உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., அவசரம் : பா.ம.க.,வில் சமரசம் ஏற்படுத்த ராமதாசுடன் பேச்சு

பா.ஜ., அவசரம் : பா.ம.க.,வில் சமரசம் ஏற்படுத்த ராமதாசுடன் பேச்சு

சென்னை; மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருவதற்குள், பா.ம.க.,வில் சமரசம் ஏற்படுத்தி, கூட்டணியை உறுதி செய்யும் முயற்சியில் பா.ஜ., இறங்கியுள்ளது. அதன் காரணமாகவே, பா.ம.க., நிறுவனர் ராமதாசை, தைலாபுரத்தில் நேற்று ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்து பேசியதாக தெரிகிறது.பா.ம.க.,வில், அப்பா -- மகன் இடையேயான மோதல் வலுத்துள்ள நிலையில், இருவரும் தனித்தனியாக தன் ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ogig8ip4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'நான் அறிவித்தபடி செயல்தலைவர் பதவியை ஏற்பதாக அன்புமணி கூறினால், அடுத்த வினாடியில் பிரச்னை தீர்ந்து விடும்' என ராமதாஸ் சொல்கிறார். அதை ஏற்க மறுக்கும் அன்புமணி, 'பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்கே அதிகாரம்; நானே தலைவராக தொடர்வேன்' என, விடாப்பிடியாக இருக்கிறார்.இந்நிலையில், நேற்று காலை 9:15 மணியளவில், தன் இளைய மகள் சஞ்சுத்ராவுடன், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்ற அன்புமணி, தந்தை ராமதாசை சந்தித்து பேசினார். 45 நிமிடங்களுக்கு மேலாக நீடித்த இச்சந்திப்பின்போது, அன்புமணியின் அம்மா சரஸ்வதி, அக்கா காந்திமதி ஆகியோரும் உடனிருந்தனர்.சந்திப்பு முடிந்ததும் காலை 10:00 மணிக்கு வெளியே வந்த அன்புமணி, காத்திருந்த நிருபர்களிடம் எதுவும் தெரிவிக்காமல் காரில் ஏறிச் சென்றார். ராமதாசிடம் பேசிய பின், தன் அம்மா, அக்காவிடம் அன்புமணி அதிக நேரம் பேசியுள்ளதாக பா.ம.க.,வினர் கூறினர்.

ஆலோசனை

தைலாபுரம் தோட்டத்திலிருந்து அன்புமணி புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில், 'துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி, முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் வந்தனர். மூன்று மணி நேரம் ராமதாசுடன் ஆலோசனை நடத்திய இருவரும், மதியம் 1:15 மணிக்கு வெளியே வந்தனர். அப்போது பேட்டியளித்த குருமூர்த்தி, ''பா.ஜ., சார்பில் ராமதாசை சந்திக்கவில்லை. நீண்ட கால நண்பர் என்ற அடிப்படையில் அவரை சந்தித்து பேசினேன். என்னை ராமதாசுக்கு மிகவும் பிடிக்கும். அதனால், நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அன்புமணி வந்ததே எனக்குத் தெரியாது,'' என்றார்.

