உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியல் லாபத்துக்காக பிளவை ஏற்படுத்த முயற்சி; முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

அரசியல் லாபத்துக்காக பிளவை ஏற்படுத்த முயற்சி; முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'ஒரு சிலர், அரசியல் லாபத்திற்காக பிரிவுகளையும், பிளவுகளை உண்டாக்குகின்றனர்,' என்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை உத்தங்குடியில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.17 கோடி மதிப்பில் 7 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.3 ஆயிரத்து 65 கோடியில் 63 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கியும் வைத்தார். மேலும், 2 ஆயிரத்து 70 கோடி மதிப்பிலான முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

அரசியல் சூழ்ச்சி

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; மக்களுக்காக பல திட்டங்களை நம் அரசு கொண்டு வந்ததால் தான், எதிர்க்கட்சிகள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கின்றனர். வயிற்று எரிச்சலால் ஆரோக்யமற்ற அரசியல் சூழ்ச்சிகளை செய்து பார்க்கிறார்கள். நாம் வளர்ச்சி அரசியலைப் பேசினால், அவர்கள் வேறு அரசியலை பேசுகிறார்கள். உறுதியாக சொல்கிறேன், அவர்கள் எத்தனை சூழ்ச்சி செய்தாலும், அனைத்தையும் முறியடிப்போம்.

என்னாச்சு?

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியல். அதை நிருபிக்கும் விதமாக, ரூ.36,660 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன். இதுதான் எங்களின் அரசியல். 10 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை என்னாச்சு? குஜராத் போன்ற பாஜ ஆளும் மாநிலங்களுக்கு நிதியை கொட்டிக் கொடுக்கிறார்கள். ஆனால், தமிழகத்திற்கு ஏதும் செய்வதில்லை.மதுரைக்கு மெட்ரோ ரயிலை சப்பையான காரணங்கள் சொல்லி நிராகரிக்கிறார்கள். பாஜ ஆளும் மாநிலங்களில் மெட்ரோ ரயிலுக்கு அனுமதி கொடுத்தீர்கள். மதுரையில் மெட்ரோ ஓடக் கூடாதா?

புதிய அறிவிப்புகள்

மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வைகை ஆற்றின் வடகரையில் 8 கி.மீ., நீளத்திற்கு ரூ.130 கோடி செலவில் புதிய சாலை அமைக்கப்படும்; மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியிருக்கும் 4 மாசி வீதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் புதிய பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்; மதுரை கிழக்கு வட்டத்தில் அமைந்துள்ள உத்தங்குடி உபரிநீர் கால்வாயில் ரூ.7 கோடியில் தடுப்பு சுவர் கட்டப்படும்; மேலூர் வட்டத்தில் பெரியருவி நீர்த்தேக்கம் மற்றும் அதனை சார்ந்துள்ள கால்வாய்கள் ரூ.2 கோடியே 60 லட்சத்தில் புனரமைக்கப்படும்; பாலாற்றின் அருகே ரூ.9 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிய தடுப்பணை கட்டப்படும் கொடிமங்கலம், மேலமாத்தூர், புதுக்குளம், விளாச்சேரி கிராமங்களில் இருக்கும் ஏரிகள் மற்றும் கால்வாய்கள் ரூ.10 கோடி செலவில் மேம்படுத்தப்படும்; சாத்தனார் அணை - வைகாசிப்பட்டி சாலை, முடுவாரப்பட்டி - சல்வார்பட்டி சாலை, பாலமேடு - மேம்பருளி வரை உள்ள சாலைகள் ரூ.1.50 லட்சம் செலவில் வனத்துறை அனுமதி பெற்று மேம்படுத்தப்படும் வளர்ச்சி தான் சிந்தனைநம்முடைய சிந்தனை எல்லாம் தமிழகத்தின் வளர்ச்சியைப் பற்றி தான். ஆனால், சில கட்சிகளுக்கு எப்போதுமே கலவர சிந்தனை தான். தேவையில்லாத பிரச்னைகளை கிளப்பி, வளர்ச்சியை தடுக்கப் பார்க்கிறார்கள். காலம் காலமாக கார்த்திகை தீபத்திற்கு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தீபம் ஏற்றுவது போல, கடந்த 3ம் தேதி மாலை 6 மணிக்கு பால தீபம் ஏற்றப்பட்டது. அதன்பிறகு, அதே நேரத்தில் உச்சிப்பிள்ளையார் கோவில் தீபமண்டபத்தில் தீபம் ஏற்றி, சுவாமி புறப்பாடாகியது. இது எல்லாம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பாக செய்யப்பட்டது. இது எல்லாம் உள்ளூர் மக்களுக்கு நன்றாக தெரியும். அவர்கள் எல்லாம் நல்லபடியாக தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பினர். ஆனால், இப்போது என்ன பிரச்னை நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னையை கிளப்பும் கூட்டத்தின் நோக்கம் என்ன? இதுவும் மக்களுக்கு நன்கு தெரியும்.

இதுவல்ல ஆன்மிகம்

ஆன்மிகம் என்பது மன அமைதியை, நிம்மதி தந்து மக்களை ஒற்றுமையாக இருக்க வைக்க வேண்டும். நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும். இதுதான் உண்மையான ஆன்மிகமாக இருக்க முடியும். ஒரு சிலர் அரசியல் லாபத்திற்காக பிரிவுகளையும், பிளவுகளை உண்டாக்குகின்றனர். இது கேடுகெட்ட அரசியல். தீபம் எங்கு, எப்போது ஏற்ற வேண்டுமோ, அங்கு வழக்கம் போல சரியாக, முறையாக ஏற்றப்பட்டு இருக்கிறது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு செய்துள்ளது இந்த அரசு. இப்படிபட்ட அரசை ஆன்மிகத்திற்கு எதிரி என்று சொன்னால், சொல்பவர்களின் உள்நோக்கம் என்ன என்பது உண்மையான பக்தர்களுக்கு நன்கு தெரியும்.

சிக்சர் தான்

டில்லியில் இருந்து நமக்கு எத்தனை இடையூறுகள் கொடுத்தாலும், நிதி நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும், கவர்னர் மூலம் முட்டுக்கட்டை போட்டாலும், எல்லாவற்றையும் மீறி, இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலமாக பொருளாதார வளர்ச்சியை தமிழகம் அடைந்திருக்கிறது. எங்களின் வளர்ச்சி பயணத்தை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நீங்கள் எப்படி பந்து வீசினாலும், அடிப்பது சிக்சர் தான். அந்த டீமுக்கு பழைய அடிமைகள், புதிய அடிமைகள், பி டீம், சி டீம் சிக்கலாம். ஆனால், அந்தத் தொடரில் நாங்கள் தான் சாம்பியன். வரும் 15ம் தேதி முதல் விடுபட்ட மகளிருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப் போகிறோம், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 62 )

sivaram
டிச 07, 2025 22:15

எது அரசியல் லாபம் முடிந்தால் கண்டுபிடியுங்கள் தமிழ் மக்களே , பாலு மகன், துரை முருகன் மகன், நேரு மகன், பொன்முடி மகன், வைகோ மகன் ,கருணாநிதி மகன், பேரன் ,மச்சான் மேலும் அவரின் மகன்கள் ,கருணாநிதியின் மகள் சொல்லி கொண்டே போகலாம் , லிஸ்ட் நீளமோ நீளம் , ஆனால் நாங்கள் சொல்லுவோம் பிரித்தாளும் சூழ்ச்சி , மாற்றாந்தாய் மனப்பான்மை என்னவெல்லாமோ நாங்கள் கூறுவோம் நாங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள ஒரு கூட்டம் இருக்கிறது


Suppan
டிச 07, 2025 21:11

விடியல்தான் மட்டமான அரசியல் செய்கிறார். ஹிந்துக்களின் உரிமையை முடக்குகிறார். "மதுரைக்கு மெட்ரோ ரயிலை சப்பையான காரணங்கள் சொல்லி நிராகரிக்கிறார்கள்.ஹா ஹா " மெட்ரோவுக்குத் தேவையான தரமான விரிவான திட்ட அறிக்கையை அளிக்கத் துப்பு இல்லை. இந்த அறிக்கையைப்பார்த்து திட்ட வல்லுநர்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள். தமிழகத்தின் மானத்தைக் கப்பலேற்றிய விடியலுக்கு பேச்சு மட்டும் யாரோ எழுதிக்கொடுத்த வாய் கிழிகிறது.


Chandru
டிச 07, 2025 21:03

அடிப்பது சிக்ஸர் அல்ல. அல்லவே அல்ல. ஆகப்போவது விரைவில் ரன் அவுட் .


Madhavan
டிச 07, 2025 20:49

எப்படியெல்லாம் சிக்ஸர் அடிக்கிறார்கள் பாருங்கள் டிசம்பர் நான்காம் நீதி வரை தீபத் தூண் என சொல்லிக் கொண்டிருந்தவர்கள் பிறகு அதனை சர்வே கல், நில அளவை கல், சர்வே கல் என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்தனர். உச்ச நீதி மன்றத்தில் வரவிருக்கும் வழக்கை எதிர் கொள்ள வேண்டி அர்ச்சகர்களிடமிருந்து கடிதங்களும், நில அளவையர்களிடமிருந்து அறிக்கையையும் வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த பிள்ளையார் பட்டி அர்ச்சகர் கார்த்திகையன்று மட்டுமே மலை தீபம் ஏற்றவேண்டும் எனச் சொல்கிறார் ஆனால் நீதிபதி சொல்லியபடி தீபத் தூணில் ஏற்றக் கூடாது எனச் சொல்லவில்லை. டிசம்பர் மூன்றாம் தேதி தீபத் தூணில் ஏற்ற அனுமதிக்கவில்லை எனவே நீதிபதியவர்கள் அடுத்த நாள் ஏற்ற உத்தரவிட்டார். வாக்கிய பஞ்சாங்கப்படி டிசம்பர் மூன்று, நான்கு, ஐந்து நாட்களில் இது கொண்டாடப்படுகிறது. மலைகள் இல்லாத ஊர் கோவில்களில் கோவிலுக்கு எதிரே சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. அந்த மலையின் மீது ஏழு அடி உயர சர்வே கல் எதற்கு ? யாராவது மலையை உயர்த்தி விடாமல் இருக்கவா? அல்லது யாராவது தூக்கிக் கொண்டு போகாமல் இருக்கவா?


Ramesh Sargam
டிச 07, 2025 20:36

வாக்குக்காக மற்ற மதத்தினரை ஆதரிப்பது, ஹிந்துக்களை கேவலமாக நடத்துவது இதுதான் உங்கள் சமத்துவ ஆட்சியா?


Rajasekar Jayaraman
டிச 07, 2025 20:09

பகல் வேஷக்காரன்.


Rameshmoorthy
டிச 07, 2025 20:06

First abide by constitution and obey and ute court orders not just support few communities for your own benefit, stop Drama. Hope yu can recollect the word arasiyal or aviyal


Sun
டிச 07, 2025 19:48

மதுரை, திருப்பரங்குன்றத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் தீபமண்டபத்தில் திருக் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை நிறுத்தி பொதுமக்களை அதிகாரிகளை வைத்து தடுத்ததும்நானே.சென்னை ,குரோம்பேட்டை, ஹஸ்தினாபுரத்தில் உயர் நீதி மன்ற உத்தரவுப்படி சர்ச்சை இடித்து ஆக்கிரமிப்பைஅகற்றவந்த அதிகாரிகாரிளை தடுத்து நிறுத்தி கிறிஸ்தவ பொதுமக்களை சர்ச்சின் உள்ளே அனுமதித்ததும் நானே. நீங்கள் சொன்னபடி எல்லாவற்றையும் பொது மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். 2026 ல் இதற்கான எதிர் வினை பொது மக்களிடமிருந்து நிச்சயம் கிடைக்கும்.


Selliah Ravichandran
டிச 07, 2025 19:26

If Jayalalitha mam come back dmk dead.she's is now more


G Mahalingam
டிச 07, 2025 19:07

இந்துக்களை கேனையா நடத்தியது போதும். இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாமல் மற்ற மதங்களுக்கு வாழ்த்து சொல்வது எந்த விதத்தில் நியாயம். அரசியல் லாபத்துக்காக இஸ்லாமியர்கள் வோட்டு வேண்டும் என்பதற்காக பிளவை ஏற்படுத்துவது திமுகதான் தொன்றுதொட்டு 100 ஆண்டாக விளக்கு ஏற்றி கொண்டு இருக்கிறார்கள் இப்போதும் அதை செய்கிறோம் என்று பேச திமுகவுக்கு யோக்கியதை கிடையாது. தொன்றுதொட்டு வந்துள்ள அனைத்து சாதிகளும் அர்ச்சகர்கள் சமஸ்கிருதம் அர்ச்சனை எல்லாம் தொன்றுதொட்டு வந்ததை மாற்றியது எந்த விதத்தில் நியாயம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை