உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1,000 சவரன் கேட்டு வரதட்சணை கொடுமை மாஜி எம்.எல்.ஏ., குடும்பத்தினர் மீது புகார்

1,000 சவரன் கேட்டு வரதட்சணை கொடுமை மாஜி எம்.எல்.ஏ., குடும்பத்தினர் மீது புகார்

ஆவடி:அம்பத்துார் அடுத்த புதுார், பானு நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், 58. இவர், சோழிங்கநல்லுார் முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.கந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் வரதட்சணை கொடுமை புகார் அளித்துள்ளார்.அந்த புகாரில் புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: நான் அம்பத்துாரில் மரக்கடை வைத்து வியாபாரம் மற்றும் கட்டுமான தொழில் செய்து வருகிறேன். என் மகள் சுருதி பிரியதர்ஷினி மருத்துவராக பணிபுரிகிறார். மகளுக்கு வரன் தேடியபோது, சோழிங்கநல்லுார் முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ. கே.பி.கந்தன், அவருக்கு வரன் பார்ப்பது தொடர்பாக என்னிடம் பேசினார்.அதன்படி, இரு வீட்டார் சம்மதத்துடன், கே.பி.கந்தனின் மகனும், சென்னை மாநகராட்சி 182வது வார்டு கவுன்சிலருமான கே.பி.கே.சதிஷ்குமாருடன், 2018ல் என் மகளுக்கு திருமணம்நடந்தது.திருமணத்தின்போது, 'பெண்ணிற்கு 1,000 சவரன் நகைகள், மாப்பிள்ளைக்கு 100 சவரன் நகைகள், இரண்டு விலை உயர்ந்த கார்கள், ரேடோ வாட்ச், வைர பிரேஸ்லெட், வைர மோதிரம்' உள்ளிட்டவை, வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என, கே.பி.கந்தன் கேட்டார்.அவர் கேட்டபடி, விலை உயர்ந்த ஆடி மற்றும் பி.எம்.டபிள்யூ., கார்கள், 600 சவரன் நகைகள், 20 கிலோ வெள்ளி உட்பட இதர வீட்டு உபயோக பொருட்கள் சீர்வரிசையாக கொடுத்தேன்.திருமணம் முடிந்து, இரண்டு ஆண்டுகள் வரை சந்தோஷமாக வாழ்ந்தனர். அதன்பின், மருமகனின் சகோதரி, அவரது அம்மா ஆகியோர், திருமணத்திற்கு கேட்ட 1,000 சவரன் நகைகள் போடவில்லை எனக் கூறி, வார்த்தைகளால் கொடுமைப்படுத்த துவங்கினர்.இந்த நிலையில், கடந்த 2019ல் என் மகளுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் ஆத்திரமடைந்த கே.பி.கந்தன் குடும்பத்தினர், கடந்த 2021ல், என் மகளை அடித்து கொடுமைப்படுத்தினர்.இதனால், மன விரக்தியடைந்த எனது மகள், திரும்பி என் வீட்டிற்கு வந்துவிட்டாள். இந்த பிரச்னை குறித்து, பலமுறை கே.பி.கந்தனிடம் பேசியும் எந்த பலனுமில்லை.அதன்பின், பிரச்னை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து, கே.பி.கந்தனிடம் நான் நேரடியாக சென்று பேசிய போது, மீதமுள்ள 500 சவரன் நகைகள், அவரது மகன் வியாபாரம் செய்ய 10 கோடி ரூபாய் தர வேண்டும் என கேட்டு மிரட்டினார்.எனவே, என் மகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, வாழவிடாமல் என் வீட்டிற்கு அனுப்பிய மருமகன் கே.பி.கே.சதீஷ்குமார், அவரது தந்தையும், சோழிங்கநல்லுார் முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ. கே.பி.கந்தன், அவரது தாய் சந்திரா மற்றும் சகோதரி இந்துமதி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.புகாரை பெற்ற ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகம், விசாரணைக்காக அம்பத்துார் உதவி கமிஷனருக்கு அனுப்பியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை