உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழர்கள் குறித்து பேச்சு: மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர்

தமிழர்கள் குறித்து பேச்சு: மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ‛‛ தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் '', என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே மனு தாக்கல் செய்துள்ளார்.பெங்களூரு, 'ராமேஸ்வரம் கபே' ஹோட்டலில், கடந்த மார்ச்சில் குண்டு வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக, கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே, 'தமிழகத்தில் பயற்சி பெற்று வருவோர், இங்கு வெடிகுண்டுகள் வைக்கின்றனர்' என்றார். அவருக்கு எதிராக, மதுரையை சேர்ந்த தியாகராஜன் என்பவர் அளித்த புகாரின்படி, வன்முறையை துாண்டுதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ், மதுரை நகர போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஷோபா கரண்ட்லாஜே மனு தாக்கல் செய்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4qn69qiq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த மனுவை விசாரணைக்கு வந்த போது, 'பெங்களூரில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே, செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோரினால் ஏற்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஷோபா கரண்ட்லாஜே தாக்கல் செய்த மனுவில், ‛‛ தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் '', எனத் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Mani . V
செப் 04, 2024 06:09

சாதாரணமானவர்கள் என்றால் கைது, சிறை. ஆனால், பதவியில் உள்ளவர்கள் கொழுப்பெடுத்து, தெனாவெட்டாகப் பேசினால் ஒரே ஆயுதம் மன்னிப்பு.


Kasimani Baskaran
செப் 04, 2024 05:52

தமிழக தைத்திகள் வார்த்தைக்கு வார்த்தை வடக்கன், வந்தேறி, ஆரியன் என்று முழங்குவார்களே அதற்க்கு என்று மன்னிப்பு கேட்பார்கள் மிஸ்டர் பாமரன். சனாதன ஒழிப்புக்கெல்லாம் புழுங்காத நீங்கள் இதற்க்கெல்லாம் புழுங்குவது மகா அற்பமானது.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 04, 2024 09:25

ஹிந்து தமிழ் ஆன்லைனில் அவரைப்போல பலர் இருக்கிறார்கள் .... படித்திருப்பீர்கள் ... பிரபாகர் போன்ற வெத்துவேட்டுக்கள் ஆகச்சிறந்த உதாரணம் .....


பாமரன்
செப் 04, 2024 10:19

தப்பு யார் செய்தாலும் தப்புதான்... பொத்தாம் பொதுவாக தமிழர்கள் என அவர் சொல்லியதுதான் தவறு காசி ... உங்களை அல்லது சக கூட்டாளிகளை போல நம்மாளுக செஞ்சா தப்பா இருந்தாலும் சமாளிக்க நிணைப்பதுதான் அற்பத்தனம்.. அதேபோல நல்லது எங்கே நடந்தாலும் பாராட்ட மனமும் இருக்கணும்... நேற்று உபி அரசின் நடவடிக்கையை பாராட்டி இருக்கேன்... பிலிங்கரை கழட்டிட்டு பாருங்க தெரியும்...


Sathyanarayanan Sathyasekaren
செப் 04, 2024 03:51

முறைப்படி பார்த்தால் நீதிபதிகள் தமிழக அரசைத்தான், பயங்கரவாதிகளை தமிழகத்தில் வளர்த்ததற்காகவும், அவர்களை NIA கைது செய்வதற்கு முன்பாக நடவடிக்கை எடுக்காததற்கும், தமிழக அரசை கண்டித்துஇருக்கவேண்டும். கோவை குண்டுவெடிப்பை சிலிண்டர் வெடிப்பு என்று சொன்ன அதி புத்திசாலி தமிழக அரசு தான் , தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். பங்களாதேஷ் வன்முறை தலைவன் திருப்பூரில் மறைந்து இருந்தவனை, திரும்பி பங்களாதேஷ் செல்லும்போது NIA கைது செய்துள்ளது. பெங்களூரு குண்டுவெடிப்பிற்ற்கு சென்னையில் திட்டமிட்டதாக 5 பேரை NIA கைது செய்துள்ளது. இவற்றை பார்த்த பின்பும் நீதிமன்றம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சொன்னது அரசியல் கரணம் மட்டுமே. தமிழர்கள் சிந்தித்து பார்த்து இந்த பயங்கரவாதிகளை வோட் பிச்சைக்காக ஆதரிக்கும், நடவடிக்கை எடுக்க மறுக்கும், ஷிர்க் மாநாட்டிற்கு உதவிகள் செய்யும் திருட்டு திராவிட, கான் ஸ்கேம் காங்கிரெஸ் கழிசடைகளை தூக்கி எறியவேண்டும்.


Ramesh Sargam
செப் 03, 2024 22:43

கர்நாடகாவில் தொன்றுதொட்டு தமிழர்களின் பங்களிப்பு அதிகம். இன்று கர்நாடகா அந்த அளவுக்கு வளர்ச்சி கண்டிருக்கிறது என்றால் அதில் தமிழர்களின் பங்கு அதிகம் என்பதை சோபா மற்றும் பல கர்நாடக தலைவர்கள் கவனத்தில் வைக்கவேண்டும்.


Sundar
செப் 03, 2024 22:01

தவறுக்கு மன்னிப்பு கேட்பது நன்று. ஆனால் தமிழகத்தில் அவர் சொன்னபடி நடக்கிறது. மேலும் நீதிபதிகள் அரசியல் செய்வது வெட்ட வெளிச்சம். அவர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் தவறான தீர்ப்பு வழங்கினால்.


பாமரன்
செப் 03, 2024 21:52

நம்ம கம்பெனி குடுக்கும் முதல் ட்ரைனிங்கே ஷூ லிக்கிங்தானே..இந்த மன்னிப்பெல்லாம் ஜூஜூபி...


Sathyanarayanan Sathyasekaren
செப் 04, 2024 02:18

பொய் பெயரில் கருது எழுதும் தைரியசாலியே, சென்னையில் NIA செய்த கைதிகளை படிக்கவில்லையா. அமைச்சர் உண்மையை தான் பேசினார். அரசியல் காரணங்களுக்காக நீதிமன்றம் மன்னிப்பு கேட்க சொல்கிறது. பங்களாதேஷ் பயங்கரவாத தலைவர், திருப்பூரில் இருந்து திரும்பி செல்லும்போது போன வரம் NIA கைது செய்தது தெரியாத கொத்தடிமையே.


பாமரன்
செப் 04, 2024 10:22

சத்தியநாராயணன் உமது பெயரான்னு ஆராய்ச்சி செய்யும் மூடன் இல்லை நான்... தேவையும் இல்லை.. பாமரன் என் அடையாளம்... உங்களுக்கு எங்கே வலிக்கிறது மரியாதைக்குரிய மனிதரே... பொதுவாக தமிழர்களை தப்பா சொன்னதுதான் இங்கே பிரச்சினையே...


Barakat Ali
செப் 03, 2024 21:40

இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் கிடையாது .... ஆனால் இருபத்திரண்டு வருடங்களுக்கு முன்பே சென்னை ஆர் எஸ் எஸ் அலுவலக வாயிலின் முன்பு பசுங்கன்றின் தலை வெட்டி வீசப்பட்ட நிகழ்வு நடந்தது .... இது ஒரு உதாரணம் மட்டுமே ... இதனால் ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள் மீது தவறான கண்ணோட்டம் ஏற்படுகிறது ..... தமிழகம், கேரளம், மேற்குவங்கம் ஆகிய மூன்று மாநிலங்களும் வாக்குவங்கிக்காக இஸ்லாமியர்களை, ஏன் தீவிரவாதத்தையே ஆதரிப்பது என்பது பல ஆண்டுகளாக நடக்கும் அவலம் .... ஒரே ஒரு விதிவிலக்கு ஜெ இருந்தவரை கொஞ்சம் அடங்கினார்கள் .... இந்த அவலம் பற்றி இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்குத் தெரியும் ...


தமிழ்வேள்
செப் 03, 2024 20:43

தமிழக திராவிட ராமசாமி மண்ணில் இருந்து தான் மூர்க்க குண்டு தாரிகள் மற்ற மாநிலங்களுக்கு சப்ளை ஆகின்றனர் என்பது தேசபக்தர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.... மன்னிப்பு கேட்டதால் திராவிட கும்பல் புனிதர்கள் என்று பொருள் கிடையாது.... மூர்க்கம் அஹிம்சை வழியில் செல்லும் என்று நம்பவும் இயலாது..


பாமரன்
செப் 03, 2024 21:49

அந்த பொம்பளை தமிழர்கள்னு பொதுவாக சொல்லியிருக்கு... பெயரில் தமிழ் இருக்கும் இந்த பீஸுக்கு எல்லாருக்கும் முன்னே கோபம் வந்திருக்கனும்... அதிகம் பகோடா சாப்பிட்ட விளைவு உண்ட வீட்டுக்கு ரெண்டகமா பேசுது... வெட்கக்கேடு


RAMAKRISHNAN NATESAN
செப் 03, 2024 23:35

அந்தம்மா தமிழர்கள் என்று சொல்லவில்லை .... தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் என்றுதான் சொல்லியிருக்கிறது .... தமிழ்நாட்டிலிருந்து வந்த ஒரு குறிப்பிட்ட மதத்தவர் என்று கூட நாகரிகம் கருதி சொல்லவில்லை .... ஆக தமிழ்நாட்டிலிருந்து போன அனைவருக்கும், அனைத்து மதத்தவர்க்கும் கெட்டபெயர் .... தென்னிந்திய மாநிலங்கள் மத அடிப்படைவாத தீவிரவாதத்துக்கு சாமரம் வீசுகின்றன என்று இந்தியா முழுவதும் தெரியும் ... வாஷிங்க்டன் போஸ்ட் என்னும் அமெரிக்க பத்திரிகையே தக்கியா ஐடி பயன்படுத்தும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் குறித்து எழுதியிருக்கிறது .... பாமரன் என்னும் சீக்கு மூளைக்கு ஒரு ஹிந்துவாக இருந்திருந்தால் உலகெங்கும் நெட்வொர்க் ஐ உடைய மத அடிப்படைவாதத்துக்கு ஆதரவாக பேசுகிறோம் என்று மனசாட்சி உறுத்தியிருக்கும் ..... ஆனால் பயன்படுத்துவது தக்கியா ஐடி என்பதால பக்கோடாஸ் என்று தொடர்ந்து உருட்ட வேண்டியுள்ளது .... வேறு தக்கியா ஐடி உதாரணங்கள் கந்தர்வன், ரமேஷ், வேணுகோபால், வைகுண்டேஸ்வரன், தஞ்சை மன்னர் - இப்பொழுது ராஜ் பு எழுதுவதில்லை - பொய் என்றும் நிலைக்காது .....


Sathyanarayanan Sathyasekaren
செப் 04, 2024 03:07

சொந்த பெயரில் கருத்து எழுதாமல் ஏன் பொய் பெயரில் எழுதுகிறாய்? ஏன் உன் பெயர் அவ்வளவு கேவலமானதா? NIA சென்னையில் செய்த கைதுகள் உனக்கு தெரியாத?


பாமரன்
செப் 04, 2024 10:25

நடேசு போன்ற திக்கு தெரியாத மத காட்டில் அலையும் பீஸ்களுக்கு நேர்மையான கோபம் வர வாய்ப்பில்லை..


V RAMASWAMY
செப் 03, 2024 20:22

She should understand and appreciate that amongst those who voted in her favour were also many Tamilians living in Bengaluru adopting Karnataka as their home.


venugopal s
செப் 03, 2024 20:13

பாஜகவினர் எல்லோரும் வெறும் வாய்ச் சவடால் பேர்வழிகள்! இவர் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சவடால் விட்டாரே , இப்போது என்ன ஆயிற்று?


Sathyanarayanan Sathyasekaren
செப் 04, 2024 03:31

கொத்தடிமை வேணுகோபால் NIA சென்னையில் செய்த கைதிகளை தங்கள் படிக்கவில்லையா? இல்லை உங்கள் கண்கள் உண்மையை பார்க்காத? உண்மையிலேயே நீ ஹிந்துவாக இருந்தால் காஷ்மீர், தற்போதைய பங்களாதேஷ் ஹிந்துக்களுக்கு ஏற்படும் நிலைமையை பார்த்து புத்தி வரவேண்டும் இல்லையென்றால் நீயும் ஒருநாள் அனுபவிப்பாய். அப்போது ஓடி ஒழிய வேறு நாடுகூட கிடையாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை