உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெள்ளை அறிக்கை வெளியீடு: ரூ.2.47 லட்சம் கோடி கடனில் மின் துறை

வெள்ளை அறிக்கை வெளியீடு: ரூ.2.47 லட்சம் கோடி கடனில் மின் துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மின்சாரத்துறையின் நிதி நிலைமை மற்றும் செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டார். அவர், ''கடந்த 25 வருடங்களாக மின்சாரத்துறை நஷ்டத்தில் இயங்கி வருகிறது'' என்றார்.வெள்ளை அறிக்கை விபரம் பின்வருமாறு;* 2001-2006: வருவாய் ரூ.59,084 கோடி, செலவு ரூ.67,439 கோடி, பற்றாக்குறை ரூ.8,355 கோடி.* 2006-2011: வருவாய் ரூ.92,737 கோடி, செலவு ரூ.1,28,200 கோடி, பற்றாக்குறை ரூ.35,463 கோடி.* 2011-2016: வருவாய் ரூ.1,92,971 கோடி, செலவு ரூ.2,49,332 கோடி, பற்றாக்குறை ரூ.56,361 கோடி.* 2016-2021: வருவாய் ரூ.3,20,140 கோடி, செலவு ரூ.3,78,674 கோடி, பற்றாக்குறை ரூ.58,534 கோடி.* 2021-2026: வருவாய் ரூ.4,97,996 கோடி, செலவு ரூ.5,32,443 கோடி, பற்றாக்குறை ரூ.34,447 கோடி

25 வருடங்களாக..

வெள்ளை அறிக்கை வெளியிட்டு அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: கடந்த 25 வருடங்களாக மின்சாரத்துறை நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 25 வருடங்களுக்கு முன்பு லாபம் இல்லை என்றால் நஷ்டம் இல்லாமல் இருந்தது. புதிய பணியிடங்கள் நிரப்பப்படவில்லை, திட்டங்கள் இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.87,399 கோடி கடன் வாங்கப்பட்டு உள்ளது. கூடுதல் வருவாய் வந்துள்ளது. அதேநேரத்தில் செலவினம் அதிகம் வந்துள்ளது. ஆனால் முன்னேற்ற திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. இது ஏன் என்று கேள்வி கேட்கிறோம். தமிழக மின்சாரத்துறைக்கு 1.40 லட்சம் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். 1.40 லட்சம் பணியாளர்களில் 74,714 லட்சம் பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 65,921 பேர் பற்றாக்குறையாக உள்ளனர். மின்சாரத்துறையில் 15 ஆயிரம் பேரை பணியில் அமர்த்த, அரை மணி நேரத்தில் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது விரைவில் நிறைவேற்றப்படும். இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.

ரூ.215 கோடி சேமிப்பு!

மேலும் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: மின் வாரியத்தில் குறுகிய கால கான்ட்ராக்ட் மூலம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுகிறது. அதை நீண்ட கால கான்ட்ராக்டாக மாற்றுவதன் மூலம் விலையை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மாதம் 215 கோடி ரூபாய் சேமிக்கப்படும்.கடந்த 2001ம் ஆண்டு 1.35 லட்சம் டிரான்ஸ்பார்மர்கள் இருந்தன. கடந்த திமுக ஆட்சியில் 99,573 டிரான்ஸ்பார்மர்கள் வாங்கப்பட்டன. தற்போது மொத்தம் 4,47,603 டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. 25 ஆண்டுகளாக பழைய டிரான்ஸ்பார்மர்கள் உள்ளதால் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 1.50 லட்சம் டிரான்ஸ்பார்மர்கள் வாங்க திட்டமிட்டள்ளோம்.

எந்த ஊழலும்...

தமிழக மின் வாரியத்தில் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவு இதுவரை இல்லை, விரைவில் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவு துவங்கப்படும். மின்சாரத் துறையில் முறைகேடு செய்யவே ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். பதவி உயர்வு வழங்காமல் பல பணியாளர்களை ஏமாற்றி உள்ளனர். தற்போது பணி நியமனத்தில் எவ்வித ஊழலும் இருக்காது. இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

மின் தேவை எப்படி?

தமிழகத்துக்கு அதிகபட்சமாக 21,300 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. தமிழக மின்வாரியம் மூலமாக 3,495 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 4,246 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. மத்திய தொகுப்பில் இருந்து 13,566 மெகாவாட் மின்சாரம் தமிழகம் வாங்குகிறது என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

கடன் எவ்வளவு?

தமிழக மின்சாரத்துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.2.47 லட்சம் கோடி கடன் இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!திமுக ஆட்சி முகத்திரையை கிழிக்கும் வெள்ளை அறிக்கை குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்புவீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

Nesan
ஜூன் 25, 2026 19:23

இந்த ராதாகிருஷ்ணன் மட்டும் எப்படி, எந்த ஆட்சி வந்தாலும் முக்கிய பொருப்பு கொடுக்கபடுகிறது. அந்தளவுக்கு நேர்மையாலாரா?.


Vasan
ஜூன் 25, 2026 21:02

ஆம், மிகவும் நேர்மையானவர், சிறப்பாக பணி புரிபவர், எந்த அரசியல் கட்சியையும் அரவணைத்து போகும் நடுநிலையாளர், அவரின் ஆற்றலை நான் கடந்த 6 வருடங்களாக பார்த்து வருகிறேன், அதாவது கொடிய கோவிட் தொற்று நோய் காலத்தில் இருந்து. இது வரை பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்பு வகித்துள்ளார், தமிழ்நாடு பெற்ற ஒரு நல்ல மனிதர்.


Nesan
ஜூன் 25, 2026 19:19

60 வருடங்களாக தி.திராவிடம் தமிழ் நாட்டை லன்சம், லாவனியத்தில் குட்டிசுவராக்கிவிடார்கள், உண்மை. நீங்கள் எப்படி தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல போறிங்க?. செயலில் மறுமலர்ச்சியை காட்டுங்கள்.


Tamilan
ஜூன் 25, 2026 19:10

மத்திய மதவாத குண்டர்கள் கேடிகளின் முகத்திரை என்ன என்று தெரியாதா?. வெளிநாட்டுக்கடன் 1000 லச்சம் கோடி, உள்நாட்டுக்கடன் 200 லச்சம் கோடி . 150 கோடி இந்தியர்கள் ஒவ்வொருவரின் தலையில் 10 லச்சத்திற்கு மேல் கடன் சுமை . போக வரி வட்டி கார்போரேட்டுக்களின் கொள்ளை என ஒவ்வொரு குடிமகனின் தலையில் 50 லச்சம் ருபாய் சூறையாடப்பட்டுள்ளது. திட்டமிட்டு சூறையாடப்பட்டுள்ளது . இந்துமத கடவுளர்களைப்போல் அவர்கள் போட்டிருப்பது மக்கள் காணிக்கையாக கொடுத்த தங்க கவசமா?


Govindarasu Krishnan
ஜூன் 25, 2026 19:03

தமிழ் நாட்டின் அனைத்து விதமான முறையிலும் மின்சார கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் நம்மிடம் மின்சாரத்தை கடன் வழங்கும் கர்நாடக ஆந்திரா விவசாயத்திற்க்கு இலவசமாக வழங்கப்படுகிறதே அது எப்படி சாத்தியம்? மின்சார துறையில் இருக்கும் ஒவ்வொரு அதிகாரிகள் மாதம் சம்பளம் 3 லட்சம் ரூபாய் வரை என்றால் 18,000×1,20,000=2,16,000 மாத சம்பளம். இதில் 10,000 ஆயிரம் கோடி ரூபாய் வரவு, 216 ஆயிரம் கோடி சம்பளமாக மட்டுமே செலவாகிறது. இந்த பணம் மாதம் பத்து இருபது ஆயிரம் சம்பாதிக்கும் ஏழைகளுக்கு பங்கு உண்டு. ஆனால் லட்சம் லட்சமாக சம்பளம் வாங்கும் அதிகாரிகளின் சம்பளத்தையும் அவர்கள் வாங்கும் கையூட்டு லஞ்சம்குறைத்தாலே மின்சார துறையில் லாபகரமாக இயங்கும்.


