உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்களுக்கு துரோகம் செய்யும் தி.மு.க., அரசு: இபிஎஸ்

மக்களுக்கு துரோகம் செய்யும் தி.மு.க., அரசு: இபிஎஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உடுமலை: ''மக்களுக்கு துரோகம் செய்யும் தி.மு.க., ஆட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்,'' என அ.தி.மு.க., பொதுச் செயலர் இபிஎஸ் பேசினார். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டு அவர் மேலும் பேசியதாவது: 'இண்டி' கூட்டணி நாட்டுக்கு நல்லது செய்யும் என கூறும் ஸ்டாலின், கேரளாவிலுள்ள கம்யூ., அரசுடன் பேச்சு நடத்தி, ஆனைமலையாறு-நல்லாறு அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையென்றால், விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். அ.தி.மு.க., ஆட்சியில் குடிமராமத்து திட்டம் கொண்டு வந்து, 6,௦௦௦ பொதுப்பணித்துறை, 26,௦௦௦ உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான குளம், குட்டைகள் துார்வாரப்பட்டு, மழை நீர் சேமிக்கப்பட்டது. மறு புறம் விவசாயிகளுக்கு வண்டல் மண் இலவசமாக வழங்கப்பட்டு, விளை நிலங்களும் வளமாகின. இத்திட்டத்தையும் தி.மு.க., அரசு முடக்கியது. அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், குளம் குட்டைகள் மற்றும் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்படும். தமிழகத்தில் மின் கட்டணம் 67 சதவீதமும், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் 100 சதவீதமும் உயர்ந்துள்ளன. அ.தி.மு.க., ஆட்சி அமைத்ததும், மூன்று ஆண்டாக மூடப்பட்டுள்ள அமராவதி சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்கவும், விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு பழனிசாமி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

சத்யநாராயணன்
செப் 12, 2025 15:29

கட்டிய மனைவிக்கு கூட துரோகம் செய்யும் திமுகவின் கேடுகெட்ட பரம்பரை துரோகமும் செய்துவிட்டு மேடையில் அதையே கௌரவமாக பேசியும் கொள்வார்கள் இவர்கள் நாட்டு மக்களுக்கு துரோகத்தை தவிர வேறு எதை செய்து விட முடியும்


Guna Gkrv
செப் 12, 2025 13:44

திரு பழனிச்சாமி அவர்களே, நீங்க ஆட்சியில் இருந்தபோது என்ன கிழித்தீர்கள் என்று சொல்லுங்கள் பிறகு அடுத்தவர்களைப்பற்றி பேச உங்களுக்கு அருகதை இருக்கா என்று பார்ப்போம், சாம்மந்தி கூட கூட்டு வைத்து பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்தீர்கள் இப்ப அது முடியாமல் போக யாரையாவது பொய் காரணம் சொல்லி வம்பு பண்ணுகிறீர்கள் முதலில் நீங்க என்ன பண்ணுவது என்று மக்களுக்கு சொல்லுங்கள் பிறர் செய்வதை தப்பு சொல்லாதீர்கள்,நீங்க இருக்கும் போது என்ன செய்தீர்கள் மக்களுக்கு அத சொல்லுங்கள் இப்போ என்ன செய்யப்போகிறோம் என்று சொல்லுங்கள் அதை விட்டு தி மு க அதபன்னல இதபன்னல என்று புகார் அளிக்க வேண்டாம்.


Barakat Ali
செப் 12, 2025 13:02

தெரிஞ்சு போச்சா? டீம்கா மக்களுக்கு துரோகம் செய்யிது ன்னு உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா??


சாமானியன்
செப் 12, 2025 11:44

அரசியல் வியாதிகளே! இதுவரை நீங்கள் செய்த தவறுகளை மன்னிக்கிறோம். இனிமேல் அதபற்றி பேசமாட்டோம். தேர்தல் வாக்குறுதிகளை அரசியல் சட்டங்கட்கு உட்பட்டு தயாரியுங்கள். எந்த இலவசமும் வேண்டாம். தமிழகத்தின் கடன்தொகை குறைக்கனும். ஓட்டிற்கு பணம் தரக்கூடாது. வேலை வாய்ப்பினை பெருக்கவும் நடவடிக்கை. இயற்கை பேரிடர் நிதிக்கு மக்கள் நேரடி வரி. அரசாங்கம் ஒயின் ஷாப் நடத்தக்கூடாது. கட்சிக்காரனை வைத்து ஊழல் செய்யக்கூடாது. தாலிக்கு தங்கம் கட்சி சார்பில் தரனும். அரசியல்வாதிகள் மருத்துவச்செலவு கட்சிதான் ஏற்கனும். அரசாங்க செலவை ஒரு வருடத்திற்குள் ஆடிட் செய்யனும். விலைவாசியை ஏத்தி விட்டுட்டு ஒன் டிரில்லியன் எகனாமி என்று பேசினால் சிரிப்புத்தான் வருது.


