உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓராண்டில் ரூ.55 ஆயிரம் கோடிக்கு மின்சாரம் கொள்முதல்; ஒப்புதலை விட கூடுதலாக ரூ.13,179 கோடி செலவு

ஓராண்டில் ரூ.55 ஆயிரம் கோடிக்கு மின்சாரம் கொள்முதல்; ஒப்புதலை விட கூடுதலாக ரூ.13,179 கோடி செலவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய தொகுப்பு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து, 2023 - 24ல், 8,290 கோடி யூனிட் மின்சாரத்தை, தமிழக மின் வாரியம் வாங்கியுள்ளது.இதன் மதிப்பு, 55,754 கோடி ரூபாய். இந்த ஆண்டில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் உத்தேசமாக ஒப்புதல் பெற்றதைவிட, 13,179 கோடி ரூபாய்க்கு 917 கோடி யூனிட் கூடுதலாக வாங்கப்பட்டுள்ளது.

உத்தேச வருவாய்

தமிழக மின் தேவையை, மின்வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் வாயிலாக, பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால், மத்திய தொகுப்பு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டு, மின்சாரம் வாங்கப்படுகிறது.இதுதவிர, நெருக்கடியான காலங்களில், மின்சார சந்தையில் இருந்தும், குறுகிய கால மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.கடந்த, 2022 செப்டம்பரில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்காக, 2022 - 23 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு தனித்தனியே, உத்தேச வருவாய், செலவு போன்றவற்றை உள்ளடக்கிய மொத்த வருவாய் தேவை அறிக்கையை, மின்வாரியம் 2022ல், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்தது.அதில், 2023 - 24ல், 42,575 கோடி ரூபாய்க்கு, 7,373 கோடி யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அந்த ஆண்டின், 'ட்ரூ அப்' எனப்படும், வருவாய், செலவு தொடர்பாக, உண்மையில் மேற்கொள்ளப்பட்ட விபரங்கள் அடங்கிய அறிக்கையை ஆணையத்திடம் தாக்கல் செய்து, மின்வாரியம் ஒப்புதல் கேட்டுள்ளது.

சூரியசக்தி

இதை பரிசீலித்த ஆணையம், ஒப்புதல் அளிக்கப்பட்ட, 'ட்ரூ அப்' அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், 2023 - 24ல் மத்திய தொகுப்பு, தனியார் நிறுவனங்களிடம் இருந்து, 8,290 கோடி யூனிட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதாக, மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு, 55,754 கோடி ரூபாய். அதில் மின்சாரத்தை எடுத்து வந்த மின்வழித்தட செலவு, 7,624 கோடி ரூபாய்.அதாவது, 2023 - 24ல், 42,575 கோடி ரூபாய்க்கு, 7,373 கோடி யூனிட் வாங்கப்படும் என, உத்தேச அறிக்கையில் தெரிவித்திருந்ததைவிட, கூடுதலாக, 917 கோடி யூனிட் மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. இதனால், 13,179 கோடி ரூபாய் கூடுதல் செலவாகி உள்ளது. அந்த ஆண்டில், மத்திய தொகுப்பில் இருந்து, ஒரு யூனிட் மின்சாரம் சராசரி யாக, 4.93 ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.ஐ.பி.பி., எனப்படும் மின் வாரியத்திற்கு மட்டும், மின்சாரம் வழங்க ஒப்பந்தம் செய்துள்ள, தனியார் நிறுவனங்களிடம் இருந்து, யூனிட் சராசரியாக, 6.94 ரூபாய்க்கும்; சூரியசக்தி, காற்றாலையை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரம் யூனிட், 6.94 ரூபாய்க்கும் வாங்கப்பட்டுஉள்ளது.அதிகபட்சமாக, சர்க்கரை ஆலைகளில் உள்ள இணை மின் நிலையங்களில் யூனிட், 9.69 ரூபாய்க்கு வாங்கப்பட்டு உள்ளது. குறுகிய கால மின் கொள்முதலில் யூனிட், 9.56 ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. இவ்விபரங்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Sridhar
மே 02, 2025 14:26

வெறும் 917 கோடி யூனிட்டுக்கு 13,179 கோடி ரூபாய்னா ஒரு யூனிட்டுக்கு 14 ரூபா மேல வருதே இந்த கணக்குகளை எந்த ஆபீசர் தணிக்கை செய்வார்?


