உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காமராஜரை இழிவாக பேசிய எம்.பி., சிவாவால் தி.மு.க.,வுக்கு..நெருக்கடி!.

காமராஜரை இழிவாக பேசிய எம்.பி., சிவாவால் தி.மு.க.,வுக்கு..நெருக்கடி!.

சென்னை : காமராஜரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய தி.மு.க., - எம்.பி., சிவாவால், அக்கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், தி.மு.க.,வுக்கு எதிராக கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.சென்னை பெரம்பூரில் நடந்த தி.மு.க., பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் துணை பொதுச்செயலர் சிவா, 'காமராஜருக்கு 'ஏசி' இல்லையெனில், உடம்பில் அலர்ஜி வந்து விடும். அதற்காக, அவர் தங்கும் அனைத்து பயணியர் விடுதிகளிலும், 'ஏசி' வசதி ஏற்படுத்த உத்தரவிட்டவர் கருணாநிதி. 'காமராஜர் உயிர் பிரியும் முன், கருணாநிதியின் கையை பிடித்துக் கொண்டு, 'நீங்கள் தான் இந்த நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்' என பேசினார்.

கண்டனம்

இது, தமிழகம் முழுதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், சிவாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி, 'தி.மு.க., பரப்பிய கட்டுக் கதைகளாலேயே தேர்தல் களத்தில் காமராஜர் வீழ்த்தப்பட்டார். இதற்கு சரியான பதிலடி கொடுக்காவிட்டால், காமராஜரின் ஆன்மா நம்மை மன்னிக்காது' என்று கொந்தளித்துள்ளார்.அதை தொடர்ந்து, நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்ட சிவா, தன் பேச்சுக்கு ஒரு வார்த்தை கூட வருத்தம் தெரிவிக்காமல், 'காமராஜர் மீது மிகுந்த மரியாதையும், பெரும் மதிப்பும் கொண்டவன் நான். எனவே, நான் பேசியதை விவாத பொருளாக்கிட வேண்டாம்' என்று கூறியுள்ளார்.இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கலகமூட்டி குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்கள். காமராஜர் மறைந்த போது, ஒரு மகன் போல நின்று, இறுதி மரியாதை ஏற்பாடுகளை செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கருணாநிதி. 'உடல் நலிவுற்ற நிலையிலும், என் திருமணத்துக்கு நேரில் வந்து, காமராஜர் வாழ்த்தியது, என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும் பேறு. அத்தகைய காமராஜர் குறித்து பொது வெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல' என்று கூறியுள்ளார்.இந்த சர்ச்சைக்கு காரணமான சிவாவின் பேச்சு குறித்து எதுவும் கூறாமல், அவரை கண்டிக்காமல், 'தீயவர்களின் எண்ணத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம்' என ஸ்டாலின் கூறியிருப்பதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: கருணாநிதியின் கையை பிடித்துக் கொண்டு, காமராஜர் புகழ்ந்தார் என்பது பச்சை பொய். காமராஜர் குறித்து சர்ச்சையான விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றால், அந்த சர்ச்சையை ஆரம்பித்தது, தி.மு.க.,வின் சிவா தானே? அதை வைத்து, சமூக ஊடகங்கள் முழுக்க காமராஜர் குறித்த அவதுாறுகளை அள்ளி வீசிக் கொண்டிருப்பது, உங்கள் தி.மு.க., கொத்தடிமைகள் தானே? காமராஜர் மீது பன்னெடுங்காலமாக கருணாநிதி வகையறா கொண்டிருந்த வன்மத்தை, இப்படி ஒரு சர்ச்சை உருவாக்கி, அதன் வாயிலாக காமராஜர் புகழை மழுங்கடிக்கத் துடிக்கும் அற்ப அரசியலை தி.மு.க., செய்கிறது. இவரே வெடிகுண்டு வைப்பாராம்; இவரே அதை எடுப்பது போல நடிப்பாராம். முதல்வர் ஸ்டாலின் இனியும் நடிக்க வேண்டாம். நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: காமராஜர் எந்த காலத்திலும், ஆட்சியாளர்களிடம் எதையும் கேட்டதில்லை. மரத்தடியில் கட்டிலை போட்டு படுத்து உறங்கியவர். அவர் பெயருக்கு களங்கம் விளைவிக்க பார்க்கின்றனர். பா.ம.க., தலைவர் அன்புமணி: காமராஜர் குறித்து தான் பேசியது தவறு என்றோ, அதற்காக மன்னிப்போ சிவா தெரிவிக்கவில்லை. தி.மு.க., தலைமையும் அவரை கண்டிக்கவில்லை. காமராஜர் குறித்து இழிவாக பேசியதற்காக, சிவாவை தி.மு.க., தலைமை கண்டிக்க வேண்டும். அவரது செயலுக்காக, தி.மு.க., தலைமை மன்னிப்பு கேட்க வேண்டும்.அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: காமராஜர் குறித்த அநாகரிகமான பேச்சுக்கு வருத்தமோ, மன்னிப்போ கேட்காமல், விவாதப் பொருளாக்காமல் கடந்து செல்ல வேண்டும் என சிவா வெளியிட்டுள்ள அறிக்கை, தி.மு.க.,வினரின் அதிகாரப் போக்கையே வெளிப்படுத்துகிறது. காமராஜரை இழிவுபடுத்திய சிவா, தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.முன்னாள் கவர்னர் தமிழிசை: காமராஜர் சேர்த்து வைத்த சொத்துக்களை, தேடி தேடி அனுபவித்து கொண்டிருக்கும் காங்கிரஸ், அவர் மீதான பழிச் சொற்களை சரியாக எதிர்க்கவில்லை. நாட்டுக்கு உழைத்த ஒரு தலைவரை நிந்தனை செய்யும் தி.மு.க.,வுடன், ஓட்டுக்காக ஒட்டிக் கொண்டிருக்கும் காங்கிரசின் மென்மையான எதிர்ப்பு நிலை கண்டிக்கத்தக்கது. * தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி: தான் ஒரு மூன்றாம் தர பேச்சாளர் என்பதை சிவா நிரூபித்து விட்டார். தி.மு.க., துணை பொதுச்செயலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சிவா மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையென்றால், தி.மு.க., - காங்., கூட்டணி பலவீனமாகி விடும்.* தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: சிவா, மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியை புகழ்வதாக நினைத்து, காமராஜரை கொச்சைப்படுத்தி அவதுாறாக பேசியதோடு, வரலாற்று திரிபை செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காமராஜரை எதிர்த்து, இந்திரா உடன், கருணாநிதி தலைமையிலான தி.மு.க., கூட்டணி வைத்தது. காங்கிரஸ் கட்சியே, காமராஜர் மீது தீரா காழ்ப்புணர்ச்சியில் உள்ளது. அதனால் தான், காமராஜரை தி.மு.க., கொச்சைப்படுத்தும் போதெல்லாம், பெயருக்கு கூட கண்டனம் தெரிவிக்காமல், உள்ளூர ரசித்தபடியே தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் தொடர்கிறது. காமராஜரை கொச்சைப்படுத்தி பேசியதை, ஒரு போதும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.பெருந்ததலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், த.மா.கா., பொதுச்செயலர் ஜி.ஆர்.வெங்கடேஷ், தமிழக காங்கிரஸ் ஆராய்ச்சி துறை தலைவர் மாணிக்கவாசகம் உள்ளிட்டோரும், சிவா மன்னிப்பு கேட்க வலியுறுத்தியுள்ளனர்.

சிவா எம்.பி., வீட்டை

முற்றுகையிட முயற்சி சிவா எம்.பி., மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, திருச்சியில் அவரது வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை, போலீசார் கைது செய்தனர். தமிழக காங்., பொதுச்செயலர் சரவணன் தலைமையில், நேற்று காலை திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே இருந்து, 50க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று, ஆபீசர்ஸ் காலனியில் உள்ள சிவாவின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். அங்கே பாதுகாப்புக்கு இருந்த போலீசார், காங்கிரசாரை தடுத்து நிறுத்தி, கைது செய்தனர். அப்போது, சிவாவுக்கு எதிராகவும், அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது குறித்து பொதுச்செயலர் சரவணன் கூறுகையில், ''பொன்முடி அநாகரிகமாக பேசியதற்கு நடவடிக்கை எடுத்த தி.மு.க., தலைமை, சிவா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 70 )

Minimole P C
ஜூலை 19, 2025 23:03

Siva is the mouthpiece of Stalin. Otherwise, he wont get the guts to talk like this. Even for a slape with chappal that too at a lady in a common place like airport, he didnt react. Any how why Stalin/DMK doesnt like Kamarajar is very simple. Now and then people talk about Kamarajars honesty. Suppose they start compare with KK, then DMK has to go home. So, fabricate bad Stories on Kamarajar, and the keep the image of KK superior. DMK is definitely an evil force.


Nellai Baskar
ஜூலை 18, 2025 23:49

அவர் என்ன பேசினாலும் அவர் தான் அடுத்த முறையும் பதவி வகிப்பார். திமுக வின் பொய் பிரச்சாரத்தை நம்பி காமராஜரையே தேர்தலில் தோல்வி பெறச் செய்த அறிவார்ந்த தமிழர்கள் வாழும் புண்ணிய பூமி இது.


K V Ramadoss
ஜூலை 19, 2025 16:03

மடையர்கள் பூமி .....


kumar
ஜூலை 18, 2025 21:52

நெருக்கடியாவது வெங்காயமாவது ? மண்ணாங்கட்டி திமுகவின் தலைமை பேச்சாளர்களில் ஒருவரான சிவாவின் பேச்சால் ஒன்றும் நடக்காது . காமராஜரை எப்போதோ மறந்த காங்கிரஸாரில் சிலர் திடீரென்று அர்ர்ப்பாட்டம், மறியல் என்று சீன போடலாம் . அதிமுக பாஜாக என்று காட்சிகள் கண்டனம் எழுப்பலாம் . ஆனால் எழுபது ஆண்டுகளாக பெருந்தலைவரை கேவலமாக விமரிசித்து வந்த திமுகவுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்ட காங்கிரசுக்கு இப்போது ரோஷம் வந்து விட்டதாக சொல்வது வெறும் நடிப்பு. அப்படிப்பட்ட திமுகவை ஆடசியில் அமரவைத்த மக்களுக்கும் ரோஷம் வரக்கூடாது . சிவாவின் இந்த பேச்சு திமுகவின் வழக்கமான மடை மாற்று வேலை தான். சமீபத்தில் அரசுக்கு பாதகமான காவல் கொலைகள் , தாழ்த்த பட்ட மக்களின் குடிநீரில் மீண்டும் அசுத்தம் கலக்கப்பட்டது, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, ஓழுங்கற்ற ஊழல் மலிந்த நிர்வாகம் , இவையே பேசு பொருளாக கடந்த சில வாரங்கள் இருந்திருக்கின்றன. இவைகளை மக்கள் மனதிலிருந்தும் ஊடகங்களின் கவனத்திலிருந்தும் திசை திருப்பவே இந்த காட்சி . கடந்த நான்கு நாட்களாக மேற்காண்ண்ட அவலங்கள் எல்லாம் மறக்க, மறைக்க பட்டிவிட்டதை தெரிந்து கொள்ளவேண்டும் . மணல் கொள்ளை விஷயம், யார் அந்த சார் , புகார் கொடுத்த பெண்ணை நாடு ரோடில் திமுக கோடி பரந்த காரில் மிரட்டியவரிகளுக்கு என்ன ஆயிற்று போன்ற பல கேள்விகள் வரிசையாக மறக்க பட்டு மக்களை அடுத்த பரபரப்புக்கு ஊடங்கள் கொண்டு செல்வதை இந்த அரசு நன்றாக பயன்படுத்தி கொள்கிறது . சிவாவும் , திமுகவும் பெருந்தலைவரின் நடத்தைக்கு சான்று அளிக்கவேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை .


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 18, 2025 20:32

செய்தியை இரண்டு நாட்களாக அலசி ஆய்ந்து பகிர்ந்து படித்து கருத்து எழுதி படித்து பகிர்ந்து எல்லாம் செய்த அன்பர்களே, அஜீத் கொலையையும் நிகிதா அன்னையையும் மறந்தீர்களா இல்லையா என்பதை பதிவு செய்யவும்


K V Ramadoss
ஜூலை 19, 2025 16:05

அவற்றை மறக்கடிக்கசெய்யத்தானே இந்த புது ரகளை..


SRIDHAAR.R
ஜூலை 18, 2025 19:02

மக்கள் தூங்கும் வரை யார் என்ன பேசினாலும் எடுபடும்


venugopal s
ஜூலை 18, 2025 18:16

இன்று காமராஜருக்கு வக்காலத்து வாங்கும் சங்கிகள் தான் காந்தியையும் நேருவையும் அவதூறு பேசுபவர்கள். நாளைக்கே தேர்தலில் ஓட்டு வாங்க காமராஜரையும் அவதூறாக பேச தயங்க மாட்டார்கள்!


பேசும் தமிழன்
ஜூலை 18, 2025 19:41

காமராஜர் மீது.... சங்கிகளுக்கு இருக்கும் பாசம்.... மரியாதை கூட... அவரின் பெயரை வைத்து பிழைப்பு நடத்தும் உங்களுக்கு இல்லாமல் போனது ஏனோ..... அந்தளவுக்கு மானம் கெட்டு போய் விட்டீர்களா ???


Vasan
ஜூலை 18, 2025 17:53

Where is Sasikala Puspa Madam?


Sridhar
ஜூலை 18, 2025 13:51

சிவா என்ன, இன்னைக்கு கான்கிரேஸ் கட்சியில இருக்கற ஒவ்வொருவனுமே காமராஜருக்கு எதிராத்தான் பேசுவான். அதுதான் 1976 லேயே கட்சிமாறி காமராஜருக்கு எதிரா போயிட்டானுகள்ல? அதுனாலதானே ஈவேராவை பெரியார் னும் கருணாவை கலைஞர்னும் அன்போட அழைக்கிறானுங்க? அரசியலுக்காக அவர் பெயரை உபயோகப்படுத்தறது வேற, உண்மையான மரியாதைங்கறது வேற இல்ல?


Karthik Madeshwaran
ஜூலை 18, 2025 12:05

இன்னும் நாலு நாட்கள் பேசுவார்கள், பிறகு வேறு புதிய செய்திக்கு போய்டுவார்கள். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. மக்களும் மறந்துடுவார்கள் அவ்வளவுதான். எதிர்க்கட்சிகள் வேண்டுமானால் நாடார் சமூக வாக்குகளை திசை திருப்ப இதை ஊதி பெரிதாக்குவார்கள். ஆனால் எப்போதும் நாடார் இனமக்கள் அதிமுக - பாஜக கூட்டணிக்கு ஆதரவு கொடுத்ததில்லை.


Svs Yaadum oore
ஜூலை 18, 2025 12:40

தொட்ட பெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா .... கில்லியாக நடிகன் கட்சிக்கு அப்படியே வோட்டு வந்து குவிந்துவிடும்


Karthik Madeshwaran
ஜூலை 18, 2025 12:01

நெருக்கடியும் இல்லை, புண்ணாக்கும் இல்லை. இன்னும் நாலு நாட்கள் பேசுவார்கள், பிறகு வேறு புதிய செய்திக்கு போய்டுவார்கள். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. மக்களும் மறந்துடுவார்கள் அவ்வளவுதான்.


vivek
ஜூலை 18, 2025 12:47

வாங்கிய இருநூறு ரூபாய்க்கு எப்படிதான் முட்டு குடுக்கணும் கார்த்திக்.... நடத்துங்க


Anantharaman Srinivasan
ஜூலை 18, 2025 16:37

நீ மறக்காமல் இதையே நினைத்து வருந்திக்கொண்டிரு.


பேசும் தமிழன்
ஜூலை 18, 2025 19:43

200 மட்டுமல்ல...குவாட்டர் மற்றும் ஓசி பிரியாணி...அதை விட்டு விட்டீர்களே ??


சமீபத்திய செய்தி