உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

கோவையில் ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ. துாரத்துக்கு ரூ.1,791.23 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை, இன்று (அக் 09) முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பாலத்துக்கு கோவையின் புகழ்பெற்ற விஞ்ஞானி ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது. கோவை, உப்பிலிபாளையம் முதல் நீலாம்பூர் வரை யிலான, 16 கி.மீ., கொண்ட அவிநாசி சாலை, இந்நகரின் மத்திய ரேகையாக உள்ளது. இந்த சாலையில் நகரின் முக்கிய பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனை, விமானநிலையம் அமைந்துள்ளன. போக்கு வரத்து நெரிசலை குறைக்க, அ.தி.மு.க. ஆட்சியில், அவிநாசி சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. 2016 ஆக., 4ல் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.இபிஎஸ் முதல்வராக இருந்தபோது, உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை ரூ.1621 கோடி ஒதுக்கப்பட்டு, 2020மார்ச் 24ல் நிர்வாக ஒப்புதல் தரப்பட்டது. 2021ல் ஆட்சி மாறியது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சியில், கூடுதல் தேவைகள் திட்டமிடப்பட்டு, பாலத்தின் மதிப்பீடு ரூ.1791.23 கோடியாக அதிகரிக்கப்பட்டது.தற்போது பாலத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்தது. மேம்பாலத்துக்கு, ஜி.டி.நாயுடுவின் பெயரை சூட்டியுள்ள முதல்வர் ஸ்டாலின், இன்று (அக் 09), கோவையில் கோல்டுவின்ஸ் பகுதியில் இருந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

பாலத்தின் சிறப்புகள்

* நான்கு வழிப்பாதையான இந்த மேம்பாலத்தில், அண்ணாதுரை சிலை, நவ இந்தியா, ஹோப் காலேஜ், விமான நிலையம் ஆகிய நான்கு இடங்களில், ஏறு தளம் மற்றும் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளன. பாலத்தின் மத்தியில் 4 அடி அகலத்துக்கு சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. * மழை நீர் வடிகால் தமிழகத்திலேயே முதன் முறையாக, மழை நீர் சேகரிப்பு அமைப்பு இந்த பாலத்தில் முன்னோடி முயற்சியாக நிறுவப்பட்டுள்ளது. பாலத்தின் மீது பெய்யும் மழை நீர், குழாய் வழியாக வடிந்து, பாலத்தின் கீழே அமைக்கப்பட்டுள்ள 220 ஆழ்துளைகள் வாயிலாக நிலத்துக்குள் சென்று விடும். இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். * பாலம் கட்டுமானத்தில் 1.5 மீ., அகல நடைமேடையுடன் கூடிய வடிகால் அமைப்பு 13 ஆயிரத்து 560 மீ., நீளத்துக்கு திட்டமிடப்பட்டு, 9115 மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ளது.* தமிழகத்தில், மதுரை ஊமச்சிகுளத்தில் இருந்து நத்தம் வரையிலான 7.5 கி.மீ., நீளம் கொண்ட உயர்மட்ட மேம்பாலமே, இதுநாள் வரை தமிழகத்தின் நீளமான பாலமாக இருந்தது. தற்போது, உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரையிலான 10.1 கி.மீ., நீளமுள்ள அவிநாசி ரோடு மேம்பாலம் தென்மாநிலங்களின் மிக நீண்ட மேம்பாலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதுவரை 45 முதல் 50 நிமிடங்கள் தேவைப்பட்ட நிலையில், இனி இந்த துாரத்தை 10 நிமிடங்களில் கடந்து விட முடியும்.* மேம்பாலத்தை 306 துாண்கள் தாங்குகின்றன. 30 மீட்டர், 40 மீட்டர் இடைவெளியில் துாண்கள் அமைந்துள்ளன. ஹோப் காலேஜ் ரயில்வே மேம்பால பகுதியில் மட்டும், 52 மீட்டர் இடைவெளி விடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 62 )

S.V.Srinivasan
அக் 15, 2025 07:56

ஜாதி பேரை நீக்கி விட்டு ஜி டி மேம்பாலம்னு வச்சுருக்கீங்களா ?


