விரைவில் இமானுவேல் சேகரன் மணிமண்டபம்: உதயநிதி
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின், துணை முதல்வர் உதயநிதி கூறியதாவது: சமூக நீதிக்காக பாடுபட்ட இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம், சிலை அமைக்க ஏற்கனவே 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினோம். அதற்கான பணிகள் 95 சதவீதம் முடிந்து விட்டன. விரைவில் திறக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.