உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; மே 8ல் வெளியாகும் என அறிவிப்பு

12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; மே 8ல் வெளியாகும் என அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 8ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மே 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஒரு நாள் முன் கூட்டியே வெளியாக உள்ளது. 2024-2025ம் கல்வியாண்டில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வுகள் கடந்த மார்ச் 3ம் தேதி முதல் மார்ச் 25ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை 8.21 லட்சம் மாணவர்கள், 3,316 தேர்வு மையங்களில் எழுதியிருந்தனர். தேர்வு முடிவுகள் மே, 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றப்பட்டுள்ளது. வரும் மே 8ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மே 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஒரு நாள் முன் கூட்டியே வெளியாக உள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எழுதிய அனைவரும் அன்றைய தினம் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Gopalan
மே 06, 2025 21:05

அடுத்த வருடம் பரீட்சை வேண்டாம் என்று திராவிட மாடல் சொன்னாலும் ஆச்சரியம் இல்லை நீட் பரிட்சை போல.


Ramesh Sargam
மே 06, 2025 12:41

ஒரு நாள் முன்னரே ரிசல்ட் வருவதால், பாஸ் ஆகிவிடுவோம் என்பவர்களுக்கு மகிழ்ச்சி. தேறமாட்டோம் என்பவர்களுக்கு ஒரே மனவருத்தம்.


Ramesh Sargam
மே 06, 2025 12:11

தேர்வு எழுதிய எல்லா மாணவர்களுக்கும் Best Of Luck.


புதிய வீடியோ