உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரட்டை சமூக வலைதளத்தில் தினமலர் சேனல் ஆரம்பம்!

அரட்டை சமூக வலைதளத்தில் தினமலர் சேனல் ஆரம்பம்!

சென்னை: தினமலர் நாளிதழ் சார்பில் சுதேசி சமூக வலைத்தளமான அரட்டையில் புதிய சேனல் தொடங்கப்பட்டுள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்புவின் ஸோகோ நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளம் அரட்டை.வாட்ஸாப், பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களின் அம்சங்களை கொண்டுள்ள அரட்டை, கடந்த 2021ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.சுதேசி தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும் என்று மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக, அரட்டை தளத்தின் பயனர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் இருந்த புதிய பயனர் சேர்க்கை எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக தினமும் மூன்றரை லட்சம் பேர் என்ற எண்ணிக்கையை எட்டிவிட்டது.மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வரும் அரட்டை சமூக வலைதளத்தில் தினமலர் சார்பில் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இதில் தினமும் முக்கிய செய்திகள், எக்ஸ்க்ளூசிவ் செய்திகள், படங்கள் வெளியிடப்படும்.சுதேசி சமூக வலைத்தளமான அரட்டை மொபைல் செயலியில் செய்திகளை வழங்கும் முதல் நாளிதழ் தினமலர். நாளிதழ்கள் மட்டுமின்றி, வார இதழ்கள், தொலைக்காட்சி ஊடக நிறுவனங்களிலும் முதலாவதாக, தினமலர் நாளிதழ் இந்தப் பணியை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.தினமலர் அரட்டை சேனல் லிங்க்:இங்கே கிளிக் செய்யவும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

RAMESH KUMAR R V
செப் 30, 2025 17:24

சுதேசி அரட்டை பயன்படுத்தவும்


Vasakar
செப் 30, 2025 15:59

முதலில் ஷேர் லிங்கில் அரட்டையை சேர்க்கவும்


MARUTHU PANDIAR
செப் 30, 2025 15:45

1 அதே போல முதலில் GPAY யிலிருந்து BHIM செயலிக்கு மாறுவது இந்த நாட்டுக்குச் செய்யும் மாபெரும் சேவையாகும். உள்ளீடுகள் முடிந்த வெறும் மூன்றரை வினாடிக்குள் பரிவர்த்தனை முடிந்து விடுகிறது. 2 கூகுள் பிளே ஸ்டோரை ஏறக்கட்டி விட்டு நமது சொந்த இண்டஸ் ஆப் ஸ்டோரைINDUS APP STORE டவுன் லோட் செய்தல் நம்மை ஓரளவுக்கு அந்நியன் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ளும் ஒரு தொடக்கமாக அமையும். . நடைமுறையில் உள்ள எல்லா ஆப்களையும் சூப்பராக பதிவிறக்க முடிகிறது. தினமலர் போன்ற ஒரு பொறுப்புள்ள இதழ் மூலம் தான் இதை எவ்வாறு எல்லாம் முடியுமோ அவ்வாறெல்லாம் கொண்டு சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். நேரம் கடந்து கொண்டிருக்கிறது.


nontha muthiyavan
செப் 30, 2025 15:05

Arattai on iphone - when?


nontha muthiyavan
செப் 30, 2025 15:02

When this Arattai app. download will be available on iphone


பெரிய குத்தூசி
செப் 30, 2025 12:44

I would like to suggest that Apartment Association presidents and office work group manager to consider creating a Owners/residents and work official group Arattai Messenger group in parallel. I have found that Arattai combines the useful features of both WhatsApp and Telegram. You may announce to the current Owners, Residents and collegues WhatsApp group that we plan to form this new Owners group on ZOHO Arattai, India’s indigenous messenger app, as a initiative. To make it participative, we can hold a WhatsApp poll to see if most owners support this idea. If everything goes smoothly, you could gradually transition and decommission the current WhatsApp Owners and Residents group after six months or one year. The larger perspective here is important. American-made social media platforms are often controlled by external interests and have historically been used to spread messages against governments, destabilize neighboring countries, and even overthrow elected administrations. Reports suggest that the US has interfered in nearly 96 countries, including Sri Lanka, Bangladesh, and Nepal. According to intelligence inputs, there are ongoing attempts to incite unrest in India with similar intentions. In this context, it becomes our immediate duty as Indians to support and promote Arattai Chat Messenger so that we rely on a secure, indigenous platform. I strongly believe that, as Indian community, we can lead this positive change and inspire others to join this effort.


R. SUKUMAR CHEZHIAN
செப் 30, 2025 12:39

அன்னிய சமுக வலைதல ஆப் களை தவிர்போம், நம் தேசதில் கலவரத்தை தூண்ட இந்த அன்னிய வலைதலங்களை சதி ஊர் அறிந்தது, நம் மீது அதிக வரி போட்டு நம் பொருளாதாரத்தை நசுக்க நினைக்கும் டீப் ஸ்டேட் கும்பல்களை புறக்கணிப்போம். நாட்டு பற்று கொண்ட தினமலர் தமிழர்கள் விரும்பும் நாளேடு மற்ற பத்திரிக்கைகளுக்கு முன்னோடியாக உள்ளது பாராட்டுக்கள் தினமலர்.


பெரிய குத்தூசி
செப் 30, 2025 10:57

இந்தியாவின் உடனடி தேவை, அரட்டை மெஸ்சேன்ஜர் போன்று இந்திய இளைஞர்களை கவரும் வகையில் இன்ஸ்டாகிராம், FACEBOOK, X ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை வடிவமைத்து இந்தியர்களுக்கு இலவசமாக வழங்கவேண்டும். அடுத்த வருடம் 2026 இறுதிக்குள் டீப் ஸ்டேட் கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்கா சமூக வலைத்தளங்களை இந்தியர்கள் அனைவரும் தவிர்க்க வேண்டும். அமெரிக்கா டீப் ஸ்டேட் அரசு வாட்ஸாப்ப், இன்ஸ்டாகிராம், FACEBOOK , X ட்விட்டர் சமூக வலைதனைகளை பயன்படுத்தி இந்திய இளைஞர்களை மூளை சலவை செய்து இந்திய அரசுக்கு எதிராக வழி நடத்தி இந்தியாவில் கலவரத்தை தூண்டி இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்க திட்டம் தீட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராம், FACEBOOK , X ட்விட்டர் பயன்படுத்தி, இலங்கை, பங்களாதேஷ், நேபாள் மற்றும் 100 நாடுகளுக்கு மேல் அமெரிக்கா டீப் ஸ்டேட் அரசு கலவரத்தை தூண்டி அந்நாடுகளை துண்டாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.


MARUTHU PANDIAR
செப் 30, 2025 09:29

இப்படியே "சும்மாவா கிடைத்தது சுதந்திரம்" போல நாட்டின் வரலாற்றை இன்றைய இளைஞர்கள் சிறுவர்கள் மனதில் பதிய வைக்க பலப்பல இருக்கிறது. தங்களின் ஈடற்ற ஆனால் நாட்டுக்கு உடனே தேவைப்படும் இந்த பணியை தயவு கூர்ந்து சிந்தித்து விரிவு படுத்தவும். அந்நியன் கட்டுப்பாடு எதிலும் இல்லாத அளவுக்கு இருக்கிறது இன்று.


thulasiraman h
செப் 30, 2025 09:20

வாழ்த்துக்கள்


சமீபத்திய செய்தி