Ramalingam Shanmugam
மே 02, 2025 13:00

இலவச மின்சாரத்தை நிறுத்தி விட்டு சூரிய மின்சாரத்திற்கு subsidy கொடுங்கள்


Kumar Kumzi
மே 02, 2025 12:54

அப்போ அந்த மேலதிக 13 கோடி ஓவா கட்டிங் கமிஷனா


C G MAGESH
மே 02, 2025 12:47

சோலார் தகடுகள் அமைத்தால் போதும், நம்ம ஊர் வெயிலுக்கு கூடுதல் மின்சாரம் கிடைக்கும். ஆனால், சூரிய பகவான் கிட்ட இருந்து, கமிஷன் வாங்க முடியாதே.


Svs Yaadum oore
மே 02, 2025 12:15

தமிழ் நாட்டில் இனியும் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க வாய்ப்பு இல்லையாம் ...அப்ப எதுக்கு உப்பூர் மின் நிலையத்திற்கு இதுவரை 5,847 கோடி ரூபாய் செலவு செய்யனும்?? பத்து வருஷமாக வராத இந்த திட்டத்திற்கு பல ஆயிரம் கோடிகள் செலவு. எல்லாம் லஞ்சம் கொள்ளை ...இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு பணம் ??....


Venkataraman
மே 02, 2025 09:57

முதல்வருக்கு தெரியாமலா இந்த ஊழல் நடந்திருக்கும்? அதில் எல்லோருக்கும் பங்கு இருப்பதால் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். தேர்தல் நெருங்கி வருவதால் இன்னும் எங்கெல்லாம் சுருட்ட முடியும் அங்கெல்லாம் சுருட்டுவார்கள் தேர்தலுக்கு முன்பு எல்லோருக்கும் இலவச சாராயம், பிரியாணி, பணம் எல்லாம் கொடுக்க வேண்டாமா?


பாமரன்
மே 02, 2025 09:48

சல்லித்தனமா யாரையாவது விட்டு பீப்பி ஊதிங் செய்யாமல் தெளிவான செய்தியாக வெளியிட்ட மலருக்கு பாராட்டுக்கள்... இதில் மூன்று முக்கிய விஷயங்கள் கவனிக்கனும். முதலில் உத்தேச மதிப்பை விட அதிகமாக வாங்கியது தவறில்லை. பயன்பாடு அதிகரித்தது அதனால் வாங்கப்பட்டது. உபயோகிப்பாளர்களிடம் இருந்து வசூலும் செய்யப்பட்டது. இரண்டாவது கிட்டத்தட்ட பதிமூன்று சதவீதம் மின்வழித்தட செலவு மிக மிக அதிகம். மூன்றாவது தமிழ் நாட்டில் இனியும் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க வாய்ப்பு இல்லை எனும் போது ஏன் நீண்ட கால அடிப்படையில் பிபிஏ போடாமல் இவ்வளவு மதிப்பு அவசர மின்சாரம் வாங்கப்படுது?? இது சந்தேகத்தை வரவைக்குது. முக்கியமாக ஒலகமே புதுப்பிக்கத்தக்க எனர்ஜியை பயன்படுத்துது ஆனால் அதை கொள்ளை விலைக்கு வாங்குறது....?? அலோ அறப்போர் இயக்கம் காதுல விழுதா...???


sugumar s
மே 02, 2025 09:07

சும்மா இருங்கப்பா. எலெக்ஷனுக்கு குடுக்க பணம் வேணும் . இது மக்களுக்கு செய்யற சமூக சேவை


S Sivakumar
மே 02, 2025 08:51

மக்களின் ஆதங்கம் மாண்புமிகு தமிழக முதல்வர் காதுகளை எட்டுமா? நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.


Svs Yaadum oore
மே 02, 2025 08:45

தமிழக மின் வாரியத்தின் கடன் சுமார் 1.90 லட்சம் கோடி ரூபாய் வரை உள்ளது. கடந்த 2020-21ல் 1.45 லட்சம் கோடியாக இருந்த கடன், 2021-2024 க்குள் 1.90 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடன் சுமை காரணமாக, ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாய்க்கு மேல் வட்டியாக செலவிட வேண்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மின் வாரியம் வட்டிக்காக 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்துள்ளது. இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு பணம் ??.....


பாமரன்
மே 02, 2025 09:52

அதானே... கடன் வாங்கிட்டு வெளிநாட்டுக்கு ஓடியிருக்க வானாமா??