உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் புறநகர் ரயில் தடம்புரண்டு திடீர் விபத்து: பயணிகள் அச்சம்

சென்னையில் புறநகர் ரயில் தடம்புரண்டு திடீர் விபத்து: பயணிகள் அச்சம்

சென்னை: சென்னையில் மின்சார ரயில் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானதால் பயணிகள் அச்சம் அடைந்தனர். சென்னை ராயபுரம் அருகே ஆவடியில் இருந்து புறநகர் மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. சென்னை கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fg6l2vgs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ரயிலின் 3வது பெட்டியில் இரண்டு ஜோடி சக்கரம் தடம்புரண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர். பின்னர் சக்கரங்களை சரிசெய்யும் பணிகளில் இறங்கினர். விபத்து எதிரொலியாக ராயபுரம்-சென்னை கடற்கரை நிறுத்தம் இடையே ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஏப் 22, 2025 12:57

அதென்ன திடீர் விபத்து. விபத்து எதிர்பாராமல் திடீர் என்றுதான் ஏற்படும். தெரிந்தே ஏற்பட்டால், அது அஜாக்கிரதை.


V Ramanathan
ஏப் 22, 2025 14:25

மிகவும் சரியான கருத்து. சில பத்தாண்டுகளாகவே இந்த திடீர் என்ற சொல் தமிழ்ப் பத்திரிகைகளில் ஒர பரபரப்பைக் காண்பிக்க பயன் படுத்படும் சொல்.


முக்கிய வீடியோ