உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காணிக்கையை பறிப்பது சர்வாதிகாரம்: ராம ரவிக்குமார்

காணிக்கையை பறிப்பது சர்வாதிகாரம்: ராம ரவிக்குமார்

சென்னை : அர்ச்சகர்கள் தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கையை உண்டியலில் செலுத்த உத்தரவிட்டுள்ளதற்கு, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:மதுரை நேதாஜி சாலையில் தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், அர்ச்சகர்கள் தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கையை உண்டியலில் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இப்பணியை கோவில் மணியம் மற்றும் காவலர் கவனிக்க வேண்டும். உண்டியலில் பணத்தை செலுத்தாத அர்ச்சகர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, கோவில் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.இது ஒரு சர்வாதிகார செயல். அர்ச்சகர்கள் வயிற்றில் அடிக்கும் வன்செயல். இதே நிலை நீடித்தால், உண்டியலில் காசு போட மாட்டோம் என்ற போராட்டத்தை துவங்க வேண்டிய சூழல் உருவாகும். தட்டில் போடப்படும் காணிக்கையை தட்டிப் பறிப்பது தரங்கெட்ட செயல்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
பிப் 10, 2025 08:48

பூசாரிகளுக்கு அவர்கள் சம்பளம் வாங்கும் நிலையில் தட்சணை அளிப்பது என்பது கணக்கில் காட்டாத கள்ள பணத்திற்கு ஊக்குவிப்பதாகும். நாட்டில் எத்தனையோ அக்கிரமங்கள் நடக்கும் நிலையில் அவற்றிற்கெல்லாம் போராட முன் வராதவர்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தச் செய்யும் சட்டத்திற்கு உட்பட்ட செயலை எதிர்த்து குரல் கொடுக்கின்றனர் மத வெறியர்கள்.


முக்கிய வீடியோ