Matt P
அக் 13, 2025 00:33

GD நாயுடு இருக்கட்டும். அவருடைய உண்மையான பெயர் என்னப்பா சீக்கிரம் சொல்லுங்கப்பா.. அப்பா அம்மா வைத்த பெயர்? D யில் தொடங்கும் அந்த முழு பெயர் என்ன? G யென்று தொடங்கும் அவர் அப்பா பெயரையும் சொல்லுங்க. இப்படி தெரியாமலே பேரு வைக்கிறானுக. ஸ்தாலின் அவரு வூருக்கு போன் போட்டு தெரிஞ்சா தான் உண்டு.


Matt P
அக் 12, 2025 12:10

GD நாயுடு காலத்தில் ஜாதி பெயர்கள் சர்வ சாதாரணமாக மக்களிடையே இருந்திருக்கும். தற்போதைய நிலையில் நாயுடு என்றால் குறிப்பிட்ட ஜாதி பெயர் இன்றைய தலைமுறைகளுக்கு மனதில் பதியும்படியாக ஆகும். அதனால் GDN பிரிட்ஜ் என்ற பெயரையே ஏற்புடையதாக ஆக்கலாம். முத்து ராமலிங்க தேவர் பெயரை கூட முத்துராமலிங்கனார் என்று அழைக்குப்படியாக்கலாம். மனோன்சுந்தரம் பிள்ளையின் பெயரில் பல்கலை கழகம் அமைந்த போது கூட கருணாநிதி மனோன்மணியம் சுந்தரனார் என்று பெயரிட்டிருக்கிறார்.


Keshavan.J
அக் 11, 2025 12:20

ஜி டி நாயுடு பாலத்தை ஓங்கோல் கே டீ நாயுடு திறந்து வைத்தார்


Govind
அக் 10, 2025 00:06

ஜி.டி. நாயுடுவின் கண்டுபிடிப்புகளை யாராவது பட்டியலிட முடியுமா? ஜி.டி. நாயுடு ஒரு விஞ்ஞானி என்ற கதைகளில் பெரும்பாலானவை எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் உள்ளன. என்னிடம் ஒருவர் அவர் சுழற்சி டைனமோவைக் கண்டுபிடித்தார் என்று கூறினார், ஆனால் அது ஃபாரடேவால் கண்டுபிடிக்கப்பட்டது. நீங்கள் கூகிள் தேடலைச் செய்தால், பெரும்பாலான கூற்றுகள் பொய்யானது என்பதை நீங்கள் உணர்வீர்கள். அவர் ஒரு தொழிலதிபர் பெரியாருக்கு வேண்டப்பட்டவர் என்பதை தவிர வேறொன்றும் சொல்வதற்கு இல்லை


இராம தாசன்
அக் 09, 2025 21:18

நேற்று காசா போராட்டம் மத அரசியல் இன்று இது சாதி அரசியல் - இது தான்டா திராவிட மாடல்


இராம தாசன்
அக் 09, 2025 21:16

ஈர வெங்காய ராமசாமி நாயக்கர் மாதிரி


Vasan
அக் 09, 2025 20:44

ஆக, இந்த பாலத்திற்கு நாயுடு என்று பெயர் வைத்ததற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வந்ததால், இந்த பாலத்திற்கு அண்ணா பாலம் அல்லது பெரியார் பாலம் என்று பெயர் மாற்றி விடுவார்களோ ? கோவையை சார்ந்த திரு நாயுடு அவர்களின் பெயரிலேயே இருக்கட்டுமே. அவருக்கும் பெருமை, கோவை மக்களுக்கும் பெருமை.


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 09, 2025 20:33

ஒரு குறிப்பிட்ட தூணை இடம் மாற்றிவைக்க சொல்லி நீதிமன்றம் போன கதையை தினமலர் வெளியிடவில்லையே


G Mahalingam
அக் 09, 2025 18:17

தமிழருக்கு மட்டுமே சாதி பெயரை எடுக்க வேண்டும். தெலுங்கர் கன்னடர் சாதி பெயரை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கு ஆட்சி செய்வதே தெலுங்கர் தான்


முக்கிய வீடியோ