உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் மாற்றம்

 காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் மாற்றம்

கோவை: காலி மதுபாட்டில்களை வாங்கிய கடைகளில் மட்டுமின்றி, வேறு கடைகளிலும் கொடுத்து, 10 ரூபாய் பெறும் வகையில் திட்டத்தை செயல்படுத்த 'டாஸ்மாக்' பரிசீலித்து வருகிறது. 'டாஸ்மாக்' கடைகளில் மது பாட்டில் வாங்குபவர்கள் குடித்து விட்டு கண்ட இடங்களில் வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்கும் விதமாக, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின்படி காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை 'டாஸ்மாக்' நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. மது பாட்டிலில், 'கியூ.ஆர். கோடு' மற்றும் கடை எண் உடன், 10 ரூபாய் 'ஸ்டிக்கர்' ஒட்டி தரப்படுகிறது. 'குடி'மகன்கள் இந்த பாட்டில்களை வாங்கிய கடையிலேயே கொடுத்து, 10 ரூபாயை திரும்ப பெறுகின்றனர். தற்போது கடை எண் இல்லாமலும் ' கியூ.ஆர். கோடுடன் கூடிய ஸ்கேனர் ஒட்டி தரப்படுகிறது. எதிர்காலத்தில் வேறு டாஸ்மாக் கடைகளிலும் காலி பாட்டிலை திரும்ப கொடுத்து, 10 ரூபாய் பெறும் திட்டத்தை செயல்படுத்த பரிசீலித்து வருவதாக 'டாஸ்மாக்' நிர்வாகம் தெரிவித்துள்ளது. 'க்யூ ஆர் கோடுடன் கூடிய


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Muthukumaran
மே 13, 2026 12:54

பார்கள் லைசன்ஸை திரும்பப் பெற்றால் விற்பனை கூடும் அரசு நிதி கூடும் இலவசங்கள் வழங்குவதில் சுமை குறைக்கும். அனுமதிக்கப்படாத சரக்கு விற்பனை தடுக்கப்பட்டால் கொள்முதல் கூடும். பாட்டிலுக்குப் பத்து ரூ வை வீட நேர் வழியில் வருவாய் கூடும். அந்த 717 இடமாற்றமா நீக்கமா உறுதி செய்யப்பட வேண்டும். நீயல்லால நிதியில்லை நீயில்லாத ஆட்சியுமில்லை கருப்பா


Siva Karthik
மே 12, 2026 07:34

எந்த மதுபான கடையிலும் MRP விலையில் கொடுப்பதில்லை 10ரூபாய் கூடுதல் கட்டணம் தான் வசூலிக்கிறார்கள் இப்போது பாட்டிலுக்கு 10ரூபாய் இன்னும் கூடுதலாக வசூலிக்கிறார்கள். முதலில் சரியான கட்டணம் வசூலிக்க வேண்டும் அதற்கான ரசீதை கொடுக்க வேண்டும். அதிலும் நிறைய கடைகளில் phone pay, GPay சேவைகளை அனுமதிப்பதில்லை. நிறைய மதுபானக்கடைகளில் சரிவர சுத்திகரிப்பு செய்யப்படவில்லை, சில பார் வசதி உள்ள மதுபான கடையில் கூட சுத்திகரிப்பு செய்யப்பட வில்லை. ஆனால் எல்லா விதமான பொருள்களுக்கும் அதிக கட்டணம் மட்டும் வசூலிக்கிறார்கள். இதையெல்லாம் அரசாங்கம் சரி செய்தாலே வெளியில் மது அருந்துபவரின் எண்ணிக்கை குறைந்து விடும். பாட்டில்கள் வீதியில் வீசப்படுவது குறைந்துவிடும். நீங்கள் சொன்னது போல் எல்லா மதுபான கடைகளிலும் வேறு கடை பாட்டில்களை திரும்ப பெற்றுக்கொண்டால் முற்றிலுமாக வெளியில் பாட்டில்கள் வீசப்படுவது குறைந்துவிடும். நன்றி.


Gajageswari
மே 11, 2026 15:28

பாட்டில்க்கு ₹50 அதிகம் செய்து பாட்டில் எந்த கடையில் வேண்டுமானால் திரும்ப பெறும் திட்டம் வெற்றியடையும்


Sanjeevkumar
மே 11, 2026 13:11

நல்ல விஷயம் தான்... முதல சரக்கு வாங்கும்போது பில் போட்டு குடுக்க சொல்லுங்க.....டாஸ்மார்க் ல பிரைவேட் பார் காட்டிலும் ரேட் கூடுதலா வாங்குறானுக... பிராடு களா இருக்கானுங்க....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை