வாசகர்கள் கருத்துகள் ( 45 )
வாய்ப்பே இல்லை ராஜா...
நல்ல திட்டம். இதே போல் பார்க்கிங் வசதி பொது இடங்களிலும் இருக்க வேண்டும். எல்லா பரிந்துரையும் மக்களை பாதிக்கும் வகையினிலேயே வருகிறது. ஒரு வேளை பரிந்துரை செய்பவர்கள் மனிதர்கள் இல்லயோ
தொலை நோக்கு பார்வையே, இன்று மக்கள் பணி ஆற்றுப்பவர்களிடம் இல்லை. மின்சார வண்டிகளை எடுத்து கொள்ளுங்கள். அப்போது பெட்ரோல்? பெட்ரோல் நிலையங்கள், அதன் தொழிலாளர்கள், வண்டி ரிப்பேர் செய்பவர்கள், அதை நம்பியவர்களின் வாழ்வாதாரம்?. பெட்ரோல் இறக்குமதி குறைக்க வேண்டும். இல்லாமல் உடனே ஆக்க முடியுமா?. இதற்கு-:சொந்த வாகனங்களுக்கு மட்டும், மின்சார வாகனங்களை அனுமதிக்க வேண்டும். தொழில் ரீதியான வாகனங்கள் - பெட்ரோல் ஆக இருக்க வேண்டும். அல்லது கனரக வாகனங்கள் மட்டுமாவது பெட்ரோல் ஆக இருக்க வேண்டும். மாறும் காலம், அவகாசம், ஏற்படும் பின் விளைவுகள், தீர்வு என யாரும் மக்கள் பணி உயர் மட்ட குழு இன்று தெளிவாக யோசிப்பது இல்லை. பார்க்கிங் - இந்த வருடத்திற்கு பிறகு வாங்கும் வாகனம் - பார்க்கிங் இடம் வேண்டும். இதற்கு முன் வாங்கிய வாகனங்களுக்கு பூங்காக்கள் போல், அருகிலேயே பார்க்கிங் இடங்களை மாநகராட்சி தான் ஏற்படுத்த வேண்டும்.
இது பரிந்துரையா அல்லது கட்டளையா? ஏன் கேட்கிறேன்னா திராவிட மாடல் ஆட்சி சர்வாதிகாரி ஆட்சின்னு சொல்றாங்க.
பொதுமக்களுக்கு வசதி செய்து கொடுக்க கையாலகாத அரசாங்கம், சட்டம் போட்டு தன்னை தேர்ந்துதேடுத்த மக்களை தண்டிக்குமாம். சாலையோரம் உள்ள குடிசை மற்றும் கடைகளை அகற்றி அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வக்கில்லை. அப்படி ஆகரமிப்புகளை அகற்றினால் எவ்வளவு இடம் கிடைக்கும்? உதாரணத்திற்கு, வடசென்னையில் பாரிமுனையில் உள்ள பர்மா பஜாரை, டெல்லியில் உள்ள பாலிக்கா பஜாரை போன்று ஒரு மார்க்கெட் அமைத்து அங்கு வைத்தால், மொத்த ராஜாஜி சாலையும் சுத்தமாகும். அதே போன்று எண்ணூர் அருகே ஒரு மீன்பிடி துறைமுகம் அமைத்து, சென்னை அயோதிக்குப்பதில் இருப்பவர்களுக்கு, மீன்பிடி துறைமுகம் அருகே அடுக்குமாடி வீடுகள் கொடுத்தால், அயோதி குப்பதை காலி செய்து அங்கே சட்டசபையை கடலோரம் அமைத்தால் அந்த இடமே அழகாகுமே. அதிலேயே அமைச்சர், மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு வீடுகள் மற்றும் எம் எல் ஏ ஹாஸ்டல் அமைத்து கொடுத்தால், அரசாங்கத்தின் போக்குவரத்து செலவு குறையுமே. இதெல்லாம் யோசிக்க மாட்டார்கள். செய்ய மாட்டார்கள். மக்களுக்கு அபராதம் மட்டும் போடுவார்கள். உதாரணத்திற்க்கு தெருவில் குப்பையை கொட்டினால் அபராதம். தினமும் குப்பையை வசூலிக்க வக்கில்லாத அரசால் மக்களுக்கு அபராதம் மட்டுமே போட முடியும். சிகிச்சைக்கு வெளிநாடு போகும் அமைச்சர்கள் அங்கிருக்கும் நல்ல விஷயங்களை இங்கு அமல் செய்யட்டும். நாடு உருப்படும். ஒரு அரசாங்கம் எப்போது, தான் விதிக்கும் அபராதத்தை வருமானமாக நினைக்கிறதோ, அபராதம் வசூலிக்க அதிகாரிகளுக்கு வரம்பு நிர்ணயிக்கிறதோ அது கையாலகாத அரசு என்று கொள்ளலாம்.
லஞ்சம் வசூலிக்க இன்னொரு வழி?
பந்தயம் நடத்த செலவழித்த பணத்தில் தானியங்கி வகையில் கட்டணம் செலுத்தி நிறுத்த பல அடுக்கு மாடி சிற்றுந்து நிறுத்தும் இடம் கட்டியிருக்கலாமே. பெரிய வணிகத் தளங்களை கடைகளை புறநகர்ப் பகுதிக்கு இடமாற்றம் செய்தால் இந்தப் பிரச்சினை குறையுமே .பேருந்து நிலையத்தை எங்கோ அமைத்த அரசுக்கு காலியான கோயம்பேடு பேருந்து நிலையம் காலியாகப் போகும் காய்கனிச் சந்தைப் பகுதியில் தானியங்கி வகையில் கட்டணம் செலுத்தி நிறுத்த வசதி செய்யலாமே.சிற்றுந்துகளை வாங்கினால்தான், உற்பத்தி அதிகரிக்கும் நாட்டின் பொருளாதாரம் உயரும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இப்படியும் செய்தால் இந்த மூடத்தனத்தை என்ன விருது கொடுத்துப் பாராட்டலாம் ?
பொதுபார்க்கிங் இல்லாத மாநகராட்சிகளை நகராட்சியாக மாற்றலாம்.
ஒரு கார் வைத்திருப்பவர்கள் கூட சாலையில் நிறுத்துவதை என்ன செய்வது
இதெல்லாம் பயனற்ற திட்டங்கள் உண்மையில் சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்வதுதான் சரி ,இல்லை அபராதம் விதிக்கலாம்