sankaranarayanan
ஜூன் 25, 2026 18:47

கருப்பும் சிகப்புமாக தங்களது கொடியின் நிறத்தை வைத்துக்கொண்டு இப்படி அடுத்தவர்கள் வெள்ளை அறிக்கையை விட்டு இவர்களது ஆட்சியையே நாசாமாக்கிவிட்டார்களே என்று ஆண்டவர்கள் புலம்புகிறார்கள் இவர்களது ஆட்சியின் ஒவ்வொரு துறையிலும் இனிஇப்படியே வெள்ளை அறிக்கை, வெள்ளை அறிக்கையென்று விட்டுக்கொண்டே போனால் எப்போதுதான் வேறு நிற அறிக்கை வெளியாகும் இதற்கு ஒரு முடிவே கிடையாதா? மக்களே புரிந்துகொள்ளுங்கள் நம்மை எப்படி எவ்வாறு இந்த திராவிட மாடல் அரசு இத்தனை காலம் ஆண்டது என்பதை இப்போது வந்துள்ள விஜய் அரசு தெள்ளத்தெளிவாக எடுத்து மக்களுக்கு தெரிவிக்கிறார்கள் இனி இவர்கள் அவைகளுக்கெல்லாம் விடை காண வேண்டும் ஆட்சியில் மாற்றம் வேண்டும் மக்களுக்கு முன்னேற்றம் வேண்டும்


veeramani
ஜூன் 25, 2026 18:38

தவேக ஆட்சியில் தமிழகம் தகதகவென மின்ன போகிறது . கடந்த 50 வருடங்களாக நடைபெற்ற புரட்டு ஆட்சியில் மின்துறை சீரழிந்துகிடக்கிறது. ஒரே நாளில் அல்லது வருடத்தில் சீர் செய்ய முடியாது . சூரிய மின்சாரம், காற்றாலை மின்சார உற்பத்திக்கு தானியரை ஊக்குவியுங்கள். மேலும் டெல்லியில் போல மின்கட்டணம் அட்வான்ஸ் ஆகா கட்டவும் மக்களை ஊக்குவிக்கலாம் . முதலில் மொபைல் போன் மூலம் மிசார மீட்டர்களை இணைக்க இயலுமா என முயலுக்குங்கள். பின்னர் மொபைல் மூலம் மின்கட்டணம் செலுத்து வது மிக எளிதானதாகும். தற்போது நவீன மின்மாற்றிகள் கிடைக்கின்றன. இனிமேல் தரமான பொருள்களை வாங்குங்கள். மின்சார வாரியத்தில் ஊழல் புரையோடியுள்ள்ளது. அலுவலர்களை வீட்டிற்கு அனுப்புங்கள். தமிழக மக்கள் உங்கள் ப க்கம்.


PATTALI
ஜூன் 25, 2026 18:22

திராவிட இயக்கத்தினர் அறிவியல் பூர்வமான ஊழல்வாதிகள். சனாதன முறைகளை மறுப்பார்கள், ஆனால் சனாதன முறைகளை கண்டுபிடித்து அதற்கு தகுந்தாற்போல் மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்பவர்கள், குழப்பம் செய்பவர்கள். அவற்றை நிரூபிக்க இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்படவேண்டும்


Seekayyes
ஜூன் 25, 2026 18:02

Minister sir, instead of relying on legacy power generation, why not Government explore solar power generation in massive scale, in the outskirts of each city, town and panchayats and distribute it. This will increase state power generation more than its current production, guess it is 3,750mw and reduce procurement from 3rd parties at exorbitant price. This may reduce recurring expenditure every month. But it may entail increased borrowing to meet the CAPEX. Alternatively Government can invite investments through public private equity participation or industry houses under BOT Model.


தத்வமசி
ஜூன் 25, 2026 17:56

இந்த அமவுண்ட் முன்பு சொன்ன பதிமூன்று லட்சம் கோடியில் சேருமா ? இல்லை இது வேறு அது வேறா ? தல சுத்துதே... கடவுளே...


Srinivasan Narasimhan
ஜூன் 25, 2026 17:51

இலவசம் குடுங்க


சமீபத்திய செய்தி