உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள்!

மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திட்டங்களுக்கு ஹிந்தியிலும், சமஸ்கிருதத்திலும் பெயர் வைப்பது, கீழடி அறிக்கை போன்றவற்றிற்கு பதில் வருமா என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை நான் கேட்கிறேன்:ஊழல்வாதிகள் பாஜவின் கூட்டணிக்கு வந்தபின்பு வாஷிங் மெஷினில் வெளுப்பது எப்படி?நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்?மத்திய அமைச்சர்களே நம் குழந்தைகளை அறிவியலுக்குப் புறம்பான மூட நம்பிக்கைகளைச் சொல்லி மட்டுப்படுத்துவது ஏன்?எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், கவர்னர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?பாஜ தேர்தல் வெற்றிக்காக, மக்களின் வாக்குகளைப் பறிக்கும் வாக்குத் திருட்டை ஆதரிப்பது ஏன்?இரும்பின் தொன்மை குறித்து அறிவியல்பூர்வமாகத் தமிழ்நாடு மெய்ப்பித்த அறிக்கையைக் கூட அங்கீகரிக்க மனம்வராதது ஏன்?கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன்?இதற்கெல்லாம் பதில் வருமா? இல்லை வழக்கம்போல, வாட்சப் யூனிவர்சிட்டியில் பொய்ப் பிரசாரத்தைத் தொடங்குவீர்களா? இவ்வாறு தமது பதிவில் முதல்வர் ஸ்டாலின் கேள்விகளை எழுப்பி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 76 )

M Ramachandran
நவ 04, 2025 07:29

மக்கள் அறிவில் சிறந்தவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. உங்க குழப்பம் காரணம் கள்ள ஓட்டு சமாச்சாரம். இனி செல்லுபடியாகாது என்ற குழப்பம். அயலக மதவாதிகள் தீவிரவாத்திகள் இவர்கலிய்ய வைத்து அரசில் செய்ய முடியாது என்ற குழப்பம் 2026 தேர்தளுக்கு பின்பு உங்களுக்கு அரசியல் ஓய்வுகொடுத்து விடுவார்கள். நீங்க இது வரை குடுபத்துக்கா சட்டத்துக்கு புறம்பாக சேர்த்த பணத்துடன் தலைமறைவாகி செட்டில் ஆகி விடுவீர்கள்.


N S
அக் 30, 2025 11:55

எந்த கேள்வியும் பதிலளிக்க முடியாதவை.


N S
அக் 30, 2025 11:47

இந்த கேள்விகள், தேவைப்படும் பொழுது, அன்றே சொன்னேன் என கூறி மழுப்பலாம்.


viiyasan
அக் 21, 2025 06:36

ஆட்சி கவுந்து விக்கு டோப்பா பறக்க போகுது சீக்கிரம்


Matt P
அக் 19, 2025 13:16

தட்சிணா மூர்த்தி கருணாநிதி என்று வட மொழியில் பெயர் வைப்பார். ஸ்டாலின் என்று வேற்று மொழியில் வைப்பார். ஸ்டாலின் அவரு பேரன் பேத்திகளுக்கும் வட மொழியில் பெயர் வைப்பார் தமிழ்நாட்டில் எப்போதோ வட மொழிகள் பெயர்கள் ஆரம்பித்து விட்டன. அதையெல்லாம் சீக்கிரம் மாற்றி விட முடியுமா? குருநாதர் ராமஸ்வாமின் பெயரே வட மொழி பெயர் தானே. தூய என்றாலே நல்ல தமிழ் என்று நினைக்கிறார்கள் பலர். தூய என்றாலும் வட மொழி தானாம். வடமொழி தமிழோடு இரண்டற கலந்த மொழி. திருக்குறளில் முதல் குரலிலேயே ஆதி பகவான் என்று தானே இருக்கிறது. வடமொழி ஷ் இல்லாமல் யார் பெயர் வைக்கிறார்கள் குடும்பகளில்? ரமேஷ் ராஜேஷ் ஐஸ்வர்யா இக்கிஷ் பிக்கிஷ் நிக்கிஷ். ...ஷ் இல் பல பெயர்கள் ஆரம்பித்து விட்டன.


Ranganathan
அக் 18, 2025 22:45

மாநில திட்டங்களுக்கு கருணாநிதி பெயரும், ஈவேரா பெயரும் வைப்பது ஏன் என்ற கோடிக்கணக்கான தமிழர்கள் கேள்விக்கு பதில் கிடைக்குமா முதல்வரே??? இஸ்லாமிய மற்றும் கிறித்துவ பண்டிகைகளுக்கு முந்தி போய் வாழ்த்து சொல்லி , பல நலத்திட்ங்களையும் அவர்களுக்கு மக்களின் வரி பணத்தை வாரி வழங்கும் நீங்கள், ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட சொல்லாமல், ஆனால் ஹிந்து கோயில் சொத்துகளை, மாநில அரசு செலவினங்களுக்கு பயன்படுத்து எப்படி நியாயம் ஆகும் என்பதற்கு பதில் உண்டா தமிழக முதல்வரே??? நீங்கள் எல்லாருக்குமான முதல்வரா ??? இல்லை சிறுபான்மையினருக்கு மட்டுமே முதல்வரா என்பதை தெளிவு படுத்துங்கள்.


Matt P
அக் 19, 2025 13:19

கருணாநிதி என்ற பெயரே வடமொழி பெயர். கருண் என்றால் தமிழ் மொழியில் இரக்கம். நிதி என்றால் தமிழில் செல்வம். நிதி என்பதும் வட மொழி வார்த்தை தான்.


உண்மை கசக்கும்
அக் 18, 2025 22:40

திருட்டு கடை அல்வா வேண்டாங்க.உங்க தெலுங்கு பிரதேசத்திற்கு நடைய கட்டுங்க. திருவிளையாடல் தருமி மாதிரி கேள்வி தான் கேட்க தெரியும். அதுவும் யாரோ எழுதி கொடுத்த பிட்.


sankaranarayanan
அக் 18, 2025 21:32

நாற்றமெடுத்த ஆட்சியே காற்றில் போகப்பொது இதிலே கேள்விகள் ஒன்றுதான் குறைச்சல் இன்றோ நாளையோ என்று இருக்கும்போது ஆட்சியின் அந்தி காலத்தில் அஸ்தமிக்கும்போது தேவையா இது


ManiK
அக் 18, 2025 20:32

திமுக ஸ்டாலின் தானே ஆட்சியில இருக்கறோம்னு தெரியாம மத்திய அரசிடம் கேள்வி கேட்பது நகைச்சுவையாக இருக்கிறது. அண்ணாமலை கேட்ட கேள்விகளுக்கு மண்டபத்துல பதில் கேட்டு வாசிச்சு காட்டுங்க நைனா.


MARUTHU PANDIAR
அக் 18, 2025 19:24

சிப்பு வருது சிப்பு


முக்கிய வீடியோ