வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மழை பொழிந்து நாடு செழிக்கட்டும்..
மேலும் செய்திகள்
ராமநாதபுரம் டு காஞ்சி வரை கனமழை பெய்யும்
03-Oct-2024
சென்னை: தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று (அக்.,03) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர்,கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.நாளை(அக்.,04)
புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.நாளை மறுநாள் (அக்.,05)
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், காரைக்கால், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விபரம் (மில்லி மீட்டரில்): பவானி- 28.6,கவுந்தப்பாடி - 21.2 ,வரட்டு பள்ளம்- 17 ,வேங்கூர், கள்ளக்குறிச்சி- 68, திருக்கோவிலூர்- 51, மூங்கில் துறை பட்டு- 45, அடையாமடை - 71.2,தக்கலை- 50.4,சுருளகோடு- 44.6,சித்தார் - 43.2, முள்ளங்கிவிளை- 36.8,பேச்சிப்பாறை - 35.6,குழித்துறை- 26.6,கெலவரப்பள்ளி அணை- 85,ஓசூர் - 43.8, சங்ககிரி- 29.3,எடப்பாடி- 26.2 ,கோடநாடு - 17, பெரியகுளம்- 28, நாட்ராம்பள்ளி- 86.5,ஆம்பூர்- 76.2, வாணியம்பாடி- 73,ஆலங்காயம்- 35 ,மடத்துக்குளம்- 35,பல்லடம்- 27,மூலனூர்- 24,சின்கோனா- 35,ஆழியார்- 28.4, சின்னக்கல்லார்- 19,தண்டராம்பட்டு- 63.2 , கீழ்பெண்ணாத்தூர்- 41 ,செங்கம் - 26.4, வந்தவாசி - 23, மானம்பூண்டி- 62 , விழுப்புரம்- 53 , முண்டியம்பாக்கம்- 23.5,
மழை பொழிந்து நாடு செழிக்கட்டும்..
03-Oct-2024