அதிரடி

கடந்த ஏப்ரல் 11ல் சென்னை வந்த அமித் ஷா, அ.தி.மு.க., உடனான கூட்டணியை அறிவித்தார். அப்போதே, பா.ம.க., உடனான கூட்டணியையும் அறிவிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், ஏப்ரல் 10ம் தேதியே, பா.ம.க., தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி, ராமதாஸ் அதிரடி காட்டியதால், அமித் ஷாவின் எண்ணம் ஈடேறவில்லை.அதன்பின், நாளை மறுநாள் மதுரையில் நடக்கும் பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிறார். சென்னை வருகையின்போது செய்ய முடியாததை, மதுரை வருகையின்போது நடத்திக் காட்ட அமித் ஷா விரும்புவதாக கூறப்படுகிறது. கடந்த மே 29ம் தேதி பேட்டியளித்த ராமதாஸ், 'கடந்த லோக்சபா தேர்தலில், நான் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டேன். ஆனால், அன்புமணியும் அவரது மனைவு சவுமியாவும், பா.ஜ., கூட்டணி அமைக்க வற்புறுத்தினர். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்திருந்தால், பா.ம.க.,வுக்கு மூன்று இடங்கள் கிடைத்திருக்கும்' என்றார்.பா.ஜ., கூட்டணிக்கு எதிராக ராமதாஸ் இருப்பதால், அவரை சரிகட்ட பா.ஜ., தலைமை விரும்புகிறது. அதை செயல்படுத்தவே, குருமூர்த்தியும், துரைசாமியும் நேற்று ராமதாசுக்கு துாது சென்றதாக தெரிகிறது. ஏப்ரல் 11ல், அமித் ஷா சென்னை வந்தபோது, குருமூர்த்தி வீட்டுக்குச் சென்று நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். பா.ம.க.,வை கூட்டணிக்கு கொண்டு வருவது தொடர்பாகவே, அப்போது பேசியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், அமித் ஷா வருகைக்கு முன், பா.ம.க.,வில் அப்பா -- மகன் இடையே சமரசம் ஏற்படுத்த, இந்தச் சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, பா.ம.க., - பா.ஜ., நிர்வாகிகள் பலரிடம் பேசியபோது, 'குருமூர்த்தி கூறியது போல, நண்பர் என்பதற்காக ராமதாசை சந்தித்திருந்தால், மூன்று மணி நேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை. இந்த சந்திப்பின்போது, ராமதாசிடம், தொலைபேசியில் அமித் ஷாவும் பேசியிருக்கிறார். அதனால் தான், சந்திப்பு இவ்வளவு நேரம் நீண்டுள்ளது. இது முழுக்க முழுக்க கூட்டணிக்கான சமாதான முயற்சிதான்' என்றனர்.அப்பா -- மகன் மோதல் நீடிப்பது, பா.ம.க.,வை பலவீனமாக்கி விடும் என்பதையும், தி.மு.க.,வுக்கு அது சாதகமாகி விடும் என்பதையும், ராமதாசிடம் குருமூர்த்தியும், சைதை துரைசாமியும் எடுத்துக் கூறியதாக, பா.ம.க.,வினர் தெரிவிக்கின்றனர்.

கட்சி நிர்வாகிகளிடம் அன்புமணி பேசும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், 'பா.ம.க.,வில் நடக்கும் பிரச்னைகளுக்கு, தலைமை அலுவலக செயலர் அன்பழகன் தான் காரணம். ராமதாசின் கை, கால்களை பிடித்து, மாவட்ட செயலர் பதவிகளை, 5 லட்சம் ரூபாய்க்கு விற்று வருகிறார். கட்சி மற்றும் சமுதாய துரோகியான அவருக்கு வாத்தியார் துணையாக இருக்கிறார்' என, அன்புமணி கூறியுள்ளார். அவர் குறிப்பிடும் அன்பழகன், ராமதாசுக்கு நெருக்கமானவர். அன்புமணி குறிப்பிடும் வாத்தியார் ஜி.கே.மணி என்றும் பா.ம.க.,வினர் சொல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

venugopal s
ஜூன் 06, 2025 15:14

அழித்தே பழக்கப் பட்டவர்களுக்கு ஆக்கத் தெரியுமா? பிரித்தே பழக்கப் பட்டவர்களுக்கு இணைக்கத் தெரியுமா?


Tiruchanur
ஜூன் 06, 2025 12:53

ரொம்ப துள்ளுறான். காசுக்காக கட்சியையே விற்பான் அவன். ஒவ்வொரு தேர்தலின் போதும் எந்த பெரிய கட்சி அதிமுக வோ திமுக வோ அதிக பணம் கொடுக்குதோ அவங்க கூட போயிடுவான். அன்புமணி அதை சரி செய்ய பார்க்கிறார். கூட்டணி நீடித்து இருக்கவேண்டும் என நினைக்கிறார்.


Madras Madra
ஜூன் 06, 2025 12:47

இதெல்லாம் வியாபார மற்றும் விளம்பர யுக்தி


SP
ஜூன் 06, 2025 12:34

எல்லோரிடமும் இறங்கி போய் கூட்டணி அமைப்பதற்கு, திரு அண்ணாமலையையே தலைவராக நீடிக்க வைத்திருந்தால் கூட்டணிக்கு தானாகவே மற்றவர்கள் வந்திருப்பார்கள்.


ராமகிருஷ்ணன்
ஜூன் 06, 2025 11:57

மரம்வெட்டி கோடாரி கைப்பிடி முறிந்து காலில் விழுந்து விட்டது, சரி பண்ண வைத்தியம் நடக்கிறது.


Haja Kuthubdeen
ஜூன் 06, 2025 10:43

மருத்துவர் ஐயா இல்லாமல் பாமக இல்லை.அன்புமணி தந்தையை எதிர்த்து அரசியல் செய்வதை விடனும்.


