உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறார்கள் கையில் பட்டாக்கத்தி: திமுக அரசு மீது இபிஎஸ் கோபம்

சிறார்கள் கையில் பட்டாக்கத்தி: திமுக அரசு மீது இபிஎஸ் கோபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''படிக்கும் புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி வந்திருப்பது வெட்கக்கேடானது. தமிழகத்தை இப்படி ஒரு கொடூர நிலைக்கு ஸ்டாலினின் திமுக அரசு தள்ளிவிட்டதே என்ற கோபம் தான் மேலோங்குகிறது,'' என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் ரயிலில், கத்தியுடன் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த 17 வயதுள்ள 4 சிறுவர்களைத் தடுத்த சுராஜ் என்ற வடமாநில இளைஞரை, சிறார்கள் அரிவாளால் சரமாரியாக கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.இந்த தாக்குதல் தொடர்பான காணொளியைக் காண நெஞ்சம் பதைக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jrzv3g7f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0படிக்கும் புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி வந்திருப்பது வெட்கக்கேடானது.தமிழகத்தை இப்படி ஒரு கொடூர நிலைக்கு ஸ்டாலினின் திமுக அரசு தள்ளிவிட்டதே என்ற கோபம் தான் மேலோங்குகிறது.அரிவாளால் தாக்கிய சிறுவர்கள், கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. வெறும் 17 வயதுள்ள சிறுவர்கள் கையில் போதைப்பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு? இந்த முதல்வர் தானே?மாநிலத்தின் எதிர்காலத்தை இப்படி சீர்குலைத்து விட்டு, எத்தனை மேடை ஏறி, என்ன பெருமை பேசி என்ன பயன் ஸ்டாலின் அவர்களே?கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும், இந்த அளவுக்கு ஒரு சம்பவம் நடக்க மூலக் காரணமான சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும், போதைப் பொருள் புழக்கத்தையும் கட்டுக்குள் கொண்டு வர கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் இபிஎஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Anantharaman Srinivasan
டிச 29, 2025 22:34

திரவி மாடல் ஆட்சியில் ஒவ்வொரு ஊரிலும் கஞ்சா ,இதர போதை பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கிறது. லோக்கல் போலீஸ், அரசியல்வாதிகள் ஆதரவின்றி இவைகள் விற்பனை செய்வது சாத்தியமல்ல.


சிசில்வியா
டிச 29, 2025 21:41

திமுக அரசு வெளியேற்றபடாவிடில் தமிழ் நாடு நரகம் தான்.


venkat
டிச 29, 2025 19:16

அளவிற்கு அதிகமாக போதை வஸ்துகள் தங்கு தடையின்றி கிடைப்பது வேதனையான விஷயம்.. மன சாட்சி உள்ள அதிகாரிகள் இல்லையா.. அரசியல்வாதிங்க தான் தெரிந்த விஷயம்.. ஆனா மக்களும் நல்லவர்களை தேர்ந்தெடுப்பது இல்லை...


GMM
டிச 29, 2025 17:51

தமிழக அரசியல் கட்சிகள் ஊழல் மிகுந்தவை. எங்கும் அரசியல். எதிலும் அரசியல். தமிழக குற்றவாளிகள் மூலம் தாக்கப்பட்டது வட இந்திய சகோதரர். தமிழக மக்கள் இந்தி தெரியாமல் நாடு முழுவதும் பிழைகின்றனர். அவர்களுக்கு பிற மாநிலத்தில் இடையூறு தரும் முன் குற்றவாளியை அந்த மாநில போலீஸ் வசம் ஒப்படைக்க முடியும். நான்கு மாநிலம் சேர்ந்து மத்திய பாதுகாப்பு படை நிலையம் மற்றும் மாவட்டம் தோறும் மத்திய போலீஸ் நிலையம் நிறுவ வேண்டும். நம் சாசனம் மக்கள், தேச பாதுகாப்பிற்கு முன்னுரிமை தருகிறது. ?


T.Senthilsigamani
டிச 29, 2025 17:22

கொடூரமான செய்தி .தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும் இத்தகைய கஞ்சா ,கூலிப் - தடை செய்யப்பட்ட உலர் புகையிலை தங்கு தடையின்றி கிடைக்கின்றன .இதனால் கல்லூரி அல்ல பள்ளிக்கூடம் படிக்கும் மாணவர்களே இதற்க்கு அடிமையாய் கெட்டு போய் வாழ்விழந்து நிற்கின்றனர் .திருநெல்வேலி அரசு உதவி பெறும் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் மது அருந்திய செய்தியையும் பார்த்தோம் .குடியினால் குடும்பத்தலைவரை இழந்து இளம் விதவைகள்,அவர்களின் பிள்ளைகள் கண்ணீரில் மிதக்கும் காட்சிகளும் தமிழகத்தில் மிக அதிகம் .அது மட்டுமல்ல குடிபோதை தகராறில் உற்ற நண்பர்களையும் ,நெருங்கிய உறவுகளையும் கண்மூடித்தனமாக வெட்டி கொல்லும் செய்திகளையும் பார்க்கும் போது தமிழகம் எங்கே போகிறது என்றே தெரியவில்லை . தூய்மை பணியாளர்கள் ,போக்குவரத்து ஊழியர்கள் ,இடை நிலை ஆசிரியர்கள் ,விவசாயிகள் மற்றும் வணிகர்கள் வெறுக்கும் ஆட்சியை திராவிட மாடல் என நடத்துகிறார் ஸ்டாலின் அவர்கள் / ஆனால் இது எதுவும் எங்களுக்கு வருத்தம் /கஷ்டம் /பாதிப்பு /வெறுப்பு /துன்பம் /குறைகள் இல்லை என -இதோ தமிழக தாய்க்குலங்கள் திமுக மகளிரணி நடத்தும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு இத்தகைய நிகழ்வுகள் எங்களுக்கு சிறிதளவும் /எள்ளளவும் பொருட்டல்ல என நிரூபிக்கப்போகிறார்கள். நாளை தலைப்பு செய்தி மகளிர் மாநாடு மாபெரும் மகத்தான மட்டில்லா வெற்றி .தமிழக மகளிர் ஸ்டாலின் ஆட்சியை மிக மிக மிக விரும்புகின்றனர் என சமூக ஊடகங்கள் கூத்தாடும் .மற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் மறக்கப்படும் .இது தமிழகத்தின் தலையெழுத்து .இதனை மாற்ற முடியுமா என்பது கேள்விக்குறியே ?


Svs Yaadum oore
டிச 29, 2025 17:05

சக மனிதரை ரத்தம் சொட்டச் சொட்ட தாக்கியது மட்டுமன்றி, அதைக் காணொளியாகப் படம் பிடித்துச் சிலாகிக்குமளவிற்கு சிறார்களின் மன ஆரோக்கியம் போதைப் பழக்கத்தில் சிதைந்து கிடப்பது சமூகத்திற்குப் பெரும் ஆபத்தானது. ....ஆனால் வடக்கன் என்று இழிவாக பேசி வன்முறையை தூண்டும் மதம் மாற்றும் கும்பலுக்கு இது புரியாது..புரிந்தாலும் மத வெறியில் அழிந்து போகட்டும் என்றுதான் நினைக்கும் ..விடியலுக்கு வோட்டு போட்டு தானாகவே அழிவை தேடியும் மக்களுக்கும் இது புரியாது ....


பாலாஜி
டிச 29, 2025 17:03

சிறுவர்கள் கெட்டுள்ளதற்கு திரைப்படங்களிலும் சின்னத்திரை மெகா சீரியல்களில் வன்முறை காட்சிகள்


Svs Yaadum oore
டிச 29, 2025 17:00

திருத்தணி ரயில் நிலையத்தில் கஞ்சா போதையில் இளைஞரை சரமாரியாக வெட்டிய சிறுவர்கள்...வடமாநில இளைஞரை திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் கஞ்சா போதையில் இருந்த 4 சிறுவர்கள் சரமாரியாக வெட்டி ரீல்ஸ் எடுத்து வெளியிட்டிருப்பது அதிர்ச்சி...கரூர் மாவட்டம் கழுகூரில் அதீத மதுபோதையில் வாலிபர் ஒருவர், விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை... இவ்வளவு படு கேவலமான ஆட்சி தமிழ் நாட்டில் நடக்குது... ஊரெங்கும் கஞ்சா போதை பாலியல் குற்றம்....ரோட்டில் குழந்தை விளையாடிக்கொண்டிருந்தால் கூட போதை ஆசாமிகள் தூக்கி சென்று விடுவார்கள் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை