உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்; சென்னையில் மருந்து ஆய்வாளர் வீட்டில் ரெய்டு

இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்; சென்னையில் மருந்து ஆய்வாளர் வீட்டில் ரெய்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வட இந்தியாவில் இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சென்னையில் மருந்து நிறுவன உரிமையாளர் மற்றும் மருந்து ஆய்வாளர் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், கடந்த மாதம் 15ம் தேதி முதல் 1 - 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதேபோல, ராஜஸ்தானிலும் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற அந்த குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fac81zr9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, நடத்தப்பட்ட சோதனையில், குழந்தைகள் குடித்த, 'கோல்ட்ரிப்' இருமல் மருந்தில், நச்சுத் தன்மை ஏற்படுத்தும், 'டை எத்திலின் கிளைகால்' என்ற ரசாயனம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.தமிழகத்தின் காஞ்சிபுரத்தில், கோல்ட்ரிப் மருந்தை தயாரித்த, 'ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. அதன் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டார். 'ஸ்ரீசன்' நிறுவனத்தின் முறையற்ற செயல்பாடுகளில், தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம், சரியாக கவனம் செலுத்தாததே காரணம் என்பது தற்போது அம்பலமாகிஉள்ளது.இந்த நிலையில், இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள அரசு அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோடம்பாக்கம் நாகார்ஜூனா 2வது தெருவில் உள்ள மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் அபார்ட்மென்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, காஞ்சிபுரத்தில் இவர் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் முறையாக சோதனை நடத்தாததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மருந்து ஆய்வாளர் தீபா ஜோசப் வீட்டிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறது.அதேவேளையில், அண்ணா நகரில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இணை இயக்குநர் கார்த்திகேயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு உள்ளது. ஏற்கனவே, ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக, கார்த்திகேயன் வீட்டில் கடந்த ஜூலை 22ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Easwar Kamal
அக் 13, 2025 16:30

இவன்தெலுங்கானாக இருந்தால் தப்பித்து கொள்வான். தமிழனாக இருந்தால் சுடலையே கூண்டில் ஏற்றி விடுவார்.


Ravi Kumar
அக் 13, 2025 14:35

தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு துறை இயக்குனர் கைது,லஞ்சம் இந்தியா பார்மசி கவுன்சில் டெல்லி , தலைவர் படேல் கைது லஞ்சம் ,மருந்து ஆய்வாளர் கைது லஞ்சம்,தமிழ் நாடு பார்மசி கவுன்சில் தேர்தல் முறைகேடு , நீதிமன்ற வழக்கு , உட்சி முதல் பாதாம் வரை ஊழல் , எந்த மருந்து கடைகளிலும் சட்டப்படி மருந்து ஆளுநர் இருப்பது இல்லை .நிர்கவிப்பதுமில்லை. ஆல் வைட் கொள்ளார் கிரிம் . ALL WHITE COLOUR CRIME. தொழில் செய்பவர் தப்பு செய்தல் ,போவான் போவான் ஐயோனு போவான் ..மகாகவி பாரதியார் ..


Svs Yaadum oore
அக் 13, 2025 14:29

மருந்து ஆய்வாளர் தீபா ஜோசப் வீட்டிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறதாம் ....விடியல் திராவிட சமூக நீதி மத சார்பின்மையாக இந்த சோதனை நடக்க வேண்டும் ...விடியல் திராவிடனுங்க சமூக நீதியை எப்போதும் கை விட மாட்டார்கள் ...


MARUTHU PANDIAR
அக் 13, 2025 12:46

மத்திய சுகாதார த்துறை போட்டுடைத்ததை தினமலர் போட்டுடைத்தது தான் அங்கே..அதாங்க ... அங்கே ஆத்திரம் பத்திக்கிட்டு வருது.


xyzabc
அக் 13, 2025 12:37

இந்த ஆளை கைது செயுங்கள்.


ஆரூர் ரங்
அக் 13, 2025 12:19

அம்மருந்தை உட்கொண்டும் உயிர்பிழைத்திருக்கும் குழந்தைகளின் சிறுநீரகங்கள் கூட பாதிக்கப்பட்டிருக்கலாம். . எல்லோருக்கும் உடல் சோதனை செய்யப்பட வேண்டும்.


Rathna
அக் 13, 2025 12:07

இவனுக அப்பாவி குழந்தைகளின் பிணத்தின் மீது மாடி வீடு கட்டுகிறான். கொள்ளை அடிக்கிறார்கள்.


mdg mdg
அக் 13, 2025 11:59

22 உயிர்களை கொலை செய்ததற்கு முக்கியமான காரணம் இவர்களும்.இவருடைய சொத்துக்கள் முழுவதும் பறிமுதல் செய்ய வேண்டும். கொலை குற்றம் பதிவு செய்ய வேண்டும்.


Kulandai kannan
அக் 13, 2025 11:01

இழி பிறவிகள்


ராமகிருஷ்ணன்
அக் 13, 2025 10:35

மருந்து ஆய்வாளர்கள் என்றால் வேலை செய்யாமல் இருந்து பல நூறு கோடிகளை சுருட்டி முழுங்கி விடுபவர்கள் என்று அர்த்தம். எல்லா மருந்து விற்பனை செய்பவர்கள், தயாரிப்பாளர்களிடம் மாதாந்திர கப்பம் வசுல் செய்பவர்கள். அரசு சோதனை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது


முக்கிய வீடியோ