 ஆலயங்களின் திருப்பணி நிறைவு விழா மற்றும் பகவத் கீதை பாராயணம் விழா நடைபெற்றது.இந்த விழாவில் அண்ணாமலை கலந்து கொண்டார்.https://www.youtube.com/embed/O338CKnly_wஅப்போது அவர் பேசியதாவது; ஹிந்து தர்மம் காலம் காலமாக புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதில் பிரச்னை வரும் போது எல்லாம் பெரிய குருமார்கள் அதை தீர்த்துவிடுவார்கள். எந்த தர்மமாக இருந்தாலும் காலத்திற்கு தகுந்தாற்போல் தம்மை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.கடந்த 200 ஆண்டுகளில் ஹிந்து தர்மத்திற்கு வந்து சோதனைகள் எண்ணிலடங்காதது. இந்தியாவை பொறுத்தவரை இரண்டே மதங்கள் தான். இன்று இந்துவாக இருப்பவர்கள், இன்னொருவர் இந்துக்களாக இருந்தவர்கள் என்று சுவாமி சின்மயானந்தா அடிக்கடி கூறுவார்.காலம் மாறும் போது, சூழ்நிலைகள் நிறைய நண்பர்கள் மதம் மாறி போய் கொண்டே இருக்கின்றனர். எல்லா மதமும் சம்மதம் என்ற மதத்தில் நாம் இருக்கின்றோம். இந்த மதம் யாரை பார்த்தும் பயப்பட வேண்டியது இல்லை. அப்படித்தான் ஒவ்வொரு மதத்தையும் நாம் அனுமதித்தோம்.கீதை சொல்லியபடி வாழ வேண்டும் என்றால் சத்தியம், அஹிம்சை என்ற இரண்டு விஷயத்தை நாம் கடைபிடிக்க வேண்டும். எந்த வேலை செய்தாலும் அதன் மீது ஒட்டாமல், அதன் பலன் மீது பற்று இல்லாமல் இருக்க வேண்டும்.இவ்வாறு அண்ணாமலை பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Padmasridharan
ஆக 25, 2025 04:54

சுய நலத்திற்காக மதமாரியவர்கள் ஏராளம், இந்த மதத்தில் இருந்தால் கல்வியும், வேலையும் கிடைக்குமென்று. நம்பிக்கையில் மாறியவர்கள் ஒரு சிலரே. எதன் மீதும் பற்று இருக்கக் கூடாதென்றால் அரசியல்வாதிகள் ஏன் அந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென தினசரி துடிக்கிறார்கள் சாமி. எதிர் கட்சிகளின் மேல் ஏதோ ஒன்று பேசிக்கொண்டே இருக்கிறார்களே தவிர அதனை நடுவிலேயே இறக்கிவிட்டு சரி செய்து மக்களை காப்பாற்றலாமே.


kannan
ஆக 24, 2025 21:47

கீதைக்கும் அஹிம்சைக்கும் நேரடி தொடர்பு கிடையாது. • கீதையின் முக்கிய செய்தி: • தர்மத்தை நிலைநாட்ட இம்சையும் தர்மமாகும்.


SANKAR
ஆக 24, 2025 22:14

excellent comment.appreciate.