வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடத்த வேண்டிய பாடப்பிரிவுகளை பொறியியல் கல்லூரிகள் நடத்துகின்றன. பொறியியல் கல்லூரி நடத்த வேண்டிய பாடங்களை உயர்ந்த தரம் கொண்ட ஐஐடி கழகங்கள் நடத்துகின்றன. இப்படி ஒருவர் செய்வதை அடுத்தவர் செய்தால் குழப்பம் தானே வரும். மாணவர்கள் எங்கு சேருவார்கள் ? கடைசியில் அந்தந்த நிலைகளில் மாணவர்கள் கிடைக்காமல் கல்லூரிகள் மூடப்படும் நிலைமை தான் வரும். ஏற்கனவே பாலிடெக்னிக் கல்லூரிகள் பல மூடப்படுகின்றன. காரணம் பொறியியல் கல்லூரிகளின் வளர்ச்சி. பல பொறியியல் கல்லூரிகளும் மூடப்பட்டு வருகின்றன. காரணத்தை அனைவரும் அறியவேண்டும். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல பாடப்பிரிவுகள் மூடப்பட்டு வருகின்றன. கேட்டால் அந்த பாடப்பிரிவுகளில் வேலைவாய்ப்பு குறைவு. அனைவரும் ஒன்று சாப்ட்வேர் அல்லது இன்ஜியர் ஆகவே விரும்புகிறார்கள். ஐஐடி என்பதற்கு ஒரு மதிப்பு உள்ளது, அதற்கென மாணவர் வட்டம் உள்ளது. அதனால் அவர்கள் பொறியியல் கல்லூரிகள் செய்ய வேண்டியதை கை விடலாம். இப்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடத்தப்படும் வகுப்புப் பிரிவுகளை பொறியியல் கல்லூரிகள் நடத்த துவங்கியுள்ளன. அப்போது பொறியியல் கல்லூரிகளை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப் போகிறார்களா ? ஐஐடியை பொறியியல் கல்லூரியாக மாற்றப் போகிறார்களா ? பகுதி நேர பாடப் பிரிவுகளை ஐஐடி நடத்துவதை விட அதை நடத்தும் பொறுப்பை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிடம் வழங்கலாம்.
ஐ.ஐ.டி பொறியியல் மற்றும் கலைக்கல்லூரி. அடுத்து ஜோசியம், கைரேகை சாஸ்திரம் சொல்லித்தரப்படும்.