Raja k
செப் 12, 2025 10:42

எத்தனை வருசம் தமிழகத்தை நீங்களும், உங்க கட்சியும் ஆட்சி செய்தீர்கள், ஆனைமலையாறு -நல்லாறு திட்டத்தை கட்டி முடித்து இருக்க வேண்டியதுதானே, நீங்க ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் சும்மா இருந்துவிட்டு, டிராமா போட்டுவிட்டு, இப்போ நீலி கண்ணீர் வடிப்பது எப்படி? உங்க அம்மா ஜெ, பொள்ளாச்சி கூட்டத்தில் கள் இறக்க அனுமதிக்கபடும்னு சொன்னாங்க, வெற்றி பெற்று வந்தபிறகு உங்கம்மாவும் அனுமதி தரல, நீங்களும் அனுமதி தரல, இப்போ மறுபடியும் ஆட்சிக்கு வந்தவுடன் கள் இறக்குவது தொடர்பாக நல்ல செய்தி சொல்லுரேனு டிராமா போடுறீங்க, நாலாம்தர அரசியல் வியாதி நீங்கள்


GMM
செப் 12, 2025 06:59

அண்ணா திமுக கூட்டணி ஆட்சி என்று கூற வேண்டும். முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என்று தற்போதுள்ள நிலையில் அறிவிப்பு கூடாது. முதலில் எடப்பாடி கூட்டணிக்கு துரோகம் செய்ய கூடாது. இரு முறை திமுக கூட்டணி வெற்றிக்கு உதவியது எடப்பாடி முடிவு.


Kadaparai Mani
செப் 12, 2025 07:42

EPS getting rousing reception and crowds are increasing day by day. Aiadmk cadres are very enthusiastic and they are more united to achieve victory thanks to one side jalra media and traitors. Aiadmk will form independent government. Obviously Aiadmk alliance partner bjp can take leader of opposition post. 210 mark Aiadmk alliance will sweep and the alliance includes surprise new additions which are confidential at this juncture.


pmsamy
செப் 12, 2025 06:34

ஜெயலலிதா அம்மா எப்படி மக்களிடையே பேசுவார்கள் என்பதை பார்த்தாவது அடிப்படை அரசியலை தெரிந்து கொள்ள வேண்டும்


pakalavan
செப் 12, 2025 06:26

3 வருசமா தினம் தினம் அண்ணாமலை போட்டோவ போட்டு போட்டு ஏதாவதொரு் செய்தி வரும், அண்ணாமலை போனியாகலை, இப்ப எடப்பாடி போட்டோ தினம் வருது, எடப்பாடியும் தோல்விதான்


தியாகு
செப் 12, 2025 06:25

ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் இந்த எட்டப்பரை நம்பி டெல்லி பாஜக அண்ணாமலை என்ற மகத்தான தலைவரை இழந்துவிட்டது. விளங்கிடும் தமிழக பாஜகவின் எதிர்காலம்.


Sun
செப் 12, 2025 09:48

ஆமாம் அண்ணாமலை மட்டும் தலைவராக இருந்திருந்தால் 234 தொகுதியிலும் பா.ஜ தான். எதிர் வரிசையில ஆளே இல்லாம வெறும் சேர் மட்டும்தான் இருந்திருக்கும்.


Rajah
செப் 12, 2025 09:58

தங்கள் கருத்து உண்மைதான்.


திகழ்ஓவியன்
செப் 12, 2025 12:51

அண்ணாமலையே இப்போ DMKவுக்கு தூது விட்டு கொண்டு இருக்கிறாராம் அவ்வளவு காண்டு


மோகன சுந்தரம்
செப் 12, 2025 13:02

எந்த அயோக்கியன் ஏதாவது செய்து கொண்டு போகட்டும் அண்ணாமலையை நீக்கி பிஜேபிஐ நோட்டாவுக்கு கீழ் கொண்டு சென்ற பாதகர்கள் ஒழியட்டும். இனி அந்த கட்சி தேர்வது மிக மிக கடினம்.


தியாகு
செப் 12, 2025 06:23

ஹி...ஹி...ஹி...சசிகலா மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம், ஆனால் சசிகலாவுக்கு இவர் செய்தது துரோகமா இல்லையா? ஹி...ஹி...ஹி... அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை