உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:சென்னையில் உள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் முக்கிய இடங்கள், பிரபலங்கள் மற்றும் முக்கிய நபர்களின் வீடுகளுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது வழக்கமாகி விட்டது. முதல்வர் ஸ்டாலின் வீடு, நடிகர்கள் ரஜினி, அஜித், நடிகை த்ரிஷா உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.நேற்று கூட நடிகர்கள் சத்யராஜ், கார்த்திக், நாசர், அமீர் உள்ளிட்ட நடிகர்கள் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் வந்தது. இதையடுத்து, மோப்ப நாயுடன் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள், சோதனை நடத்தியதால், வெறும் புரளி என தெரியவந்தது.இந்த நிலையில், சென்னையில் உள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் நேரில் சென்று சோதனை மேற்கொண்டனர். அதன்பிறகு, அது புரளி எனத் தெரிய வந்தது. தொடர்ந்து, மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Vasan
அக் 17, 2025 17:08

இவ்வாறு புரளி இமெயில் அனுப்புபவர்கள், தினம் தினம் 4 இடம் என்று அனுப்பாமல், மாதாந்திர காலெண்டர் படி 1 ம் தேதி முதல் மாதக்கடைசி தேதி வரை கால அட்டவணை தயாரித்து, என்றென்று எங்கெங்கே என்று முதலிலேயே சொல்லி விட்டால், அந்த இல்லாத வெடிகுண்டை தேடுபவர்களுக்கு பதட்டமில்லாமல் இருக்கும்.


RAMESH KUMAR R V
அக் 17, 2025 14:22

இதுபோன்ற செயல்களை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவரவேண்டும்.


Narayanan Muthu
அக் 17, 2025 12:51

புள்ள பூச்சியை எல்லாம் மிரட்டுவது.


வாய்மையே வெல்லும்
அக் 17, 2025 15:20

வெள்ளிக்கிழமை வெடிகுண்டு பச்சை பசேல் ஆசாமிகள் எல்லாமே சண்டைபோட்டுக்காம ஒவ்வொருவராக வந்து சரண்டர் ஆகுங்க. இல்லாங்காட்டி ஏழரை நிச்சயம். உங்க உள்ளடிவேலை கூடிய விரைவில் தெரியவரும்


தியாகு
அக் 17, 2025 12:40

டுமிழக அவலங்கள் ஏதும் வெளியில் தெரியாதபடி இப்படி கண்ட கண்ட புரளிகளை அடிக்கடி பரப்பிவிட்டு மக்களை திசை திருப்புகிறார்களோனு தோணுது.


திகழ்ஓவியன்
அக் 17, 2025 12:46

அந்த அளவுக்கு இவர் ஒன்றும் பெரிய ஆள் இல்லையே ஏதோ அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கோவையில் இருந்து நகர்த்தி GOVERNER போஸ்ட் கொடுத்து ... அவ்வளவு தான், ஏன் தான் இப்படி இவரை பெரிய ஆள் ஆக்குகிறார்களோ


vivek
அக் 17, 2025 13:24

கனடா நாட்டு சதியோ


visu
அக் 17, 2025 20:53

திகழ் ஓவியன் அவர் கவெர்னெர் இல்லை துணை ஜனாதிபதி அண்ணாமலைக்கு இடம் கொடுக்க துணை ஜனாதிபதி பதவி என்ன கற்பனை


Ramesh Sargam
அக் 17, 2025 12:01

டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். மிரட்டல் ஓரளவுக்கு குறையும்.


Narayanan Muthu
அக் 17, 2025 12:55

நடக்காது. தீய சக்திகளுக்கு தமிழகத்தில் இடமில்லை.


sundarsvpr
அக் 17, 2025 11:39

சாதாரண குடிமகனுக்கு வெடி குண்டு மிரட்டல் வந்தால் காவல்துறை மெதுவாக வரும். பெரிய மனிதர் என்றால் உடனே காவல்துறை பட்டாளமாக வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவியுடன் வருவார்கள். ஏன் இந்த பாரபட்சம்? காரணம் உயிர் ஒன்றாக இருந்தாலும் பெரிய மனிதர் இழப்பு தேசிய இழப்பு. அவ்வளவுதான்.


Vasan
அக் 17, 2025 17:02

கேள்வியும் நானே, பதிலும் நானே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை