உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைத்து மாவட்டங்களிலும் களமிறங்க பா.ஜ., திட்டம்

அனைத்து மாவட்டங்களிலும் களமிறங்க பா.ஜ., திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டசபை தேர்தலில், அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடும் வகையில், 40 தொகுதிகள் வரை பெற, தமிழக பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற பா.ஜ., 20 தொகுதிகளில் போட்டியிட்டது. அப்போது, மத்தியில் பா.ஜ., ஆட்சி, தமிழகத்தில் அ.தி.மு.க., ஆளுங்கட்சிகளாக இருந்ததால், இரட்டை இலக்க வெற்றியை, பா.ஜ., மேலிடம் எதிர்பார்த்தது. ஆனால், நான்கு தொகுதிகளில் மட்டுமே, பா.ஜ., வெற்றி பெற்றது. கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில், பா.ம.க., - அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன. ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், பா.ஜ.,வின் ஓட்டு வங்கி, 3 சதவீதத்தில் இருந்து, 11 சதவீதமாக உயர்ந்தது. தற்போது, அனைத்து தொகுதியிலும் பா.ஜ.,வுக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளனர். எனவே, வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட, பா.ஜ., விரும்புகிறது. மாவட்டத்திற்கு ஒன்று வீதம், மாநிலம் முழுதும் பரவலாக, 40 தொகுதிகளில் களமிறங்க வேண்டும் என கருதுகிறது. சிறிய கட்சிகள், பா.ஜ., சின்னத்தில் போட்டியிட விரும்பினால், அ.தி.மு.க.,விடம் இருந்து கூடுதலாக, 10 தொகுதிகள் பெற்று, அவற்றுக்கு ஒதுக்கவும் வாய்ப்புள்ளது. அதனால், 50 தொகுதிகளை அடையாளம் காணும் பணியை தமிழக பா.ஜ., மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Rengaraj
மே 16, 2025 10:37

திமுக எங்கெல்லாம் நிற்கிறதோ அங்கெல்லாம் அண்ணாதிமுக எதிர்த்து நிற்கவேண்டும். ஸ்டாலினை எதிர்த்து எடப்பாடி நிற்க வேண்டும். உதயநிதியை எதிர்த்து அண்ணாதிமுகவின் வலிமையான தலைவர் நிற்க வேண்டும். செல்வப்பெருந்தகை நின்றால் அவரை எதிர்த்து அண்ணாமலை நிற்க வேண்டும். காங்கிரஸ் எங்கெல்லாம் நிற்கிறதோ அங்கெல்லாம் பாஜக நிற்கவேண்டும். திமுக தோழமை கட்சிகள் எங்கெல்லாம் நிற்கிறதோ அங்கெல்லாம் அண்ணாதிமுக -பாஜக கூட்டணியில் உள்ள பிற தோழமை கட்சிகள் நிற்க வேண்டும். இப்படி தேர்தல் களம் காண அரசியல் கட்சிகளுக்கு தில் இருக்கிறதா ?? அண்ணாதிமுக சீட் பேரம் பற்றி பேசும்போது கூட்டணி கட்சிகள் இந்த சவாலை மையப்படுத்தி சீட் கேட்டுப்பெற வேண்டும். அப்போதுதான் அது உண்மையான போட்டி எங்களுக்கு வாக்கு வாங்கி இருக்கு அப்படின்னு என்ன உதார் வேண்டிக்கிடக்கிறது ??? இப்படி செய்யாமல் என்ன சவால் வேண்டிக்கிடக்கிறது இந்த அரசியல் கட்சிகளுக்கு ? மக்களை ஏமாற்றவா சும்மா உதார் விடுகிறார்கள் ??


கல்யாணராமன்
மே 16, 2025 10:08

இங்கே பாஜக 0 தொகுதி எடுத்து சாதனை படைக்கும். அதற்கு வெகுமதியாக அமிதஷாவை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும், கட்சியில் இருந்தும் வெளியேற்ற வேண்டும்.


கல்யாணராமன்
மே 16, 2025 10:06

அண்ணாமலைக்கு துரோகம் செய்து விட்டு பாஜகவோ அதிமுகவோ வெற்றி பெற முடியாது. துரோக அரசியல் பாடம் எடைப்பாடியிடம் அமித்ஷா கற்றுக்கொண்டு ஆட்டத்தை ஆரம்பித்தார். விளைவு மீண்டும் இங்கே திமுக ஆட்சிதான் 200 தொகுதி நிச்சயம். அதிமுக 4 தொகுதி பாஜக 0 தொகுதி கிடைக்கும்.


BALACHANDRAN
மே 16, 2025 09:47

பாரதிய ஜனதா கட்சி பொருத்தவரை ஒரு தேசிய கட்சி அவர்களின் வெற்றி தோல்வியை பற்றி கவலை படுகிறது மக்களின் வாழ்வாதாரம் கலாச்சாரம் கோட்பாடு இவற்றை செம்மை செய்து அதன் வழிகாட்டியாக வந்து கொண்டிருக்கிறது சில நண்பர்கள் கால் ஒன்ற முடியாது அதாவது ஒரு நாள் முஸ்லிம் நண்பர்களும் பாரதிய ஜனதாவை புரிந்து கொள் வார்கள்


Mohamed Younus
மே 16, 2025 08:19

நீஙகள் எவ்வளவு முயற்சி செய்தாலும் சரி தான். ப. ஜ. க தமிழகத்தில் ஒரு போதும் காலூன்ற முடியாது. இது நிதர்சனம்


Bala
மே 16, 2025 09:31

Vathutaaraya naatama


கல்யாணராமன்
மே 16, 2025 10:01

ஏற்கனவே 4 எம் எல் ஏக்கள் இருக்கும்போது கால் ஊன்ற முடியாது என்று சொல்வது அபத்தம்.


நிமலன்
மே 16, 2025 16:18

நம் தேசத்திற்கு அண்டை நாட்டிடமிருந்து அச்சுறுதல் வரும் போது கண்டன கருத்து சொல்ல துப்பில்லை. பிஜேபி தமிழ் நாட்டில் காலுன்றாதாம். திராவிட கட்சிகளுக்கு இவர்கள் முட்டு கொடுத்து கொடுத்துதான் தமிழ் நாடு சீரழிந்து நிற்கிறது.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
மே 16, 2025 08:02

நோட்டவை தாண்டிடுவோம்னு னு சொல்லு


Karthik
மே 16, 2025 07:38

மோடி ஐயா சாதனைகளை சொன்னாலே போதும் ,,,இருக்கவே இருக்கு அதிமுக ..அதற்கு இன்னும் கிராமப்புறங்களில் பலம் உண்டு ......ஆபரேஷன் சிந்தூர , வக்ப் பலன்கள் , ஜாதி வாரி கணக்கெடுப்பு எல்லாம் மிக சிறப்பாக சவாலாக இருக்கலாம் திமுகவிற்கு .கட்டாயம் மோடிஐயா பிரச்சரித்திக்கு வர வேண்டும் ,,,,,,மே மாத தேர்தலை கணக்கில் கொண்டே இன்னும் நீட்டுக்கு சரியான முயற்சி செய்யவில்லை ...நீட் பரிட்சையும் தேர்தலும் சம காலத்தில் வரும் ...திமுக இதை சரியாக கணித்து உள்ளது ...மோடி பிரச்ச்சாரம் இதை முறியடிக்கும்


Raja k
மே 16, 2025 06:45

பாத்து சூதானமா இறங்குங்க, ஆழம் தெரியாமல் காலை விடாதேனு ஒரு மொழி இருக்கு, அதனால் கொஞ்சம் செதானமா, பாத்து பத்திரமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை