உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உயர் அதிகாரிகள் மீது புகார்: மயிலாடுதுறை டிஎஸ்பி சஸ்பெண்ட்

உயர் அதிகாரிகள் மீது புகார்: மயிலாடுதுறை டிஎஸ்பி சஸ்பெண்ட்

சென்னை: சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐ.ஜி., செந்தில்வேல், மயிலாடுதுறை எஸ்.பி., உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்திய டி.எஸ்.பி., சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டு உள்ளார்.மயிலாடுதுறை மதுவிலக்குப் பிரிவு டி.எஸ்.பி., சுந்தரேசன். இவருக்கு வழங்கப்பட்டு இருந்த அலுவலக அரசு வாகனம் திரும்ப பெறப்பட்டதால், வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்தே சென்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின், 'டி.எஸ்.பி., சுந்தரேசனின் வாகனம் திரும்ப பெறப்படவில்லை, அலுவல் பணி காரணமாக அவரிடம் இருந்து வாங்கிய வாகனத்தை மீண்டும் திரும்ப வழங்கி விட்டதாக' தெரிவித்திருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1980tgzg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இச்சம்பவத்தின் பின்னணியில், மாநில சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐ.ஜி., செந்தில்வேலன் உள்ளிட்டோர் உள்ளனர் என்றும், மயிலாடுதுறை எஸ்.பி., ஸ்டாலின் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் சுந்தரேசன் சுமத்தினார். இதற்கு எஸ்.பி., ஸ்டாலின் மறுப்பு தெரிவித்தார்.இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய மண்டல ஐ.ஜி., ஜோஷி நிர்மல் குமார், தஞ்சாவூர் டி.ஐ.ஜி., ஜியாவுல் ஹக் ஆகியோர் விசாரித்தனர். சீருடை பணியாளர் விதிகளை மீறி, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக, சுந்தரேசனை 'சஸ்பெண்ட்' செய்யவும் பரிந்துரை செய்தனர்.இந்நிலையில் இதனை ஏற்று, விதிகளை மீறி சீருடையில் பேட்டி அளித்ததற்காகவும், உயர் அதிகாரிகள் மீது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை தெரிவித்த காரணத்திற்காகவும் சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்து தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டு உள்ளார்.

6 குற்றச்சாட்டு!

சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் மீது 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன 1. உயர் அதிகாரி அனுமதியின்றி பேட்டி அளித்தது, உயர் போலீஸ் அதிகாரிகள் மீது அடிப்படை அற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியது 2. தனக்கு வாகனம் அளிக்கப்படாமல் அநீதி இழைக்கப்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தது 3. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னை அபிராமியை அச்சுறுத்தியது, அவரை தற்கொலை முயற்சிக்கு தூண்டியது 4. ஏசி, பிரிண்டர் வசதி செய்யும் படி எஸ்ஐ முருகவேலிடம் அதிகாரம் செலுத்தியது5. முறையான குறை தீர்ப்பு வழிமுறைகளை பின்பற்றி உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்காதது 6. உயர் அதிகாரியான மாவட்ட எஸ்பியின் அதிகாரத்தை கேள்வி கேட்டது, ஒழுங்கீனமாக நடந்து கொண்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

இரும்புக்கர மாடல்
ஜூலை 20, 2025 09:17

ஹும் துருப்பிடித்த இரும்புக் கரம், இந்த கையால் ஆகாத இதைதவிர வேற எதை செயும்...


bharathi
ஜூலை 20, 2025 08:17

when he was in 3rd standard he has stolen the pencil from his co student which is punishable now


Padmasridharan
ஜூலை 20, 2025 07:26

மக்களிடம் அதட்டி, மிரட்டியடித்து பணம்/பொருள் புடுங்கும் ஒழுங்கீனமில்லாத சீருடை பணியாளர்களின் மேல் புகார் அளிக்க சாதாரண மக்கள் என்ன செய்ய வேண்டும் சாமி. ஒரு toll free எண்ணை உருவாக்கலாமே. இந்த மாதிரி ஆட்கள் ஆதாரமில்லாமல்தானே குற்றங்களை செய்கின்றனர். புகாரளித்தாலும் பஞ்சாயத்து என்ற பெயரில் பணம் கேட்டு வாங்கி குற்றங்களை மறைக்கின்றனர்.


Padmasridharan
ஜூலை 20, 2025 07:21

ஆதாரமில்லாமல் தானே எல்லா குற்றங்களையும் அதிகாரத்திலுள்ள ஆட்கள் செய்கிறார்கள். அது அவரவர்களுக்கே தெரியும். வண்டியை திரும்ப எத்தனை மணிக்கு, யாரிடம் கொடுத்தார்கள். ரோந்து பணியில் நடந்து போகவில்லையா. இவரும் நடந்து போனது ஒரு குத்தமா.. எத்தனை சீருடை பணியாளர் விதிகளை மீறி, பணம்/ பொருள் மக்களிடம் இருந்து புடுங்கி ஒழுங்கீனமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள்தான் முதலில் சட்டத்தை மீறுகின்றனர்.


பாரதியின் சிஷ்யன்
ஜூலை 20, 2025 00:39

அநீதியை பண்றதே அந்த உயர் போலீஸ் அதிகாரிங்க தான்


Anantharaman Srinivasan
ஜூலை 19, 2025 23:48

சுந்தரேசன் கூடிய சீக்கிரமா அரசியல்வாதியாக உருவெடுப்பார்... 2026 தேர்தலில் வேட்பாளராக நிற்பார்.


மோகன்
ஜூலை 19, 2025 23:08

விடியல் ஆட்சி ரொம்ப பிரமாதமா இருக்கு.. த்தூ.. இதெல்லாம் ஒரு ஆட்சியா.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 19, 2025 22:50

ஒரு யூட்யுபர் தனது வீடியோவில் திருபுவனம் அஜீத் கொலைக்கு பின்னணியில் இந்த டேவிட்சன் இருப்பதாக பதிவு செய்திருந்தார்.


Saran
ஜூலை 19, 2025 22:22

Tamil nadu people must suffer for electing this idiot. But we have a huge Numbers of mostly slum people who vote for money. They never care about the state.


Pandi Muni
ஜூலை 19, 2025 23:00

பணத்திற்காக வாக்களிக்கும் குடிசைவாசிகள்தான் நம்மிடம் அதிகம். அவர்களுக்கு மாநிலத்தைப் பற்றி மற்றவர்களை பற்றி ஒருபோதும் கவலை இல்லை.


சிவம்
ஜூலை 19, 2025 22:22

அரசு செயலர்கள், சட்ட விதிகளின் படியும், கோப்புகளில் காணப்படும் ஆதாரங்களின் அடிப்படையிலும் மட்டுமே நடவடிக்கை எடுப்பார்கள். தர்மப்படி இவரது பணியிடை நீக்கம் தவறு என்று தெரிந்தாலும் செயலரால் ஒன்றும் செய்ய முடியாது. அது தான் அரசு இயந்திரம். இவருக்கு அடுத்த கதவு நீதிமன்றம் மட்டுமே.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 19, 2025 22:48

நீதிமன்றமும் இன்றைய அரசு சார்ந்தே இயங்குகின்றது


முக்கிய வீடியோ