உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமித்ஷா உடன் அரசியல் சூழல் குறித்து ஆலோசனை: செங்கோட்டையன்

அமித்ஷா உடன் அரசியல் சூழல் குறித்து ஆலோசனை: செங்கோட்டையன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ஹரித்வார் செல்வதாக கூறிவிட்டு டில்லி சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் , மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தற்போதைய அரசியல் சூழல் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.கடந்த 5ம் தேதி, கோபிசெட்டிப்பாளையத்தில் பேட்டியளித்த செங்கோட்டையன், 'அ.தி.மு.க.,விலிருந்து வெளியே சென்றவர்களை இணைக்காவிட்டால், வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியாது. 'எனவே, பிரிந்து சென்றவர்களை இணைக்கும் பணியை, 10 நாட்களுக்குள் கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி துவங்க வேண்டும்; இல்லையெனில், நானே இணைப்பு பணியில் ஈடுபடுவேன்' என எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், செங்கோட்டையன் மற்றும் அவருக்கு ஆதரவளித்தவர்களின் கட்சி பதவிகளை, பழனிசாமி பறித்துள்ளார். இது, அ.தி.மு.க.,வில் மட்டுமல்லாது, தமிழக அரசியலிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், காலை கோவை வந்த செங்கோட்டையன், டில்லி கிளம்பிச் சென்றார். ''மனம் சரியில்லாததால், ஹரித்துவாரில் உள்ள ராமர் கோவிலுக்கு செல்கிறேன். பா.ஜ., தலைவர்கள் யாரையும் சந்திக்க செல்லவில்லை,'' என நிருபர்களிடம் கூறினார். ஆனால் நேற்று இரவு அவர் டில்லியில் மத்திய உள்துறை அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் டில்லியில் இருந்து கோவை திரும்பிய செங்கோட்டையன் விமான நிலையத்தில் அளித்த பேட்டி: நேற்றைய தினம் ஹரித்வார் செல்வதாக கூறிவிட்டு சென்றேன். டில்லி சென்ற உடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அனுமதி கிடைத்தது. உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் இருவரையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அரசியல் சூழல் பற்றி கருத்துகள் பரிமாறப்பட்டன. எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, கட்சி வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கருத்துகளை எடுத்துச் சொன்னோம். ஆகவே கருத்துகள் அடிப்படையில் பல்வேறு விவாதங்கள் இன்று நடக்கிறது. அரசியலில் இருப்பவர்கள் அவரவருக்கு ஏற்ப தங்களின் விருப்பங்களை தெரிவிக்கும் நோக்கத்தில் ஒவ்வொருக்கும் இருக்கும் ஜனநாயக உரிமை அடிப்படையில் அவர்களின் கருத்துகளை வெளிப்படுத்துவது வரவேற்கத்தக்கது.அமித்ஷாவை சந்திக்கும்போது ரயில்வே அமைச்சர் வந்தார். அவரிடம், ' ஈரோட்டில் இருந்து கிளம்பும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் முன்கூட்டியே செல்வதால் மாணவர்கள், வியாபாரிகள் செல்வது கடினமாக உள்ளது. அதிகாலை 3 சென்னை சென்றடைகிறது. அதனை மாற்றினால் உதவியாக இருக்கும் என்று சொன்னேன். அதனை குறிப்பிட்டு தாருங்கள் பரிசீலனை செய்வதாக கூறினார். மக்கள் பணி செய்வதற்கும், கட்சி வலிமை பெறுவதற்கும் உங்களின் ஒத்துழைப்பு முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

தாமரை மலர்கிறது
செப் 09, 2025 21:02

விரைவில் அதிமுகவின் தலைவராக செங்கோட்டையன் வருவார். அதிமுகவை பலப்படுத்துவார்.


Dr.Arun
செப் 09, 2025 20:09

மனஅமைதிக்காக ராமரை தரிசிப்பதற்காக ஹரித்வார் செல்வதாக கூறி சென்றார். ஆனால் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிவிட்டார். ஏன் பொய் கூற வேண்டும்? சிறு பிள்ளைகளிடம் காக்கா தூக்கிட்டுப் போயிருச்சு என்று சொல்லி ஏமாற்றுவது போல இவர் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டார். ஹரித்வார் சென்று இவர் ராமரை தரிசிக்கவில்லை. டெல்லியில் அமித்ஷாவையே சந்தித்துள்ளார்.இவருக்கு அமித்ஷாவைவிட ராமர் பலம் மிக்க கடவுளாகத் தெரியவில்லை. ஆனால் ஒன்று, இதன் மூலம் இவர் மக்களிடம் தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டதே உண்மை.


Haja Kuthubdeen
செப் 09, 2025 19:10

கூட்டணியில் இருந்து கொண்டே பிஜெபி குழிபறிப்பதாக தெரியுது...


திகழ்ஓவியன்
செப் 09, 2025 19:08

இங்கே என்னடா என்றால் அன்னமலை DMK மீது மக்களுக்கு வெறுப்பு இல்லை என்கிறார்... என்ன உங்க கணக்கு? எல்லாம் கணக்கா இருக்கே


Paul Durai Singh. S
செப் 09, 2025 18:56

அதிமுக வலிமை பெற எடப்பாடியை அல்லவா சந்திக்க வேண்டும்.. அமித்ஷாவை சந்திப்பது ஏன் ?


Modisha
செப் 09, 2025 18:49

அடுத்து வைகை எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்ற எடப்பாடி நாளை அமிட்ஷாவை சந்திக்கிறார்


GUNA SEKARAN
செப் 09, 2025 18:38

அருமை


Haja Kuthubdeen
செப் 09, 2025 18:20

இதெல்லாமே அமித்ஷா வேலை!!!??


எதிர்தமில்
செப் 09, 2025 17:54

சிறந்த அரசியல்வாதி.நல்லகல்வி‌ அமைச்சராக செயல்பட்டு நாமக்கல் கல்வி கூடங்கள் பப்ளிசிட்டி முலம் கல்வி வியாபாரமயமாவதை தடுத்தார். தமிழக பள்ளிகளின் கல்வி தரத்தை சிபி எஸ் இ நிகராக உயர்த்தி‌ நீட் ஐஐடி‌தேர்வுகளில் தேறி‌ மாணவர்களை‌உயர்கல்விக்கு அனுப்பியவர்...கண்ணியமான விசுவாசமான‌ அரசியல்வாதி‌ .இவர்‌முதலமைச்சர் ஆனால்தமிழகம் வளரும்‌உயரும்..எடப்பிடியை சுடாலினை தூக்கி எறியும் நேரம் வந்துவிட்டது


V Venkatachalam
செப் 09, 2025 17:47

செங்கோட்டையனுக்கு உண்மையா என்ன வேணும்? என்ன வேணும்ங்கிறதை யார் முன் மொழிந்தார்கள்? முன் மொழிந்தவர்களின் நோக்கம் என்ன? இந்த மனுஷன் திருட்டு தீயமுக வலையில் விழுந்துட்டாரோன்னு சந்தேகமா இருக்கு. இப்போது இருக்கும் நிலையில் திருட்டு தீயமுக வை அடியோடு அழிக்கணும். மத்த குத்து சண்டை குழாயடி சண்டைகுடுமிபுடி சண்டையெல்லாம் அப்பறம் வச்சிக்கலாமே. இந்த மனுஷனுக்கு தேச பக்தி இருக்கான்னு வேற சந்தேகம் வருது? முதலில் தீயமுக வை அடியோடு தகனம் செய்ய பாருங்க. உங்களுக்கு புண்ணியமா போகும். போனவுங்களை ஒண்ணு சேர்க்குறேன் பேர்வழி ன்னு தேவி ஜக்கம்மா சசிகலாவை சேர்த்துட போறார். புள்ள பூச்சியை மடியில் கட்டிக்கொண்ட கதையாகிடும்.


Sivakumar
செப் 09, 2025 18:50

திமுக வலையில் விழுந்தவர் அமித்ஷா வ போயி எதுக்காக பாக்கப்போகணும் ? செங்கோட்டையன் அவர் கட்சியின் உண்மையான ஓனரை பார்க்கப் போயிருக்கிறார். கொஞ்சம் நிதானம் தேவை அன்பரே.


முக்கிய வீடியோ