Manaimaran
ஜூன் 06, 2025 09:03

பணம் குடுங்க சரியாகிடும்


SIVA
ஜூன் 06, 2025 08:46

ராமதாஸ் இன்று ஒரு கூட்டணியில் நாளை ஒரு கூட்டணியில் இருப்பார், அவருக்கு எந்த கூட்டணி அதிக சீட் தருகின்றதோ அந்த கூட்டணியில் இருப்பார், ஒன்று திமுக கூட்டணி இல்லை அதிமுக கூட்டணி அதை தாண்டி அவர் யோசிக்க மாட்டார் , இன்று திமுக கூட்டணியில் அவர் எதிர்பார்க்கும் அளவுக்கு கொடுக்க போதிய இடம் இல்லை ....


Palanisamy Sekar
ஜூன் 06, 2025 08:34

திமுகவை ஒரேயடியாக ஒழிக்க விஜய் கட்சியை பாஜக கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சிக்கலாம். அப்படி கூட்டணி அமையுமே என்றால் திமுகவின் மரண ஓலம் இப்போதிருந்தே காது குளிர அனைவரும் கேட்டு மகிழலாம். 234 தொகுதியையும் ஒட்டுமொத்தமாக கைப்பற்றி சாதனையே படைக்க முடியும். அமீத்ஷா யோசிக்கணும் இதுபற்றி. எப்படியோ திமுகவை இல்லாமல் செய்ய வேண்டும்


Raj Kamal
ஜூன் 06, 2025 16:58

இன்னும் விஜய் கட்சியின் ஒட்டு சாதவிகிதமே தெரியவில்லை அதற்குள் 234 தொகுதிகளையும் பிஜேபி கைப்பற்றுமாம், DMK வின் மரண ஓலம் கேட்குமாம். என்ன பழனிசாமி கலர் கலரா காதுல பூ சுத்துற? தேர்தல் முடியட்டும் விஜய்க்கே விஜயை பற்றி தெரிந்துவிடும்.


ramesh
ஜூன் 06, 2025 17:32

இதுவரை ஜோசப் விஜய் என்று மத துவேஷத்தில் கிண்டல் அடித்து வந்தீர்கள் . தேர்தல் வந்த உடன் ஜோசப்ஐ காணும் இப்போது வெறும் விஜய் மட்டும் வருகிறார் . இது தான்கொள்கை இல்லாத பச்சோந்தி தானம் என்பது


Palanisamy Sekar
ஜூன் 06, 2025 08:12

பாஜக அவசரம் காட்டுவதாக தெரிந்தாலும் அவசியம் எனபதை இந்த நேரத்தில் உணரவேண்டும். திமுக ஏற்கனவே விசிக வை செக் வைக்க பாமகவை உள்ளே கொண்டுவரலாமா என்கிற சிந்தனையில் இருந்துகொண்டுள்ளது. ராமதாஸிடம் அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதும் உண்மைதான். விசிக கூடுதல் சீட் கேட்டதும் ஆட்சியில் பங்கு என்று சொன்னதும் திமுகவால் இன்னும் ஜீரணிக்க முடியாத நிலையில் பாமக, மற்றும் தேமுதிகவுடன் பேசிகொண்டுள்ளது. அதனை தடுக்கவே குருமூர்த்தி மூலம் பாஜக ராமதாஸிடம் பேச சொன்னது. இப்போதைக்கு கட்சி அன்புமணியிடமே இருக்கின்றது. அன்புமணியோ பாஜக பக்கமே எப்போதுமே இருக்க எண்ணுகின்றார். காரணம் எதிர்காலம் காங்கிரசுக்கு கிடையது என்பதை புரிந்துகொண்டுவிட்டார். இறுதியில் ஓர் செய்தி.. பாமக விரைவில் பாஜக கூட்டணியில் தந்தையும் தனையனுமாக ஒன்று சேர்ந்து அமீத்ஷா அவர்களை சந்திக்க இருக்கின்றார்கள். சிதறாத ஓட்டுக்களுடன் பாமக, பாஜக அதிமுகவுடன் பயணிக்க தயாராக இருக்கிறது. திருமாவுக்கு நிம்மதி பெருமூச்சு விட எண்ணினாலும், விசிக ஓட்டுவங்கியை காட்டிலும் சற்றே குறைவாக இருக்கின்ற தேமுதிகவை உள்ளே கொண்டுவர முடிவுசெய்து பேட்டி கனம் பற்றி பிரேமலதாவுடன் பேசிக்கொண்டுள்ளது. இந்த தேர்தல் விசிகாவுக்குத்தான் சோதனையாக இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை