உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டமன்ற தொகுதிவாரியாக கணக்கெடுப்பு பணிகள்: தமிழக தேர்தல் ஆணையம்

சட்டமன்ற தொகுதிவாரியாக கணக்கெடுப்பு பணிகள்: தமிழக தேர்தல் ஆணையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டமன்ற தொகுதிவாரியாக கணக்கெடுப்பு பணிகள் நடப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.நேற்று தமிழகத்தில் நடைபெற்ற முதற்கட்ட லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் சதவீதத்தில் குளறுபடி ஏற்பட்டது. இதைடுத்து இன்று மாலை வெளியான தகவலின் படி 69.46 சதவீதம் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக தர்மபுரி லோக்சபா தொகுதியில் 81.48 சதவீதமும், மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் 53.91 சதவீதமும் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியது, தமிழகத்தில் 69.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது சட்டமன்ற தொகுதிவாரியாக கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் அலுவலர்கள் இறுதிப்படுத்தி வகின்றனர். 39 தொகுதிகளிலும் சுமூகமாக தேர்தல் நடந்துள்ளதால் எந்த தொகுதியிலும் மறு வாக்குப்பதிவு நடைபெறாது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் தென்சென்னை தொகுதியில் முதலில் அறிவிக்கப்பட்டதை விட 13.55 % வாக்குகளை குறைத்து அறிவித்துள்ளது.மத்திய சென்னையில் முதலில் அறிவித்ததை விட 13.44 % குறைத்தும், தூத்துக்குடியில் முதலில் அறிவித்ததை விட 10.97 % குறைத்தும் வடசென்னையில் முதலில் அறிவித்ததை விட 9.13 % குறைத்தும், ஸ்ரீபெரும்புதூரில் முதலில் அறிவித்ததை விட 9.56% குறைத்தும்சென்னையில் முதலில் அறிவித்ததை விட 8.36% குறைத்தும்,கோவையில் முதலில் அறிவித்ததை விட 6.36% வாக்குகள் குறைத்தும்குமரியில் முதலில் அறிவித்ததை விட 4.69% குறைத்தும்,திருச்சியில் முதலில் அறிவித்ததை விட 3.79% வாக்குகள் குறைத்தும்சிவகங்கையில் முதலில் அறிவித்ததை விட 7.11 % குறைத்தும் மதுரையில் முதலில் அறிவித்ததை விட 7.06% வாக்குகள் குறைத்தும் அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

SURESH KUMAR
ஏப் 21, 2024 14:39

சேலம் கலெக்டர் தேர்தல் நடத்தை முறைப்படி வாகனத்தை சரியாக சோதனை செய்யாத ஒரு காவல் அதிகாரிக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்ததைப் போன்று இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


SURESH KUMAR
ஏப் 21, 2024 14:30

இது எதற்கு இப்போது? தேர்தலே முடிந்துவிட்டது உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றம் தானே முன்வந்து பொறுப்பு இல்லாமல் தவறான அறிக்கை கொடுத்த இவருக்கு தண்டனை தர வேண்டும்


அப்புசாமி
ஏப் 21, 2024 11:32

ஒரு லட்சம் வாக்காளர்கள்.பெயர் காணாம போச்சுன்னு அண்ணாமலை சொல்றாரு. எவ்வளவு பெரிய விஷயம்.


Kirupapuri
ஏப் 21, 2024 09:08

சுமார் 5 அல்லது 6 தொகுதிகளில் தோராயமாக 10 சதவீதம் ஏற்றத்தாழ்வு உள்ளது எனில் தேர்தல் பற்றிய தகவல் தொடர்புக்கான மொத்த முயற்சியும் வீணே. தேர்தல் ஆணையகத்தின் கண்ணியம் மற்றும் வெளிப்படைத் தன்மையை கேள்விக் குறியாக்கும் வகையில் இச் செயல் அமைந்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கதும் துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. தொலை தொடர்பு வளர்ந்துள்ளது. அதன் வளர்ச்சியால் மிகத் துல்லியமாக வாக்குப்பதிவு கணக்கு எடுக்க முடியும். இக்காலத்தில் 10 சதவீதம் எண்ணிக்கையில் அதிகமாக முதல் தகவல் கொடுத்தது மாபெரும் தவறு. இது ஏற்க முடியாத ஒன்று. ஒரு தொகுதிக்கு 10 சதவீதம் என்பது சுமார் 2 லட்சம் வாக்குகள். இதற்கு அந்த தொகுதியின் உதவி தேர்தல் அதிகாரி மற்றும் மண்டல அதிகாரி பொறுப்பேற்க வேண்டும். ஆங்கிலத்தில் இது suppression of facts. உண்மையை மறைத்தல். அதற்குண்டான தண்டனை வழங்கப்படவேண்டும்.


Nagendran,Erode
ஏப் 21, 2024 07:50

தினமலருக்கு ஒரு வேண்டுகோள் தயவுசெய்து இந்த ஆளோட ஃபோட்டோவ குளோசப்பில் போடாதீங்க.


RP Iyer
ஏப் 21, 2024 02:18

Absolutely There can be no second opinion???


R Kay
ஏப் 21, 2024 02:17

utter useless we arent interested in your blabbers


ganesan udayakumar
ஏப் 20, 2024 23:44

It is high time the chief election commission should review the method of conducting the election We all know that when a state election appoints the local government officers as returning officers and booth managing staff, they are bound to be loyal to the state ruling party Then how can one expect a free and fair election? Specially in Tamil Nādu with a corrupt government in place there is bound to malpractices Even a layman will understand this when the election officer announces one set of data and then reverses the same Why cant the election commision bring in people from other states as retuning officers atleastHope the CEC will take note


Jagan (Proud Sangi)
ஏப் 20, 2024 23:20

தன் பெயர் உள்ளதா என்பதை பார்க்க பல வழிகள் உண்டு ஆப் கூட இருக்கு அமெரிக்க போன்ற நாடுகளில் கூட வாக்காளராகளே தன் ரெஜிஸ்டர் செய்துள்ளார்களா என்பதற்கு பொறுப்பு எல்லாத்துக்கும் மத்தவனை குறை சொல்வதை நிறுத்தணும் செப்டம்பர் முதல் வாக்களர் பட்டியல் வெளியில் உள்ளது நம்ம பெயர் இருக்க என்று ஆப் மூலமே செக் பண்ணலாம் ரொம்ப ஈஸி எங்கயும் போகவேண்டாம்


R Kay
ஏப் 21, 2024 02:21

இதெல்லாம் படித்தவர்களுக்கு எல்லோருக்கும் இது சாத்தியமில்லை ஆண்டாண்டுகளாக இதுவரை வோட்டு போட்டவர்கள், தாங்கள் அதே முகவரியில் வசிக்கும் பட்சத்தில், தொகுதி மாரு சீரமைப்பு எதுவும் நடக்காதபோது, விட்டுப்போயிருக்கும் என சந்தேகப்படமாட்டார் எந்த காரணத்திற்காக நீக்கப்பட்டது என்ற விவரத்தை அளிக்க வேண்டியது தேர்தல் கமிஷனின் கடமை


Senthil K
ஏப் 20, 2024 23:02

திமுகக்காரன்.. தேர்தல் ஆணையம் துணையுடன்... வேலையை காட்ட ஆரம்பித்து விட்டான்... அதனால் தான்... நம்ம மாநில தேர்தல் ஆணையர்.. சம்பந்தமில்லாமல் உலறுகிறார்...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை