வாசகர்கள் கருத்துகள் ( 1 )
VENKATASUBRAMANIAN
பிப் 18, 2025 07:21
ஓட்டு போட்டவர்கள் வெட்கப்பட வேண்டும். இதுதான் திராவிட மாடல்.
செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்கு மேல்மா, மணிப்பூர் உள்ளிட்ட 11 கிராம விவசாயிகளிடம் இருந்து, 3174 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த முயற்சி நடக்கிறது.கையகப்படுத்த ஆதரவாக, செய்யாறு தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜோதி, ஆரணி தி.மு.க., - எம்.பி., தரணிவேந்தன் செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதை கண்டித்து, இளநீர் குன்றத்தில், விவசாயிகள் நேற்று முன்தினம் இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இருவரின் உருவப்படத்தையும் எரித்தனர். டி.எஸ்.பி., சண்முகவேலன் பேச்சுவார்த்தை நடத்தியதால் கலைந்தனர்.
ஓட்டு போட்டவர்கள் வெட்கப்பட வேண்டும். இதுதான் திராவிட மாடல்.