உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ‛‛கல்லுக்குள் ஈரம் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு

‛‛கல்லுக்குள் ஈரம் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு

சென்னை : 80களில் பிரபலமாக இருந்த நடிகை அருணாவின் சென்னை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.பாரதிராஜா இயக்கிய ‛கல்லுக்குள் ஈரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை அருணா. தொடர்ந்து ‛சிவப்பு மல்லி, நீதி பிழைத்தது, நாடோடி ராஜா, டார்லிங் டார்லிங் டார்லிங், முதல் மரியாதை, கரிமேடு கருவாயன்' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிய மொழிகளிலும் நடித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=71hknm4d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவரது கணவர் மோகன் குப்தா பிரபல தொழிலதிபர். வீடு, நிறுவனம் உள்ளிட்ட உள்கட்டமைப்புக்கான அலங்காரப் பணிகளை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சென்னை, நீலாங்கரையில் கணவர், பிள்ளைகளுடன் அருணா வசித்து வருகிறார்.இந்நிலையில் மோகன் நடத்தி வரும் நிறுவனத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கிடைத்த புகார் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் இவரது வீடு, அலுவலங்களில் காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மோகன், அருணா உள்ளிட்ட குடும்பத்தாரிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சோதனையின் நிறைவடைந்த பின்னர் ஏதேனும் ஆவணங்கள் சிக்கியதா உள்ளிட்ட விபரம் தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Mahendran Puru
ஜூலை 11, 2025 13:49

அடுத்த தேர்தலில் மத்தியில் ஆளும் கட்சிக்கு பணம் அதீதமாக தேவை. அதனால் எறும்பு சேர்ப்பது போல சேர்க்கிறார்கள்.


Perumal Pillai
ஜூலை 09, 2025 16:27

எல்லாமே ஒரு காமெடி தான்.


GMM
ஜூலை 09, 2025 15:08

அமலாக்க துறை அதிகாரிகள் நீதிமன்ற கட்டளை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். அரசியல் வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர் மீது ரெய்டு என்றால் நீதிமன்றம் கொதித்து எழும். செல்வாக்கு மிக்க வழக்கறிஞர் வாத, பிரதி வாத, ஜாமின், தீர்வு போன்றவை தயார் படுத்தி கொடுப்பதை ஈஸ்வரன் மகா தேவன் மேல் பாரத்தை போட்டு அமைதி வழியில் நீதி வழங்கும் நிலை. அரசுக்கு ஒன்றும் வழி தெரியவில்லை. மக்களுக்கு புரியாது.


Sridhar
ஜூலை 09, 2025 14:46

அமலாக்கத்துறை ரெய்டுனாலே சிரிப்புதான் வருது


Shekar
ஜூலை 09, 2025 13:46

அமலாக்கத்துறைக்கு சோதனையிட அதிகாரம் இல்லை. இப்படிக்கு நீதி மன்றங்கள்


MANIMARAN R
ஜூலை 09, 2025 13:40

கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது ஆனால் அங்கே ஒன்றும் கிடைப்பதில்லை இதுதான் உண்மை


Narayanan
ஜூலை 09, 2025 11:50

செந்தில் பாலாஜி வீட்டில் நடந்த ரைட்டுக்கே இன்றுவரை எந்த விதமான பயனும் இல்லை . போங்கப்பா அமலாக்கத்துறை சும்மா அங்கேயும் இங்கேயும் போய் வருகிறார்கள் . இதுவரை நடந்த எந்த ரைடில் தண் டனை வழங்கப்பட்டிருக்கிறது . நம்பிக்கை இழக்கிறோம் .


V Venkatachalam
ஜூலை 09, 2025 14:15

நாராயணன் ஜி, ரைடுன்னா தண்டனை அப்புடீன்னு நினைச்சு புட்டியளா? நம்ம புண்ணிய தேசத்துல கான்கிராஸ் ஆண்ட காலத்துல சுப்ரீம் கோர்ட் கைகளை உடைச்சு போட்டாக. அந்த கைகளை சரி பண்ணி பழையபடி இயங்க வைக்க சுப்ரீம் கோர்ட் சுப்ரீம் நீதிபதிகளே முயற்சி பண்ணாம குற்றவாளிகளுக்கு பயந்துக்குறாங்க. அதனால தண்டனை அப்புடீங்குற ஒரு வார்த்தை அகராதியிலேயே காணாப்பூடும் போல இருக்குங்கோ. வட கொரியா கிம் மாதிரி ஒருத்தர் வந்து அரசாங்கத்த கையில் எடுத்தால் மட்டுமே ரைடுன்னா தண்டனை ன்னு ஆயிடும். அதுவரை இப்புடித்தான்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை