உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டில்லி உஷ்ஷ்ஷ்..! மம்தாவால் சமாளிக்க முடியுமா?

டில்லி உஷ்ஷ்ஷ்..! மம்தாவால் சமாளிக்க முடியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரிக்கு, விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் தங்கள் இஷ்டத்திற்கு இலவச அறிவிப்புகளை அள்ளி வீசி வருகின்றன. எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும்; மாநில நிதி நிலையைப் பற்றி யாருமே கவலைப்பட்டதாக தெரியவில்லை.இதில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை சமர்ப்பித்து விட்டார்; அதில், ஏகப்பட்ட இலவச சலுகைகள். 'லாட்லி பெஜனா' என்ற திட்டம் வாயிலாக, மகளிருக்கு அதிக பணம் தரப் போகிறார். இத்திட்டத்தை, முதலில் மத்திய பிரதேசத்தில், 2023 ல் பா.ஜ., அமல்படுத்தி மகளிர் ஓட்டுகளை அள்ளி வெற்றி பெற்றது. அதையே தன் மாநிலத்திலும் செய்துள்ளார் மம்தா. இத்தோடு நிற்கவில்லை. வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கும் திட்டம், அங்கன்வாடி பணியாளர்களுக்கும், அவர்களுடைய உதவியாளர்களுக்கும் சம்பள உயர்வு, மாநில அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத பஞ்சப்படி உயர்வு என, இப்படி அள்ளி வீசியுள்ளார் மம்தா.மேற்கு வங்க அரசின் கடன், 8 லட்சம் கோடி ரூபாய். அது மேலு ம் உயர்ந்தபடியே போகிறது. அரசின் 40,000 கோடி ரூபாய், 'லக் ஷ்மிர் பண்டார்' என்ற திட்டத்திற்கு செல்கிறது. இந்த திட்டத்தின் மூலம் மகளிரின் உதவித்தொகை, 500 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இன்னொரு, 40,000 கோடி இலவச வீடு கட்டும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 'இதையெல்லாம் மேற்கு வங்க அரசு தாங்குமா?' என, அரசியல் வட்டாரங்களில் கேள்வி எழுப்பினாலும், அதைப் பற்றியெல்லாம் மம்தா கவலைப்படவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது மட்டுமே அவரது குறிக் கோள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Barakat Ali
பிப் 08, 2026 20:53

மேர்குவங்கத்திலிருந்து நண்பர் தெரிவித்த தகவல் ....... அங்கே பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டவில்லை .....


Nagarajan D
பிப் 08, 2026 18:38

எல்லாம் பதவி படுத்தும் பாடு


V.Mohan
பிப் 08, 2026 15:07

ஹூம் இந்திய வாக்காளப் பொதுஜனங்களை இலவசம் மற்றும் பணத்தின் வாடை காட்டி, அவர்கள் ஆசையுடன், தங்கள் சொல்படி கேட்க வைத்த திறமை படைத்தவர்கள்மதச்சார்பற்ற கூட்டணி என்று தம்மை சொல்லிக் கொள்ளும் அரசியல் கட்சிக்காரர்கள் தான். அவர்கள் இதனை தெலுங்கானாவில் மற்றும் கர்நாடகாவில் செயல்படுத்தி காட்டியுள்ளனர். லோக்சபா 2024 தேர்தலில் கிட்டத்தட்ட வெற்றி பெறும் நிலைக்கு இந்த கூட்டணி சென்றது.


SUBBU,MADURAI
பிப் 08, 2026 11:54

முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வந்துவிட்டால் அவர்கள் தங்களில் ஒருவரைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அப்போது இந்த தலைவர்கள் எல்லாம் முஸ்லீம்களுக்கு காஃபிர்களாக மாறி விடுவார்கள். இஸ்லாமியர்கள் தங்களை வலுப்படுத்திக் கொண்டு அதன் பிறகுதான் அவர்களின் வேலையை காட்டுவார்கள் என்பது அவர்களின் வரலாறை படித்தவர்களுக்கு இது புரியும்


Rathna
பிப் 08, 2026 11:16

பங்களாதேஷிகளை பாதுகாக்க உச்ச நீதிமன்றத்தில் போட்ட ட்ராமா மறக்க முடியாது. மிரட்டலும், அராஜகமும், பங்களாதேஷிகளை நாட்டின் உள்ளே கொண்டு வருவதும் அடக்கப்பட வேண்டும்.


veeramani
பிப் 08, 2026 09:58

மேற்கு வங்காளம் உறுபடவேண்டுமானால் மம்தாவை தூக்கியெறியவேண்டும் அங்கு கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது.. பெண்கள், குழந்தைகள் தொழில்சாலைகள் பாதுகாப்பு இல்லை


N.Balasubramanian
பிப் 08, 2026 09:48

Do not worry about this free gift. Mamtha C.M will impose tariff like Trump to build west bengal


SUBBU,MADURAI
பிப் 08, 2026 09:14

ராகுல் காந்தி, ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே, சரத் பவார், லாலு குடும்பம், மம்தா பானர்ஜி, போன்ற அரசியல்வாதிகள் தங்களை மதச்சார்பற்ற தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்கள் சிறுபான்மை முஸ்லிம்களால்தான் நாம் தேர்தலில் வெற்றி பெறுகிறோம் என நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல என்பது அவர்களுக்கு இப்போது தெரியாது அவர்கள் சிறுபான்மையாக இருக்கும் வரைதான் நாங்கள் மதச்சார்பற்ற தலைவர்கள் என்று தங்களை கூறிக் கொள்ளும் மேலே சொன்ன அரசியல்வாதிகளுக்கு ஓட்டளிப்பார்கள்.


Manian
பிப் 08, 2026 09:43

if they just cross 50%, others will be regarded as Kafirs and Quran orders them to harass and kill Kafirs.


அருண் பிரகாஷ் மதுரை
பிப் 08, 2026 08:56

அடுத்த தேர்தலுக்கு இந்தம்மா இருக்கப் போவது சந்தேகம்தான்.. சாகும்வரை முதல்வராக இருக்கும் ஆசையில் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்.. SIR பணி முறையாக நடந்தால் இவர் வெற்றி பெற வாய்ப்பே இல்லை..தெளிவாக சிந்திக்கும் மக்கள் இவருக்கு ஓட்டளிக்க மாட்டார்கள்..


SRIRAMA ANU
பிப் 08, 2026 08:31

பிகார் தேர்தலில் நீங்கள் செய்த பித்தலாட்டத்தை இப்போது இவர்களும் செய்கிறார்கள்? நாட்டை மிகவும் கீழ்த்தரமான நிலைக்கு கொண்டு செல்வது பிஜேபி தான் எப்போதும் வழிகாட்டி..


Against traitors
பிப் 08, 2026 09:14

1 ரூபாய்க்கு 3 படி அரசின்னு 1967லே ஆரம்பிச்சது யாரு? பக்கத்து வீட்டுக்காரனா?


Thravisham
பிப் 08, 2026 09:21

எப்படியாவது... கவலை வேணாம்