உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காற்றழுத்த தாழ்வு எதிரொலி; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

காற்றழுத்த தாழ்வு எதிரொலி; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.அரபிக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. ரத்னகிரி- டபோலி இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று முற்பகல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z6qg69kc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மற்றும் பாம்பன் துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

நவீன விடியும் முடியும் மாடல்
மே 24, 2025 23:00

என்னது...மறுபடியும் முதல்லேருந்தா. வெறும் தூறலுக்கே சென்னை தத்தளிக்கும்... 4000 ஆயிரம் கோடி இல் 95% மட்டுமே முடிந்துள்ளது...கொஞ்சம் பொறு மழையே...


Nada Rajan
மே 24, 2025 16:42

மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்


சமீபத்திய செய்தி